மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்கர்களைச் சந்தித்த சஜித் பிரேமதாச

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஞாயிற்றுக்கிழமை (25) கண்டியில், மல்வத்து மகா விகாரையின் மகாநாயக்க தேரர் திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், மல்வத்து பீடத்தின் அனுநாயக்க திம்புல் கும்புரே ஸ்ரீ விஜய தம்ம தேரர், அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் மற்றும் அஸ்கிரி பீடத்தின் பிரதான ஆவணக் காப்பாளர் மெதகம தம்மானந்த தேரர்களை சந்தித்து,நலன் விசாரித்து தனது எதிர்கால அரசியல் பயணத்திற்கு ஆசிகளைப் பெற்றுக் கொண்டார்.

இந்த வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டை மீட்பதே எமக்கு உள்ள ஒரே சவால்

ஐக்கிய மக்கள் சக்தி ஏனைய அரசியல் கட்சிகள் முன்வைக்கும் விடயங்களுக்கு பதிலளிக்காமல், நாட்டின் வங்குரோத்து நிலையுடன் இந்நாட்டில் பெண்கள் தலைமையிலான ஏனைய சமூகம் எதிர்நோக்கும் பாரதூரமான அவல நிலைக்கு பதில்களையும் தீர்வுகளையும் வழங்கவே செயற்படுகின்றது. பெண்களை பலர் மறந்துவிட்ட இந்த வேளையில், இன்று நேற்றல்ல 2019 ஆம் ஆண்டிலயே பெண்களுக்கான சாசனம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் நீட்சியே நேற்றைய நிகழ்வு என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்நேரத்தில் நாட்டின் மிகப்பெரிய சவாலாக இருப்பது வறுமையை ஒழித்து பொருளாதார அபிவிருத்தி விகிதத்தை அதிகரிப்பதும், தகவல் தொழில்நுட்ப கனவை எவ்வாறு நனவாக்குவது என்பதுமே ஆகும். அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பொருளாதார வளர்ச்சியை செயல்படுத்துவது சவாலானது. ஏனைய கட்சிகளின் சவால்கள் தமக்கு பாதகமாக அமையாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பெண்களுக்கு பக்க பலத்தை வழங்கும் முகமாக சமூக ஒப்பந்தம்

2019 ஜனாதிபதித் தேர்தலைப் போலவே, பெண்களை உள்ளடக்கிய சமூக ஒப்பந்தத்தை உருவாக்கும் ஆரம்ப நிகழ்வை கண்டியில் ஆரம்பித்தார். இங்கு பெண்களின் பொருளாதார, சமூக, அரசியல் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நமது நாட்டில் ஆண் இல்லாத 16 இலட்சம் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் இருப்பதாகவும், அவர்களுக்காக விசேட பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், வீட்டின் முக்கிய வருமானம் ஈட்டுபவர் என்பதுடன், இல்லத்தரசி தனது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு தீங்கு விளைவிக்காமல் வீட்டிலிருந்தவாறே ஒரு தொழிலிலும் ஈடுபடலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

திக்வெல்ல பத்தேகம பிரதேசத்தில் குறிப்பிட்ட பெண் ஒருவர் ஜேர்மனிக்கு தென்னை நாரினால் ஆன விரிப்புகளை ஏற்றுமதி செய்வது போன்று ஏனைய பெண்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்குவதன் மூலம் இந்த இலக்கை அடைய முடியும். பிரதேச செயலாளர் மற்றும் உப பிரதேச செயலாளர் எல்லைகளில் மகளிர் மேம்பாட்டு மையங்களை நிறுவி இந்நாட்டு பெண்களுக்கு கணினி பயிற்சி, தகவல் தொழில்நுட்பம், தொழில்முனைவு, சுயதொழில் அறிவு போன்றவற்றை வழங்க முடியும். இதன் மூலம் குடும்ப வருமானத்தை அதிகரிக்க முடியும் எனவும், அதற்கு பெரிய பொருளாதார கோட்பாடுகள் தேவையில்லை எனவும் எதிர்கட்சி தலைவர் சுட்டிக்காட்டினார்.

பாடசாலை மாணவர்களுக்கு கூடிய முன்னுரிமை

தற்போது பிள்ளைகள் மிகவும் ஆதரவற்ற நிலையில் இருப்பதால், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் முதல் பணியாக பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும். சரியான பாதுகாப்பு வழிமுறைகள் பொருத்தப்பட்ட ஒரு ஸ்மார்ட் சாதனம் வழங்கப்படும். இதனூடாக புதிய தகவல்கள் மற்றும் தரவுகளை அணுக முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

உலகளாவிய தொழிலாளர் சந்தைக்கு திறமையான தொழிலாளர்கள்

வீட்டு பணிப் பெண் துறையில் மட்டும் தங்கியிருக்காமல் அவர்களுக்கு பெண்களுக்கு பயிற்சி அளித்து, இதன் மூலம் திறமையான தொழிலாளர்களாக வெளிநாட்டு வேலைகளுக்கு அவர்களை வழிநடத்த முடியும். இந்தியாவைப் போன்று ஒரு தகவல் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்த முடியும் என்றும் அதன் மூலம் உலக சந்தைக்கு ஏற்ற பயிற்சி பெற்ற தொழிலாளர்களை அனுப்ப முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரபஞ்சமும் மற்றும் மூச்சும் மிகவும் வெற்றிகரமான செயற்திட்டங்களாகும்

இந்தத் திட்டங்களுக்கு மேலதிகமாக, பிரபஞ்சம் பேருந்துத் திட்டம், பிரகஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டம் மற்றும் மூச்சுத் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ் தம்புத்தேகம தேசிய பாடசாலைக்கு கூட பஸ் வழங்கப்பட்டன. திருகோணமலையில் ஜனாதிபதி கலந்து கொண்ட ஜம்போரிக்குக் கூட அந்தப் பாடசாலையின் பிள்ளைகள் குறித்த பேருந்துலயே சென்றதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டில் 99.999% ஆசிரியர்கள் பிள்ளைகளை நேசிக்கும் ஆசிரியர்களே,ஆனால் மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே அரசியல் நிலைப்பாடுகளை முன்வைத்து இந்த திட்டத்தை தோல்வியடையச் செய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். 76 வருட அரசியல் வரலாற்றில் அதிகாரம் இல்லாமல் இந்த மூன்று திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டது இதுவே முதற் தடவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

IMF ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வோம்

தற்போதைய மக்கள் ஆணையற்ற அரசாங்கம் மக்களுக்கு பாதகமான ஒப்பந்தமொன்றையே சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டியுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இது திருத்தப்படும். கூடிய சலுகையும் மிகக் குறைந்த அழுத்தமும் ஏற்படக் கூடிய வகையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டில் ஏறக்குறைய 40 சதவீதமான மக்கள் வறுமையில் வாடுகின்றனர், LIRNEasia கணக்கெடுப்பின்படி, ஏழ்மையடைந்தோர் எண்ணிக்கை 40 இலட்சம் அதிகரித்து 30 இலட்சத்தில் இருந்து 70 இலட்சமாக அதிரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது

இதனால், நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் மிகவும் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பரேட் சட்டத்தின் மூலம் அவர்களின் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டு வருகின்றன. வங்கி முறைமைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த நிலைமையும் கட்டுப்படுத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மக்கள் விரோத பிற்போக்குத்தனமான கூறுகள் அகற்றப்பட்டு மக்கள் சார்பான கருத்துக்கு கொண்டு வரப்பட்டு சாதகமாக திருத்தப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டுக்கு கொள்கையே முக்கியம்!

நாட்டிற்கு தனிமனிதர்களை விடுத்து, கொள்கைகள், வேலைத்திட்டங்கள், செயற்பாடுகள் என்பனவே முக்கியம்.ஐக்கிய மக்கள் சக்தியில் படித்த புத்திஜீவிகள் உள்ளனர். எனவே, இதைப் பற்றி மீண்டும் பேச வேண்டிய அவசியமில்லை, மக்கள் அதை நன்கு புரிந்து கொண்டுள்ளனர். 76 ஆண்டு கால வரலாற்றில் அதிகாரம் இல்லாமல் எந்த கட்சியும் செய்யாத சேவையை இந்த ஐக்கிய மக்கள் சக்தி செய்துள்ளது. நாட்டை வங்குரோத்தடையச் செய்தவர்கள் என்ன கூறினாலும் தமக்கு கவலையில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மேலும் சிலர் பல்வேறு தீர்க்கதரிசனங்களை கூறினாலும் அவர்களால் பாராளுமன்றத்தில் ஒரு இடத்தை கூட பெற முடியவில்லை. பேசுபவர் என்ன சொன்னாலும் கேட்பவர் புத்திசாலித்தனமாக கேட்க வேண்டும். சர்வஜன வாக்குரிமையால் அன்றி, நாட்டை வங்குரோத்தாக்கிய 134 பேரினால் தெரிவு செய்யப்பட்ட ஒரு ஜனாதிபதியே தற்போது இருக்கிறார். நாட்டின் சுகாதாரத்தை அழித்த கெஹலியவை பாதுகாக்க 113 பேர் முன்வந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

நுண்,சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் குறித்து முதலில் குரல் கொடுத்தது நாமே!

நுண்,சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோரை பாதித்துள்ள பரேட் சட்டம் தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளாக குரல் எழுப்பி வருகிறேன். இறுதியாக, தனது பேச்சுக்களைக் கேட்டு, அரசாங்கம் சரியானதைச் செய்ய முடிவு செய்துள்ளது, எனவே அவர் இதற்கு நன்றி தெரிவிக்கிறேன்.

அரசாங்கம் கூறியவாறு இது சரியாக நடைபெறுகிறதா என்பது குறித்து கவனம் செலுத்தி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பரேட் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து,தொழில் முயற்சிகளுக்கு வாய்ப்புகளை அரசாங்கம் ஏற்படுத்தி தர வேண்டும். இது நிறைவேறும் வரை இதற்காக முன்நிற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதன் பிரகாரம் 100 மில்லியன் கடன் உத்தரவாத வேலைத்திட்டம் மற்றும் கடனுதவி வழங்கப்பட்டது. இதனால் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.