வெருகல் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுட்டிப்பு

வெருகல் – ஈச்சிலம்பற்று பகுதி அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உலர் உணவுப்பொருட்களை சேருவில பகுதியில் இருந்து ஈச்சிலம்பற்று நோக்கி எடுத்து வரும்போது இடம்பெற்ற சேருவில படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 12 ஆம் திகதி ஈச்சிலம்பற்று பூநகர் பகுதியில் அமைக்கப்பட்ட நினைவேந்தல் மண்டபத்தில் மிகவும் உணவுபூர்வமான முறையில் அனுஷ்டிக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உலர் உணவுப்பொருட்களை 1986.06.12 அன்று சேருவில பகுதியில் இருந்து ஈச்சிலம்பற்று நோக்கி எடுத்து வரும்போது மகிந்தபுர பகுதியில் வைத்து மூன்று அரச அதிகாரிகள் உட்பட 21பேர் ஆயுததாரிகளினால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதில் மூன்று அரச அதிகாரிகள் உட்பட 21பேர் படுகொலை செய்யப்பட்டதோடு மூன்றுபேர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் உயிர் தப்பியிருந்தார்கள். படுகொலை செய்யப்பட்டவர்களில் இருவர் முஸ்லீம் சகோதரர்களாவர்.

இப்படுகொலைச் சம்பவத்தில் பின்வரும் நபர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்

1.தங்கராஜா – கிராம சேவகர் (பூமரத்தடிச்சேனை) – ஈச்சிலம்பற்று முகாம்)

2.அலிபுகான் – கிராம சேவகர் (தோப்பூர்) – பூமரத்தடிச்சேனை முகாம்

3.அயாசு முகம்மது அப்துல் லத்தீப் (பாலத்தோப்பூர்) – மீள்குடியேற்ற உத்தியோகத்தர் – பூநகர் முகாம்

4.கோணாமலை வேலாயுதம் – பூமரத்தடிச்சேனை

5.கதிர்காமத்தம்பி -விநாயகமூர்த்தி – பூமரத்தடிச்சேனை

6.தெய்வேந்திரம் நவரெட்ணம் பூமரத்தடிச்சேனை

7.தம்பிராசா நவரெட்ணம் பூநகர்

8.கனகசபை கனகசுந்தரம் – பூநகர்

9.கதிர்காமத்தம்பி செல்லத்தம்பி – பூநகர்

10.மூத்ததம்பி காசிப்பிள்ளை – பூநகர்

11.கதிர்காமத்தம்பி நாகராசா – பூநகர்

12.வீரபத்திரன் நடேசபிள்ளை – பூநகர்

13.முத்தையா காளிராசா – பூநகர்

14.முத்துக்குமார் வேலுப்பிள்ளை – பூநகர்

15.வேலுப்பிள்ளை சித்திரவேல் – விநாயகபுரம், ஈச்சிலம்பற்று

16.சித்திரவேல் சிவலிங்கம் – விநாயகபுரம், ஈச்சிலம்பற்று

17.வீரபத்திரன் சோமசுந்தரம் – விநாயகபுரம், ஈச்சிலம்பற்று

18.சித்திரவேல் தம்பாப்பிள்ளை – விநாயகபுரம், ஈச்சிலம்பற்று

19.நல்லையா பரமேஸ்வரன் இலங்கைத்துறை முகத்துவாரம்

20.தாமோதரம் தர்மலிங்கம் – ஈச்சிலம்பற்று

21.புண்ணியம் மதிவதனன் – பூமரத்தடிச்சேனை

அத்துடன் .வீரபத்திரன் சோமசுந்தரன், 2.வேலுப்பிள்ளை கிருஷ்ணபிள்ளை ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் தப்பியிருந்தார்கள்