ராஜபக்சவினர் இருக்கும் வரை சர்வதேச உதவிகள் கிடைக்காது:ரணிலின் இறுதி அரசியல் அத்தியாயம்:ராஜித சேனாரத்ன

ராஜபக்சவினரின் கீழ் தற்போதைய அரசாங்கத்தை பொறுப்பேற்பதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த முடிவு எந்தளவுக்கு சரியானது என்பதை நாட்டு மக்கள் புரிந்துக்கொண்டுள்ளனர் என நம்புவதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவின் தலைமையின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பொறுப்பேற்றிருந்தால், எங்கிருந்தும் உதவிகள் கிடைக்காது.

எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் தூரநோக்கு சிந்ததனை காரணமாக அவர் அரசாங்கத்தை பொறுப்பேற்கவில்லை. ராஜபக்சவினர் இருக்கும் வரைக்கும் நாட்டை கட்டியெழுப்ப சர்வதேச உதவிகள் கிடைக்காது.

மத்திய கிழக்கு நாடுகள் ஒரு சொட்டு எரிபொருளையும் வழங்காது
ராஜபக்சவினர் இருக்கும் வரை சர்வதேச உதவிகள் கிடைக்காது:ரணிலின் இறுதி அரசியல் அத்தியாயம்:ராஜித சேனாரத்ன

ஐரோப்பா உட்பட வளர்ச்சியடைந்த நாடுகளிடம் இருந்து எமக்கு எப்போதும் உதவிகள் கிடைக்காது. ராஜபக்சவினர் பரப்பிய முஸ்லிம் எதிர்ப்பு காரணமாக நிவாரண உதவியாக மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து ஒரு சொட்டு எரிபொருள் கூட கிடைக்காது.

எனினும் எமது எதிர்க்கட்சித் தலைவரின் தலைமையின் கீழ் சரியான முறையில் சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்று அமைக்கப்படுமாயின் மத்திய கிழக்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பின்னர் செலுத்தும் கடன் அடிப்படையில் எரிபொருள் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியும்.

ஜனாநாயக ஆட்சி நிர்வாக வரைவை முன்வைப்பதன் மூலம் ஐரோப்பா உட்பட மேற்குலக நாடுகள் இலங்கைக்கு உதவும். தற்போதைய அரசாங்கத்திற்கு உதவ எவரும் முன் வர மாட்டார்கள் என்பது தெளிவானது.

இறுதியில் ஒரு நபர் காரணமாக முழு நாடும் துன்பத்தை அனுபவித்து வருகிறது. இதனால், நாங்கள் கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து வெளியேறுமாறு கூறுகின்றோம்.

ராஜபக்சவினர் இருக்கும் வரை சர்வதேச உதவிகள் கிடைக்காது:ரணிலின் இறுதி அரசியல் அத்தியாயம்:ராஜித சேனாரத்ன இன்னும் ஒரு வாரத்திற்குள் ரணில் விக்ரமசிங்கவையும் விரட்ட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னிடம் கூறினர்.

இதுதான் தற்போது அரசாங்கத்திற்குள் இருக்கும் நிலைமை. ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளார். ரணில் விக்ரமசிங்க கூறுவதை ஜனாதிபதி கவனத்தில் கொள்வதில்லை என்பதே இதற்கு காரணம்.

இப்படியான துயரமான நிலைமைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். முழு ஐக்கிய தேசியக் கட்சியையும் அழித்த ரணில், தற்போது நாட்டுக்கும் மக்களுக்கும் துரோகமிழைத்து விட்டு, தனது அரசியலில் இறுதி அத்தியாயத்தில் இருந்து வருகிறார் எனவும் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

Posted in Uncategorized

பிரதமரின் வீட்டுக்கு அருகில் பதற்றம்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அமைப்பின் ஏற்பட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்டோர் அங்கு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும் நிலையில், அந்தப் பகுதில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொழும்பு கோட்டை பகுதியில் இளைஞர்கள் பலர் தற்போது ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தி வருகின்றனர்.

Posted in Uncategorized

தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினரானார்!

வர்த்தகர் தம்மிக்க பெரேரா சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.

இன்று முற்பகல் 10 மணிக்கு பாராளுமன்றம் கூடிய போது, அவர் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமானம் செய்துகொண்டார்.

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷவின் இராஜினாமவை தொடர்ந்து வெற்றிடமாகிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டில் ஆசனத்திற்கே தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு, பொருளாதார விடயம் தொடர்பான முக்கிய அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது.

Posted in Uncategorized

மலையக தொழிலாளர் சம்பளத்தை அதிகரிக்கவும்-மனோ கணேசன் வலியுறுத்தல்

மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்குமாறு நாம் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம். அதேவேளை பெருந்தோட்டப் பகுதிகளில் பயன்படுத்தப்படாத காணிகளை தோட்டத் தொழிலாளர்களுக்கு விவசாயத்துக்காக வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளோம் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  மனோ கணேசன் சபையில் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமரிடம் நாம் முன்வைத்துள்ள வேண்டுகோளுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என்பதால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டங்களில் இனி தாம் பங்கேற்கப் போவதில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தைப் பகிஷ்கரிப்பது தொடர்பில் நேற்றைய தினம் எதிர்க்கட்சியினர் பலரும் சபையில் கருத்துக்களை முன்வைத்தனர்.

இதன்போது  உரையாற்றிய அவர்,

“மிக மோசமான பொறுப்பற்ற அரசாங்கமே தற்போது நாட்டில் உள்ளது. தான் பிரதமர் பதவியை கேட்டுப் பெறவில்லை. தன்னை அழைத்தே ஜனாதிபதியே அப் பதவியை வழங்கினாரென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்து வருகிறார்.

ஆனால் விமல் வீரவன்சவோ ரணில் பெயரை சில தரப்பினர் பெயரிட்டதாக சபையில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ஒரே விடயத்துக்காக ஜனாதிபதியும் பிரதமரும் வேறு வேறாக அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். மிக மோசமான மடத்தனமாக அரசாங்கத்தையே அவர்கள் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

கொழும்பு மாவட்டத்தில் மக்கள் எரிபொருள், மண்ணெண்ணெய், எரிவாயு நெருக்கடி தட்டுப்பாடு காரணமாக  பெரும் கஷ்டப்படுகின்றனர். மலைநாட்டில் தோட்டத் தொழிலாளர்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்குமாறு நாம் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம். அதேவேளை பெருந்தோட்டப் பகுதிகளில் பயன்படுத்தப்படாத காணிகளை தோட்டத் தொழிலாளர்களுக்கு விவசாயத்துக்காக வழங்குங்கள் என மேலும் தெரிவித்துள்ளார்.

”சிங்கள தலைவர்களே வெட்கமாக இல்லையா?”: சபையில் கேள்வியெழுப்பிய சிறீதரன் எம்.பி!

நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத நாட்டில் எப்படி நீதியை பெற்றுக்கொள்ள முடியும்?
கருணை, காருண்யம் போதித்த புத்தபகவான், இன்று ஒரு ஆக்கிரமிப்பு கருவியாக பயன்படுத்தப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்றில் கருத்து தெரிவித்தார்.
முல்லைத்தீவு, குருந்தூர் மலையில் புத்தபகவானின் சிலை நிறுவப்பட்ட சம்பவம் மற்றும் விஸ்வமடு பகுதியில் படையினரால் பொதுமக்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் சிறீதரன் வெளியிட்ட கருத்துக்களுக்கு சரத் வீரசேகர பதிலளித்து பேசிய நிலையில், அதற்கு எதிர் கருத்து வெளியிட்ட போதே சிறீதரன் இந்த விமர்சனத்தை வெளியிட்டார்.
இலங்கையில் சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் தனித்தனி சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
தென்னிலங்கையில் சிங்கள இளைஞர்கள் போராடும்போது, அவர்களை தமது பிள்ளைகளாக பார்க்கும் அரசாங்கம், தமிழர்களை மாற்று முகமாக பார்ப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம் ஒன்று நல்லூர் பிரதேச சபையில் நிறைவேற்றம்! ரெலோமதுசூதன்

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையில் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபையின் இன்றைய அமர்வின்போது, இனப்படுகொலை இடம் பெற்றது தொடர்பாக கனடிய பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பிரதேச சபையில் வரவேற்கப்பட்டுள்ளது.

இனப்படுகொலை

கனடிய பாராளுமன்றத்தில் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை தான். அதற்கு நீதி கிடைக்க வேண்டும் மற்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரேரணை

இதற்கமைய, நல்லூர் பிரதேச சபையின் அமர்வில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ வின் நல்லூர் தொகுதி அமைப்பாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினருமான  அ.மதுசூதன் குறித்த தீர்மானத்தை சபையில் கொண்டு வந்துள்ளார்.

இதனையடுத்து அவரால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டதுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கான கப்பல் போக்குவரத்து சேவையை விரைவில் ஆரம்பிக்க வேண்டும்! ரெலோ விந்தன் கோரிக்கை

இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையேயும் படகு போக்குவரத்து சேவையையும் தூத்துக்குடி மற்றும் காங்கேசன்துறை இடையேயும் வர்த்தக சரக்கு கப்பல் சேவையையும் மேற்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார்.

யாழ் ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், மைத்திரி ரணில் நல்லாட்சி அரசாங்க காலத்தில் யாழ்ப்பாணத்துக்கான சர்வதேச விமான நிலையம் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்டு விமான போக்குவரத்து சேவைகள் சுமுகமாக நடைபெற்று வந்த சூழ்நிலையில் கொரோனாவை காரணம் காட்டியும் அரசியல் காரணங்களாலும் அது இடைநிறுத்தப்பட்டது.

தற்போது மீண்டும் இதனுடாக போக்குவரத்தை தொடங்குவது என்பது வரவேற்க்ககூடிய விடயம். அத்துடன்
1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் ராமேஸ்வரம் தலைமன்னாரிடையே படகுப் போக்குவரத்து சேவை இடம்பெற்றதுடன் தூத்துக்குடி மற்றும் காங்கேசன்துறை இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து சேவையும் இடம்பெற்றது.

ஆகவே இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையேயும் படகு போக்குவரத்து சேவையையும் தூத்துக்குடி மற்றும் காங்கேசன்துறை இடையேயும் வர்த்தக சரக்கு கப்பல் சேவையை மேற்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனை ஆரம்பித்தால் தான் தற்போது நாட்டின் பொருளாதாரம்
உயர்வடைவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது. வெறுமனே வந்த விமான போக்குவரத்து அமைச்சர் புதிதாக தானே இந்த விமான சேவையை ஆரம்பிப்பது போல சித்தரிக்ககூடாது என்றார்.

மேலும் தெரிவிக்கையில்
வடக்கு கிழக்கு மக்கள் 2019ஆம் ஆண்டு தேர்தலில் தற்போதைய அரசாங்கத்தை நிராகரித்து விட்டார்கள். ஆனால் தற்போது தென்னிலங்கை மக்கள் ராஜபக்ஷ குடும்ப அரசாங்கத்தை நிராகரித்த போதும் கரத்த களரி நிலை ஏற்பட்டபோதும் அரசாங்கம் தனது பதவியை விட்டு விலகாமல் உள்ளது. ஆகவே அரசாங்கம் மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும் என்றார்.

Posted in Uncategorized

சிங்கள மக்களின் பொறுமைக்கு எல்லை உண்டு – கூட்டமைப்பினரை பகிரங்கமாக எச்சரித்தார் சரத் வீரசேகர

இலங்கையில் சிங்கள மக்களின் பொறுமைக்கு எல்லை இருப்பதாகவும், அதனை கேலிக்குட்படுத்தவேண்டாம் எனவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(21) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர், முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு எதிர்ப்பு வெளியிட்டமையை தாம் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பிரபாகரனின் கட்சி எனவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கோணகல கிராமத்தில் 54 சிங்களவர்கள் கொல்லப்பட்டபோது, கொழும்பில் இந்து மத வேல் திருவிழா இடம்பெற்றிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் வடக்கில் பௌத்த நடைமுறைகளுக்கு கௌரவம் வழங்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அண்மையில் நாகவிஹாரையில் புத்த பெருமான் சிலையை நிறுவுவதற்கும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

இந்தநிலையில், குருந்தூர் மலையில் கண்டெடுக்கப்பட்ட சின்னங்கள் பல நூற்றாண்டுளுக்கு முற்பட்ட பௌத்த சின்னங்களாகும்.

கடந்த 9ஆம் திகதி குருந்தூர் மலையில் புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும் வினோநோகராதலிங்கம் ஆகியோர் பாரிய தடைகளை ஏற்படுத்தினர்.

இவர்களால், அழைத்து வரப்பட்டவர்கள் கிராம மக்கள் அல்லர் என குற்றம் சுமத்திய அவர், அவர்கள் ஏனைய பகுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்டவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை – தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“ஐக்கிய நாடுகளின் பொது அவையில் 2000-ஆம் ஆண்டில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில், ஆண்டுதோறும் ஜூன் 20-ஆம் நாள், உலக அகதிகள் தினம் எனக் கடைப்பிடிக்கப்படுகிறது. ‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்!’ என்பதே தமிழர் வாழ்வியல் மரபு.

உலகெங்கும் அகதிகளாக வாழ்பவர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டிய நிலையில், தாய்த் தமிழ்நாட்டை நாடி வந்த இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களின் வாழ்க்கை மேம்பட நமது அரசு உறுதியான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

உத்தேச 21 ஆவது திருத்தத்தின் பல பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை – நீதிமன்றம்

ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த அரசியலமைப்பின் உத்தேச 21 ஆவது திருத்தத்தின் பல பிரிவுகள் அரசியலமைப்பின் பல ஏற்பாடுகளிற்கு முரணானவை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் சர்வஜன வாக்கெடுப்பின் பின்னர் இந்த பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மை மூலம் நிறைவேற்ற முடியும் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.