பலவந்தமாக சடலங்களை தகனம் செய்வதை இலங்கை உடனடியாக நிறுத்த வேண்டும் – ஐ.நா. அதிரடி

கொவிட் வைரஸ் தொற்றில் மரணிப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதே இலங்கை அரசாங்கத்தின் தீர்மானமாக இருப்பது மனித உரிமையை மீறும் செயலாகும். இதனை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து செயற்படுத்தக்கூடாது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் விசேட நிபுணர் குழு விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொவிட்19 தொற்றில் மரணிக்கும் நபர்களின் சடலங்களை கட்டாய தகனம் செய்வதன் மூலம் இலங்கையில் இருக்கும் சிறுபான்மை மக்களுக்கு அநீதி ஏற்படுவதுடன் வன்முறைகள் ஏற்படுவதற்கு இடமிருக்கின்றது.

தகனம் செய்வது ஒரே தீர்மானமாக ஏற்றுக்கொள்வது மனித உரிமை மீறலாகும். கொவிட் தொற்றுக்குள்ளாக மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் அதனூடாக வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக இலங்கையிலோ வேறு நாடுகளிலோ மருத்துவ ரீதியில் அல்லது விஞ்ஞான ரீதியிலான எந்த ஆதாரமும் இலலை.

மேலும் இலங்கையில் கொவிட்டி மரணித்தவர்களில் குறிப்பிடத்தக்க அளவானவர்கள் முஸ்லிகளாகும். அவர்களின் பூதவுடல்கள் உள்நாட்டு சுகாதார வழிகாட்டலுக்கமைய தகனம் செய்யப்பட்டிருக்கின்றன.

தொற்று நோய் தடுப்பு பிரிவின் பிரதானியின் நிலைப்பாட்டுக்கமைய கொவிட் சடலங்களை தகனம் செய்ய தீர்மானிக்கப்பட்டிருப்பது, சடலம் அடக்கம் செய்வதால் நிலத்தடி நீரினுடாக தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம் இருப்பதனாலாகும்.

என்றாலும் உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து சுட்டிக்காட்டி இருப்பது, சடலங்களை தகனம் செய்வது தொற்று பரவலை தடுக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாகும்.

இலங்கை வைத்தியர் சங்கம் அண்மையில் விடுத்திருந்த அறிக்கையிலும் இதனை உறுதி செய்திருக்கின்றது. தொற்று நோய் நிலைமையின்போது மரணித்தவரின் கெளரவத்துக்கும் அதேபோன்று அவர்களின் உறவினர்களின் உணர்வுகளுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது.

இந்த நிலையில் இலங்கையில் முஸ்லிம் மக்கள் மற்றும் வேறு சிறுபான்மை மக்கள் குழுவை பிரித்து செயற்படுவது இனவாத வன்முறை நிலைமை ஏற்படுத்துவதற்கு மற்றும் வர்க்க பேதத்தை வெளிப்படுத்தி காட்டுவதற்கு காரணமாகும் வகையில் தீர்மானங்களுக்கு வருவதை கண்டிக்கின்றோம்.

மேலும் கொவிட் 19 தொடர்பான இறுதி அறிக்கையை உறவினர்களால் பரிசோதித்து பார்ப்பதற்கு முன்னரே சில சடலங்கள் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கின்றன.

கொவிட்டில் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய முடியுமா என ஆராய்ந்து பார்க்குமாறு இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சுக்கு ஆலாேசனை வழங்கிய பின்னர், சுகாதார ராஜாங்க அமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசேட நிபுணர்குழு , அதுதொடர்பான ஆலாேசனைகளை வழங்கி இருந்தும் அரசாங்கம் அதனை கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றது.

எனவே பலவந்தமாக கொவிட் சடலங்களை தகனம் செய்வதை இலங்கை அரசாங்கம் உடனடியாக நிறுத்தவேண்டும். அத்துடன் முறையற்ற விதத்தில் மேற்கொள்ளப்பட்ட தகனங்களுக்காக எந்தமுறையிலாவது நிவாரண முறைமையொன்றை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பைடனின் நிர்வாகமும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் – அமெரிக்கத் தூதுவர்

ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொடர்ந்தும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் என இலங்கைக்கான தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மீண்டும் மனித உரிமை பேரவையில் இணைந்துகொள்ளுமா என்பது குறித்து தற்போதைக்கு தெரிவிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் ஏனைய நாடுகள் மூலமாக இலங்கையில் உண்மையான அமைதி காணப்படுவதை உறுதிசெய்வதற்காக பாடுபடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னைய அரசாங்கத்தின்போதும் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியிலும் மனித உரிமை விடயங்களில் முன்னேற்றம் மிகவும் மந்தகதியிலேயே காணப்படுகின்றது எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மனித உரிமைக்கு ஆதரவளிப்பதை இலங்கையுடன் வலிந்து மோதலில் ஈடுபடுவதாக கருதக்கூடாது எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

யாழில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேருந்து நிலையத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு – மாநகர பிரதி முதல்வர் ரெலோ ஈசன்

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நெடுதூர பேரூந்து நிலையத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபையின் பிரதி முதல்வர் து.ஈசன் குற்றம்சாட்டியுள்ளார்.

அத்தோடு தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்படாது விட்டால் தான் பேரூந்து நிலைய திறப்பு விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை எனவும் து.ஈசன் தெரிவீத்துள்ளார்.

குறித்த விடையம் தொடர்பில் இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே து.ஈசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

புதிய பேருந்து நிலையமானது கடந்த ஆட்சியின் போது முன்னாள் முதல்வர் ஆனல்ட் காலத்தில் அடிக்கல் நாட்டட்டிருந்தது. தற்போது இதன் வேலைகள் நிறைவடைந்து 27 ஆம் திகதி காலை திறப்பதற்கான வேலைகள் இடம்பெற்றுக்கொண்டு வருகின்றது.

இந்த நேரத்தில் இருக்கும் ஒரு பிரச்சினை வடகிழக்கின் நிருபாக மொழியான தமிழ் மொழி புறக்கனிக்கப்பட்டு பெயர் பலகையில் இரண்டாவது இடத்தில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.

அத்தோடு இங்கு இருக்கும் வர்த்தக நிலையங்கள் சகல நிறுவனங்களிலும் எங்களுடைய மொழிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என நாங்கள் ஒரு தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றோம். அவ்வாறான இடங்களை நாங்கள் திருத்தி அமைத்துக்கொண்டு வருகின்ற சூழ்நிலையில் இவ்வாறு இடம்பெற்றுள்ளது மன வருத்தத்திற்குரியது.

அந்த வகையில் இதன் பெயர் மாற்றத்தை செய்யாத பட்சத்தில் யாழ் மாநகர சபையின் பிரதி முதல்வர் என்ற அடிப்படையில் நான் கலந்துகொள்ள போவதில்லை. ஏன் எனில் எங்ளுடைய மொழி புறக்கனிக்கப்படும் இடத்தில் நான் கலந்துகொள்வது பொருத்தம் இல்லை.

இதற்கு மேலதிகமாக சபையில் ஒரு தீர்மானத்தை கொண்டுவந்து இந்த பெயரை மாற்றுவேன் என கூறிக் கொள்ளுகின்றேன் என தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து பிரிட்டன் கவலை!

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகப் பிரிட்டன் கவலை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன் ருவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டு, இதனைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களைக் கட்டாயமாக எரிக்கும் நடைமுறை உட்பட இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களில் பிரிட்டன் அவதானமாக உள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான ஐ.நா. அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளது எனவும், பிரிட்டனின் அணுகுமுறைகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு அறிவிக்கப்படும் என்றும் தூதுவர் சாரா ஹல்டன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேநேரம், பிரிட்டனின் பொதுநலவாய, அபிவிருத்தி விவகார அமைச்சர் தாரிக் அஹ்மட் இலங்கையின் மனித உரிமை நிலைமை குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரை முன்னிட்டு, கொரோனாத் தொற்றால் உயிரிழந்த மதக் குழுக்களின் உடல்களைக் கட்டாய எரிப்புக்கு உட்படுத்துவதன் தாக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற விடயங்களை இலங்கை வெளிவிவகார அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வந்ததாகப் பிரிட்டன் அமைச்சர் தாரிக் அஹ்மட் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. அறிக்கை இலங்கை வெளி விவகார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அதற்குப் பதிலளிப்பதற்கு இம்மாதம் 27 ஆம் திகதி வரை கால வரையறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

’சுரேஷ் ஓர் அரசியல் விபச்சாரி’

ஈபீஆர்எல்எப் அமைப்பின் தலைவரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அரசியல் விபச்சாரி என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் – கொக்குவிலில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது, ஐ.நாவுக்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வரைபில் இனப்படுகொலை என்ற வசனத்தை உள்ளடக்கவில்லை என்றும், சர்வஜன வாக்கெடுப்பை கNஐந்திரகுமார் விரும்பவில்லை என்பது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை சுரேஷ் பிரேமச்சந்திரன் முன்வைத்திருந்தார்.

இந்நிலையில், இன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நடத்திய ஊடக சந்திப்பின் போது சுரேஷ் பிரேமச்சந்திரனின் மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கேள்வி எழுப்பிய போது, அந்தக் குற்றச்சாட்டக்களை கஜேந்திரகுமுhர் நிராகரித்தார்.

அது மட்டுமல்லாமல் சுரேஷ் பிரேமச்சந்திரன் மீது பல்வெறு குற்றச்சாட்டகளையும் சுமத்தியிருந்தார்.

Posted in Uncategorized

கொழும்பு துறைமுக கிழக்கு முனைய முதலீட்டு வேலைத்திட்டம் இறுதிப்படுத்தப்பட்டது

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இலங்கை துறைமுக அதிகாரசபை,இந்தியா – ஜப்பான் நாடுகளுடன் இணைந்து 51-49 வீத உரிமத்தில் அபிவிருத்தி செய்யும் முத்தரப்பு உடன்படிக்கை இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை அமைச்சரவைக்கு வழங்கப்படவுள்ளதுடன், 23 தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை முழுமையாக நிராகரிக்கவும் அமைச்சரவை உபகுழு தீர்மானித்துள்ளது. கிழக்கு முனைய அபிவிருத்தியில் இந்தியா – ஜப்பான் நாடுகளுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை மாற்ற முடியாதுள்ளமையும் இந்த தீர்மானத்திற்கு பிரதான காரணம் என்பதை அமைச்சரவை உபகுழு சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய முதலீட்டு அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் பல்வேறு நெருக்கடிகள் எழுந்துள்ளதை அடுத்து இந்த விடயம் குறித்து ஆராய ஜனாதிபதியினால் ஏழுபேர் கொண்ட அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டது. துறைமுக அதிகார சபையின் செயலாளர் யு.டி.சி ஜெயலால் தலைமையில் நியமிக்கப்பட்ட இந்த குழு இன்று திங்கட்கிழமை ஐந்தாவது தடவையாகவும் கூடி துறைமுக முதலீட்டு வேலைத்திட்டம் குறித்து ஆராய்ந்துள்ளனர்.

இதன்போது துறைமுகத்தை இந்தியாவிற்கு வழங்குவதற்கு எதிர்ப்பை தெரிவித்து துறைமுகத்தின் 23 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முன்வைத்த எழுத்து மூல கோரிக்கை, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் பரிந்துரைகள் மற்றும் துறைமுக அதிகார சபையின் பிரதான கோரிக்கை உள்ளிட்ட விடயங்களை இன்று ஆராய்ந்ததுடன் இறுதி தீர்மானத்தையும் எட்டியுள்ளனர்.

இன்றைய பேச்சுவார்த்தை குறித்து அமைச்சரவை உபகுழுவின் தலைவர் யு.டி.சி. ஜெயலால் தெரிவிக்கையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து ஆராய ஜனாதிபதி குழுவொன்றை நியமித்தமைக்கு இந்த வேலைத்திட்டத்தின் உடன்படிக்கைகள், இந்தியா – ஜப்பான் ஆகிய நாடுகளின் கோரிக்கைகள், முதலீடுகள் குறித்து அவர்களின் நிலைப்பாடுகள் மற்றும் இலங்கை துறைமுக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து முழுமையாக ஆராயப்பட்டது.

இதில் கிழக்கு முனையத்தை எக்காரணம் கொண்டும் இந்தியாவிற்கு கொடுக்கக்கூடாது எனவும் துறைமுக அதிகார சபையே இதனை தன்வசப்படுத்த வேண்டும் என துறைமுகத்தில் அங்கம் வகிக்கும் 23 தொழிற்சங்கங்களும் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஆனால் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது.

தற்போது துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள காரணத்தினாலும், இதில் 51 வீதம் இலங்கை துறைமுக அதிகார சபைக்கும் 49 வீதம் சர்வதேச முதலீட்டாளர்களுக்கும் வழங்கப்படும் என்ற தீர்மானம் இறுதித் தீர்மானமாக உள்ள நிலையில் தொழிற்சங்கங்களின் நிலைப்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல் இலங்கைக்கு வரும் முதலீடுகளில் துறைமுகத்தின் அபிவிருத்தியை முழுமையாக மேற்கொள்ள கிடைத்துள்ள வாய்ப்பாக இருக்கின்ற காரணத்தினால் 51-49 வீத உரிமம் என்ற ரீதியிலேயே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.

அதேபோல் இந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் இந்தியாவின் நிறுவனமான அதானி நிறுவனம் தமது பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர், அதேபோல் ஜப்பான் நாட்டின் ஜய்க்கா நிறுவனமும் அவர்களின் பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர். இந்த இரண்டு தரப்பும் இணைந்தே 49 வீத உரிமத்தில் முதலீடுகளை செய்து துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

எனவே அவர்களின் பரிந்துரைகளை முழுமையாக ஆராய்ந்துள்ளோம். இந்த துறைமுகம் 35 ஆண்டுகால முதலீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ள காரணத்தினால் மூன்று நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்த உடன்படிக்கைகளையும் ஆராயும் கடமை எம்மிடமே உள்ளது. எனவே தற்போது இறுதிக்கட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது குறித்த இறுதி அறிக்கையை இந்த வாரம் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்படும். அதேபோல் தொழிற்சங்கங்களுடன் இனிமேல் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கப்படாது. அதற்கான அவசியங்கள் ஏற்படாது.

மேலும் இந்த முதலீட்டு அபிவிருத்தி வேலைத்திட்டமானது கடந்த ஆட்சியில் செய்து கொள்ளப்பட்டுள்ள முத்தரப்பு உடன்படிக்கைகள் என்ற காரணத்தினால் உடனடியாக ஒப்பந்தத்தை இரத்து செய்ய முடியாது. எனவே முன்னைய ஆட்சியில் உள்ள பலவீனமான கோரிக்கைகளை நீக்கி, இலங்கைக்கு சாதகமான விதத்திலும், துறைமுக அபிவிருத்தி அதிகார சபையின் ஆதிக்கம் அதிகமாக உள்ள விதத்திலும் இந்த உடன்படிக்கையை செய்துகொள்ள தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

Posted in Uncategorized

நல்லூர் பிரதேச சபையின் 2021 பட்ஜெட்டை ஆதரித்தமைக்கு இதுதான் காரணம்: ரெலோ மதுசுதன்

மக்கள் நலன்சார்ந்த வரவுசெலவுத் திட்டம் என்ற வகையில் அதனை எப்போதும் தோற்கடிப்பதற்கு நாங்கள் துணைபோகக் கூடாது என நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் குமாரசாமி மதுசுதன் தெரிவித்தார்.

அந்தவகையில் நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் 45 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களின் அவாக்களையும், அவர்களின் அன்றாடத் தேவைகளையும், அபிவிருத்திகளையும் கருத்திற் கொண்டு தான் நல்லூர் பிரதேசசபையின் நடப்பாண்டுக்குரிய வரவுசெலவுத் திட்டத்தை ஆதரித்துள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு சமர்ப்பித்தல் தொடர்பான கூட்டம் புதிய தவிசாளர் பத்மநாதன் மயூரன் தலைமையில் அண்மையில் சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

மேற்படி கூட்டத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட பின்னர் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லூர் பிரதேச சபையில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து வரவு செலவுத் திட்டங்களுக்கும் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) எப்போதும் தனது ஆதரவைத் தெரிவித்து வந்தமை இங்கே பதிவு செய்யப்பட வேண்டிய விடயம்.

2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவதற்கு எப்போதும் எங்களின் ஆதரவிருக்கும்.

நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான மக்கள் நலன்சார்ந்த வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டமைக்கு மகிழ்ச்சியையும், முன்னைய தவிசாளரை விட இன்னும் சிறப்பாகச் செயற்பட என் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

பயணத்தடை விதிக்கப்படலாம் சொத்துக்கள் முடக்கப்படலாம் ஐ.நா ஆணையாளர் அதிரடி அறிவிப்பு

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றச்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக பயணத்தடைகள் விதிக்கப்படலாம் அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படலாம் என ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், யுத்த குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை பெறுவதற்கான சர்வதேச பொறிமுறையொன்று குறித்தும் பரிந்துரை செய்துள்ளார்.

இந்நிலையில், ஆதாரங்கள் எவையும் நிருப்பிக்கப்படாதவர்களிற்கு எதிராகவே இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனத் கொலம்பகே அவர்கள் குற்றம்சாட்டப்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

“அவசியமற்ற சில விடயங்கள் அந்த அறிக்கையில் இந்த தருணத்தில் காணப்படுவதாக நாங்கள் கருதுகின்றோம் எங்களுக்கு அவதூறு கற்பிக்கமுனையும் நாடுகள் சிலவற்றை விட இலங்கையர்களான நாங்கள் அமைதியாகவும் ஸ்திரதன்மை மிக்கவர்களாகவும் காணப்படுகின்றோம்” என்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

முன்னைய அறிக்கைகளை விட இந்த அறிக்கை மோசமானது இலங்கையில் ஆபத்தான போக்கு தென்படுகின்றது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ள ஜயனத் கொலம்பகே, அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தீர்மானித்ததும் அதனை பகிரங்கப்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய ஆணைக்குழு மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளைத் திசைதிருப்புவதற்கான போலியான முயற்சி – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டிருக்கும் புதிய ஆணைக்குழு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளைத் திசைதிருப்புவதற்கான போலியானதொரு முயற்சி என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் சாடியிருக்கிறது.

அத்தகைய முயற்சிகளால் திசைதிரும்பி விடக்கூடாது என்று வலியுறுத்தியிருக்கும் அவ்வமைப்பு, இலங்கையைக் கண்காணிப்பதற்கான புதிய தீர்மானமொன்றை மனித உரிமைகள் பேரவை நிறைவேற்றுவது மிகவும் அவசியமாகும் என்றும் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் இன்று சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளது.

குருந்தூர் மலை தமிழர் பிரதேசம் தொடர்பில் 88 வருடங்களுக்கு முன்னர் வெளியான வர்த்தமானி! சபையில் ரெலோ தலைவர் அடைக்கலநாதன் காட்டம்

1933ஆம் ஆண்டில் குருந்தூர் மலைக்காடு என தமிழில் பெயர் வரும்படி தொல்பொருள் ஆராய்வுக்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

88 வருடங்களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட வர்த்தமானி விடயத்தில் தற்போது எதற்காக கவனம் செலுத்தப்படுகிறது என ரெலோ தலைவரும் தமிழ்த் தேசியகூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது குருந்தூர் மலைப்பகுதி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இதனைக்கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

முல்லைத்தீவு – குருந்தூர் மலைப்பகுதியில் சிவன் ஆலயம் ஒன்று காணப்பட்டது.அங்கு பொங்கல் வைத்து வழிபாடும் முன்னெடுக்கப்பட்டு வந்தது.பிக்கு ஒருவரின் தலையீட்டினால் இவ்விடயம் நீதிமன்றத்திற்கு சென்றது.

இவ்வழக்கின் தீர்ப்பில் இங்கு வழிபாடுகளை நடத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Posted in Uncategorized