வேலன் சுவாமிகள் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து பல்கலையில் போராட்டம்

வேலன் சுவாமிகள் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக நுழைவாயிலுக்கு முன்பாக கூடிய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனநாயக ரீதியான போராட்டங்களை தடுக்கும் வகையில் இடம்பெறும் கைதுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்த மாணவர்கள் தொடர்ச்சியாக தாங்கள் இதற்கெதிராக குரல் கொடுப்போம் என்றனர்.