நல்லூர் தொகுதிப் பொதுமக்களிடம் பிரதேச சபை உறுப்பினர் ரெலோ மதுசுதன் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது. குறிப்பாக கோண்டாவில், திருநெல்வேலி, பாற்பண்ணை, கொக்குவில் போன்ற பகுதிகளில் அதிகளவில் தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவித்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) மத்திய குழு உறுப்பினரும் நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினருமான கு.மதுசுதன் அரசு பொறுப்பற்ற வகையில் நாட்டை முடக்காமலிருந்தாலும் நீங்கள் பொறுப்பு வாய்ந்தவர்களாக உங்களினதும், உங்கள் அன்புக்குரியவர்களினதும் பெறுமதியான உயிர்களைப் பாதுகாக்கும் வகையில் அவசியமான விடயங்களுக்கு மாத்திரம் வீடுகளுக்கு வெளியே செல்லுங்கள் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் எத்தனையோ பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். எத்தனையோ பேர் கொரோனாத் தொற்றால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எத்தனையோ பேர் தனிமைப்படுத்தல் மையங்களில் குடும்பங்களைப் பிரிந்திருக்கின்றார்கள். எத்தனையோ பேர் தனிமைப்படுத்தல் மையங்களில் குடும்பங்களைப் பிரிந்திருக்கின்றார்கள்.

கொரோனாவால் குடும்பங்களைப் பிரிந்திருந்து இறந்தவர்களுக்கு கிரியைகள் செய்ய முடியாத நிலையில் பலரும் மனரீதியாகப் பாதிக்கப்படுவதுடன் ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலையில் பலரும் தவித்து வருகின்றார்கள்.

யுத்தக் காலப் பகுதியை விடக் கொடிய சூழலில் வாழுகின்ற உணர்வை கொரோனாப் பெருந் தொற்று தற்போது ஏற்படுத்தியுள்ளது. இந்த இடரை நாங்கள் வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு, முறியடிப்பதற்கு நாங்கள் அனைவரும் பொறுப்புள்ளவர்களாகச் செயற்பட வேண்டும் எனவும் அவர் வேண்டிக் கேட்டுக் கொண்டார்.

Posted in Uncategorized

மேலும் 170 கொரோனா மரணங்கள் உறுதி

170 கொரோனா மரணங்கள் நேற்று (17) உறுதி செய்யப்பட்டுள்ளன.

அதன்பிரகாரம், நாட்டில் இதுவரை 6,604 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 365,683 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 316,528 ஆக அதிகரித்துள்ளது.

புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியீடு – இன்று முதல் மூடப்படும் இடங்கள்!

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளன.

இது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31 வரை அமலில் இருக்கும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி,

* ஒருவர் மட்டுமே வீட்டை விட்டு வெளியேற முடியும். ஆனால் வேலைக்காக அல்லது சுகாதார வசதியை பெற்றுக் கொள்வதற்காக வெளியே செல்லும் போது இது பொருந்தாது.

* இன்று (18) முதல் வணிக வளாகங்கள் முழுமையாக மூடப்படும்.

* பல்பொருள் அங்காடியினுள் ஒரே நேரத்தில் அதன் மொத்த திறனில் 25 சதவீதமானவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

* பகல்நேர பராமரிப்பு மையங்கள் இரண்டு வாரங்களுக்கு மூடப்படும்.

* உடல் கட்டமைப்பு மையங்கள் மற்றும் உட்புற விளையாட்டரங்குகள் இன்று முதல் மூடப்படும்.

* சிறுவர் பூங்காக்கள், திருவிழாக்கள், இசை நிகழ்ச்சிகள், விருந்துகள் மற்றும் கடற்கரைகளில் ஒன்று கூடுதல் இன்றிலிருந்து தடைசெய்யப்படும்.

* நீச்சல் குளங்கள் மற்றும் ஸ்பாக்கள் இன்று முதல் மூடப்படுகின்றன.

* ஹோட்டல்கள் மற்றும் விடுமுறை விடுதிகள் அவற்றின் மொத்த திறனில் 25 சதவீதமானவர்களுக்கு மட்டுமே திறந்திருக்க முடியும்.

கிளிநொச்சி நகர வர்த்தக நடவடிக்கைகளை முடக்கத் தீர்மானம்

கிளிநொச்சி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு கொரோனாப் பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் அவற்றினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கிளிநொச்சி வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த நடவடிக்கை நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) 20.08.2021 தொடக்கம் 28.08.2021 வரை கிளிநொச்சி வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை கிளிநொச்சி சேவைச் சந்தையும் இன்று முதல் கரைச்சி பிரதேச சபையினால் மூடப்பட்ட நிலையில் வர்த்தக நடவடிக்கைகள் பொது இடங்களில் சுகாதார நடைமுறைகள் இறுக்கமாகப் பின்பற்றப்பட்டு முன்னெடுக்கப்பட்டிருந்தன.

நாட்டில் நேற்று வரையில் 35 நகரங்களின் வர்த்தக நடவடிக்கைகளை முடக்கி வர்த்தகர்கள் கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ரூபாய் குறித்து மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கை!

உடனடியாகச் செயற்படும் விதத்தில் இலங்கை ரூபாவை மதிப்புக் குறைக்குமாறு உரிமம்பெற்ற வங்கிகளிம் கோரவில்லை என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு மத்திய வங்கி இதனை தெரிவித்துள்ளது.

உடனடியாகச் செயற்படும் விதத்தில் இலங்கை ரூபாவை மதிப்புக் குறைக்குமாறு உரிமம்பெற்ற வங்கிகள் உத்தியோகபூர்வமாக கோரப்பட்டுள்ளன என்ற செய்திகள் பரப்பப்பட்டுவருவதனை இலங்கை மத்திய வங்கி அவதானித்துள்ளது.

அத்தகைய செய்திகள் எவ்விதத்திலேனும் அடிப்படையற்றவை என பொதுமக்களுக்கு இத்தால் அறிவிக்கப்படுவதுடன் செலாவணி வீதத்தினை நிர்ணயிப்பதன் மீதான இலங்கை மத்திய வங்கியின் நிலைக்கு அல்லது தொழிற்பாட்டு ரீதியான ஏற்பாடுகளுக்கு இலங்கை மத்திய வங்கி எந்தவித மாற்றத்தினையும் மேற்கொள்ளவில்லை.

சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் வழமையான ஊடகங்கள் ஊடாகவும் பரப்பப்பட்டு வருகின்ற தவறானதும் தவறாக வழிநடத்துகின்றதுமான தகவல்களை நம்பவேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கி விடுக்கும் ஏதேனும் உத்தியோகபூர்வ அறிக்கை, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், துணை ஆளுநர் அல்லது பெயர் மற்றும் பதவி மூலம் அடையாளப்படுத்தப்படுகின்ற இலங்கை மத்திய வங்கியின் எவரேனும் வேறு அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர் மூலமே வழங்கப்படும்.

Posted in Uncategorized

மூன்று வகையான டெல்டா வைரஸ் திரிபுகள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளன

டெல்டா கொரோனா பிறழ்வின் மூன்று வகையான திரிபுகள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இலங்கையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளில் மேலும் சில கொரோனா வைரஸ் பிறழ்வுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் சன்ன ஜயசுமன கூறினார்.

SA 222V, SA 701S மற்றும் SA 1078S ஆகிய புதிய டெல்டா திரிபுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பகிர்தல்:

நல்லூர் வீதிதடைகள் நீக்கம்!

நல்லூர் கந்தன் அடியவர்களுக்கான அறிவித்தல்.

•தற்கால கோவிட் 19 சூழலில் நல்லூர் கந்தன் உற்சவம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் வீதித் தடைகளுக்கு உள்ளே உள்ள கடைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பொதுமக்கள் தகுந்த சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றிச் சென்று அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக விசேட பூஜை நேரங்களான காலை 04.00 – 5.30, காலை 10.00 12.00, மாலை 04.00 – 06.00 ஆகிய நேரங்கள் தவிர்ந்த ஏனைய நேரங்களில் அனுமதி வழங்கப்படும்.

•விசேட திருவிழா நாட்களில் மேற்படி அனுமதி வழங்கப்பட மாட்டாது.

மேலும் இந்நடைமுறையில் தேவைப்படின் நாட்டின் சுகாதார நிலைமையின் அடிப்படையிலும் சுகாதார வைத்திய அதிகாரியின் மேலதிக பணிப்பின் அடிப்படையிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம்.

யாழ். மாநகர முதல்வர்
வி.மணிவண்ணன்

Posted in Uncategorized

ரணிலின் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஜனாதிபதியிடமிருந்து சாதகமான பதில்

நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்கவின் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சாதகமாக பதிலளித்துள்ளார் என ஐக்கியத் தேசியக் கட்சியின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க, தற்போதைய கொரோனா நிலைமை குறித்து கலந்துரையாடினார்.

இதன்போது அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டுமாறு ரணில் கோரிக்கை விடுத்தார்.

இதன்போது வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை அரசியல் தலைவர்கள் முன்வைக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, ஐ.தே.க ஏற்கனவே தங்கள் சொந்த முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில், ஜனாதிபதி இந்த கோரிக்கைக்கு சாதகமாக இருந்தார் என்றும் ஆனால் அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்ப விடுக்கப்படுமா என்பதை உறுதிப்படுத்தவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் அறிக்கை தெரிவித்துள்ளது.

திருகோணமலையில் அனைத்து கடைகளுக்கும் பூட்டு

திருகோணமலை மாவட்டத்தில் கொரோனாத் தொற்றுப் பரவலானது சடுதியாக அதிகரித்திருப்பதைக் கருத்தில் கொண்டு இன்று (17) முதல் அத்தியாவசிய சேவைகள் அல்லாத கடைகள் மற்றும் வியாபார ஸ்தலங்களை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று (17) திருகோணமலை நகர சபையில் இடம்பெற்றது.

மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற விசேட கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைய, இன்று முதல் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து வியாபார நிலையங்களையும் மூடுவதற்குத் தீர்மானித்திருப்பதாகத் திருகோணமலை நகரசபைத் தலைவர் என்.ராஜநாயகம் தெரிவித்தார்.

மேலும் மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்திசெய்யும் முகமாக மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சிறுகடைகள் திறக்கப்பட்டிருக்கும் எனவும், நடமாடும் சேவைகள் மூலம் மீன் மற்றும் மரக்கறி வகைகளை விநியோகிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் ‘பட்டணமும் சூழலும்‘ பிரதேசசபை தலைவர் சதுன் தர்ஷன ரத்னாயக்க, திருகோணமலை வர்த்தக சம்மேளனத் தலைவர் கே.குலதீபன் மற்றும் ஷிரோமன் ரங்கன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்

சீனாவிடம் இருந்து இலங்கைக்கு 61.5 பில்லியன் ரூபாய் நிதியுதவி

சீனா அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கைக்கு இடையில் 2 பில்லியன் RMB நிதியுதவிக்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை ரூபா மதிப்பில் இது 61.5 பில்லியன் ரூபாயாகும்.

இலங்கைக்கான சீன தூதரகம் டுவிட்டர் பதிவு ஒன்றை மேற்கொண்டு இதனை தெரிவித்துள்ளது.

இலங்கையின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் கொவிட் 19 தடுப்பு நடவடிக்கை, பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.