வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க்கந்தன் இரதோற்சவம் சிறப்புற இடம்பெற்றது

வரலாற்றுச் சிறப்புமிக்க அலங்கார நல்லூர்கந்தனின் வருடாந்த மஹோற்சவத்தின் 24 ஆவது திருவிழாவின் இரதோற்சவம் இன்று (13) பக்திபூர்வமாக இடம்பெற்றன.

21.08.2023 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் மஹோற்சவம் எதிர்வரும் 25 நாட்கள் திருவிழா இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாற்று பெருமையும் ஆன்மீக சிறப்பும் கொண்ட நல்லையம்பதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் முருகப் பெருமானின் இரதோற்சவம் இன்று(13) நடைபெறுகின்றது.

நல்லூர் கந்தன், தேரேறி திரு வீதி வலம் வரும் அழகு காண்பதற்காய் இலட்சக்கணக்கான பக்தர்கள் திருத்தலத்தில் கூடியுள்ளனர்.

அதிகாலையிலே பூசைகள், அபிஷேகங்கள், வசந்த மண்டப பூசை ஆகியன காலக்கிரமமாக முருகப் பெருமானுக்கு நடைபெற்றன.

ஆலயத்தின் அசையா மணிகள் ஆறும் ஒருங்கே ஒலிக்க முருகப் பெருமன் தேரேறி வீதியுலா வருவதற்கு புறப்பட்டுள்ளார்.

பால் காவடிகள், பறவைக் காவடிகள், கற்பூர சட்டிகள், அங்கப்பிரதட்சணம் மற்றும் சிதறுதேங்காய் உடைத்து அடியார்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.

தமிழர்களின் தனித்துவத்தையும் கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களையும் உலக மக்களுக்கு உரத்துரைக்கும் ஒரு விழாவாகவே நல்லூர்க் கந்தன் ஆலய திருவிழா நோக்கப்படுகிறது.

அந்த வகையில் நல்லூர் கந்தனின் மகோற்சவ பெருவிழாவின் 24ஆம் திருவிழாவான இன்றைய தினம் தேர்த்திருவிழா இடம்பெறுகிறது.