மன்னார் மாவட்ட ரெலோ அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டிப்பு

முள்ளிவாய்கால் படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவு நாள் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் அனுஸ்டிக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் தமிழர் பகுதிகளிலும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முள்ளிவாய்கால் படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்திலும் நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.

ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளரும்,மன்னார் பிரதேச சபை உறுப்பினருமான லுஸ்ரின் மோகன் ராஜ் தலைமையில் இடம் பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள் ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் ஆகியோர் கலந்து கொண்டு முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து மாலை அணிவித்து சுடரேற்றி , மலர் துர்வி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.