ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி யின் தாயார் அமரர் செபமாலை (பாக்கியம்) அவர்களின் இறுதி நல்லடக்க விபரம்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் அன்புத் தாயார் செபமாலை ( பாக்கியம் ) அவர்கள் இறைவனடி சேர்ந்துள்ளார்.

விடத்தல்தீவை பிறப்பிடமாகவும் ஜோசப்வாஸ் நகரை வதிவிடமாகவும் கொண்ட செபமாலை ( பாக்கியம் )அவர்கள் இன்றைய தினம் 5/2/2024 திங்கட்கிழமை ஜோசப்வாஸ் நகரில் இறைவனடி சேர்ந்துள்ளார்.

அன்னார் காலம்சென்ற அமிர்தநாதன் (ஆயுள் வேத வைத்தியர்) அவர்களின் அன்பு மனைவியும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ செல்வம் அடைக்கலநாதன், பற்றிக் மற்றும் டெமோன் ஆகியோரின் பாசமிகு தாயுமாவார்.

அன்னார் ராசம், சலோமை, லிகோனி, சின்னத்தம்பி மற்றும் காலம்சென்றவர்களான அன்னமேரி, செலஸ்ரின், கபிரியேல் ,மற்றும் சாமிநாதன் ஆகியோரின் சகோதரியுமாவார்.

அன்னாரது இறுதி நல்லடக்கமானது எதிர்வரும் புதன் கிழமை (7/2/20240) அன்று காலை 10 மணியளவில் தோட்டவெளி கிராமத்தில் உள்ள நற்கருணைநாதர் ஆலயத்தில் இரங்கல் பூஜைகள் நடைபெற்று பின்னர் விடத்தல்தீவு அடைக்கலமாதா ஆலயத்தில் வழிபாட்டுடன் விடத்தல்தீவு சேமக்காலையில் உடல் நல்லடக்கம் செய்யப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்

தாயை இழந்து துயருறும் உறவுகளின் துயரில் நாமும் பங்குகொள்ளுவதுடன் அன்னையின் ஆன்மா அமைதியில் இளைப்பாற இறைவனை பிராத்திக்கின்றோம்.