மன்னார் மடு ஆலயம் மத நல்லிணக்கத்தின் அடையாளம் – அமெரிக்க தூதுவர்

மன்னார் ஆயர் மற்றும் பிடெலிஸ் பெர்னாண்டோ ஆகியோர் சமய நல்லிணக்கம் மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் மதத் தலைவர்கள் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜூலி சங் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில்,வரலாற்று சிறப்புமிக்க மடு மாதா ஆலயத்திற்கு சென்றேன். இந்த புனித இடத்திற்கு என்னை வரவேற்றதற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

மேலும் மன்னாரில் மதங்களுக்கிடையிலான ஒற்றுமையின் சக்தி வாய்ந்த சின்னம் என்று மடு மாதா ஆலயத்தை குறிப்பிட்டுள்ளார்.