வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.வடக்கில் முப்படையினருக்கு காணி சுவீகரிப்பது தொடர்பில் பிரதேச செயலர்களுடன் ஆளுநர் தனது அலுவலகத்தில் கூட்டம் நடாத்தவிருந்த போது அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதனை அடுத்து ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெறவிருந்த கூட்டம் பிற்போடப்பட்டது.