முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் 12 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு -யாழ் மாநகர சபையில்.!

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் 12 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்றையதினம் யாழ் மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது.

தற்போதய கோவிட்-19 சுகாதார விதி முறைகளுக்கு அமைவாக யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தலைமையில்,

இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெறௌறுள்ளது.

இதில் தமிழ் ஈழ விடுலை இயக்கத்தின் யாழ் மாவட்ட பிரதி தலைவரும் ,பிரதி முதல்வருமான து. ஈசன் உட்பட பல மாநகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் பின்னர் கருத்து தெரிவித்த முதல்வர் ..

உயிரிழந்த எமது உறவுகளுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்பது அவர்களது இழப்புக்கு நீதியை பெற்று கொடுப்பதாகும் என்று தெரிவித்தார்.

நீதி கிடைக்கும் வரை ஓயாது போராட நாம் உறுதி பூணுவோம் என்றும் தெரிவித்தார்.