ரெலோ கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்துக்கு அஞ்சலி

மனிதநேயம் மிக்க புரட்சிக்கலைஞர் கப்டன் விஜயகாந்த் அவர்கள் இலங்கைத் தமிழர்களின் நலன் விரும்பியும் இன விடுதலைக்கு போராடுகின்ற அனைத்து போராளிகள் இயக்கங்களோடும் நெருக்கமான உறவுகளை பேணியிருந்தாலும் ரெலோ இயக்கத்திற்கு முதன் முன்னணி நடிகர் நடிகைகளை வைத்து முதன் முதலில் (எழும்பூரில் 1984) நட்சத்திர கலைவிழாவை முன்னின்று நடத்தி நிதி திரட்டி வழங்கியிருந்தார்.

கப்டன் விஜயகாந்த் அவர்கள் தனது 100 வது திரைப்படத்தை “விடுதலைப்புலிகள்” என்ற பெயருடன் வெளியிடுவதற்க்காக பதாகைகள் பரவலாக வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தது.

அன்றைய காலத்தில் அனைத்து இயக்கங்களையும் விடுதலைப்புலிகள் என்றே அழைக்கப்பட்ட அந்த காலத்தில் ஈழப்போராளிகள் நலன் விரும்பி ஒருவரால் சில காட்சிகளை அத்திரைப்படத்தில் நீக்கக்கோரி நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டதால் அத்திரைப்படத்தின் கதாநாயகன் பெயரும் கதாபாத்திரத்தையும் இணைத்து கப்டன் பிரபாகரன் என்று அத்திரைப்படத்துக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கப்டன் அவர்களின் இழப்பு இலங்கைத்தமிழர்களுக்கு மட்டுமல்ல மனிதநேயத்தை நேசிக்கின்ற ஒட்டுமொத்த மக்களுக்கும் பேரிழப்பாகும்.
அந்தவகையில் கப்டன் அவர்களுக்கு 02.01.2024 அன்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் அஞ்சலி செய்து நினைவு கூரப்பட்டார்.