மிலேச்சத் தனத்தின் உச்ச வடிவம் இனப்படுகொலையின் மறுவடிவம் – ரெலோ வன்மையாகக் கண்டிக்கிறோம்

மிலேச்சத் தனத்தின் உச்ச வடிவம்,இனப்படுகொலையின் மறுவடிவம்

மரணித்த மக்களை நினைவு கூரும் சின்னங்களை அழிக்கும் கொடுமை உலக நாகரீகத்தில் எங்கும் இல்லாத ஈனச் செயல்.

வெட்கப் படவேண்டியது. கண்டிக்கப்பட வேண்டியது.

முல்லைத்தீவில் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட, 2009 மே 18 இல் முடிவடைந்த இனவழிப்பு கொடிய யுத்தத்தில் உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழ் ஆத்மாக்களை வருடா வருடம் நினைவு கூர அமைக்கப் பட்ட நினைவுச் சின்னம் நேற்று 12 மே 2021 மானிடத்தை மதிக்காத மனித விலங்குகளால் சேதமாக்கப் பட்டுள்ளமையை தமிழ் ஈழ விடுதலை இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.