முள்ளிவாய்க்கல் தமிழினப்படுகொலையின் 12ம் ஆண்டு நினைவேந்தல் ரெலோ யாழ்ப்பாணம் தலைமை செயலகத்தில் சுடரேற்றி அஞ்சலிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கல் தமிழினப்படுகொலையின் 12ம் ஆண்டு நினைவேந்தல் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ்ப்பாணம் தலைமை செயலகத்தில் சுடரேற்றி அஞ்சலிக்கப்பட்டது.

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா நடைமுறை சட்டங்களுக்கு அமைய மிக மட்டுப்படுத்தப்பட்ட உறுப்பினர்களுடன் நடைபெற்றது.

யாழ் மாவட்ட தலைவரும் வலி கிழக்கு தவிசாளருமானா நிரோஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இளைஞர் அணி தலைவர் சபா குகதாசன், யாழ் பிரதி தலைவரும் துணை மேயருமான ஈசன், யாழ் மாவட்ட இளைஞர் அணி தலைவரும் நல்லூர் பிரதேச சபை உப தவிசாளருமான ஜெயகரன், நல்லூர் மாவட்ட பொறுப்பாளரும் நல்லூர் பிரதேச சபை உறுப்பினருமான மதுசூதன் ஆகியோர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.