ஆவணம் தொடர்பில் நாளை இறுதி முடிவு

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பவுள்ள பொது ஆவணம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழு, நாளை அரசியல் குழுவை கூட்டி இது தொடர்பில் இறுதி முடிவை எடுப்பது என தீர்மானித்தது.

13ஆம் திருத்தம் என அறியப்படும், இலங்கை அரசியலமைப்பில் இடம் பெற்றுள்ள ஒரேயொரு அதிகார பரவலாக்கல் சட்டத்தை முழுமையாக அமுலாக்க உரிய அறிவுறுத்தல்களை, இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிரதான தரப்பு என்ற முறையில், இலங்கை அரசாங்கத்துக்கு கொடுங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் சார்பாக எழுதப்பட உள்ள பொது ஆவணக்கடிதம் தொடர்பிலேயே குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக மனோ எம்.பியின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொது ஆவணக்கடிதம் தொடர்பாக, நவம்பர் 2ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற “திண்ணை கலந்துரையாடல்” முதல் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற கலந்துரையாடல்களில் முன்வைக்கப்பட்ட பல்வேறு வரைவுகளின் உள்ளடக்கங்கள் தொடர்பாகவும், அவை தொடர்பில் முன்வைக்கப்பட்ட வாதபிரதிவாதங்கள் தொடர்பாகவும், இன்று மாலை மெய்நிகர் கலந்துரையாடல் மூலம் ஆலோசிக்கப்பட்டதாக தெரியவருகிறது.

இன்றைய மெய்நிகர் கலந்துரையாடலில் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வே. இராத கிருஷ்ணன் ஆகியோர் உள்ளிட்ட தலைமைக்குழு
உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கொரோனா அச்சம் காரணமாக வல்வை பட்டத்திருவிழா இடைநிறுத்தம்!

வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா கொரோனா காரணமாக இடைநிறுத்தப்படுவதாக, ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் வருடாந்திரம் தைப்பொங்கல் தினத்தன்று மாபெரும் பட்டத்திருவிழா இடம்பெறுவது வழமையாகும்.

அந்த வகையில் இம்முறையில் பட்டத்திருவிழாவை நடாத்த ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்திருந்தனர்.

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக நீங்காத நிலையில், பட்டத்திருவிழாவை நடாத்தும் போது, கொரோனா தொற்று அபாயம் அதிகரிக்கும் என பிரதேச மக்கள் அச்சம் தெரிவித்தமையால், பட்டத்திருவிழாவை இடை நிறுத்துவதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

அதேவேளை இம்முறை பட்டத்திருவிழாவிற்கு, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது முழுமையான ஆதரவை தெரிவித்திருந்தமையும், அதனால், பல்வேறு தரப்பினரும் ஏற்பாட்டு குழுவிற்கு தமது கண்டனங்களை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

பரந்த கூட்டணி தேவைப்படும் சந்தர்ப்பத்தில் இருப்பவர்களை ஒதுக்கக்கூடாது: விமல் வீரவன்ச தெரிவிப்பு

பரந்த கூட்டணியொன்று தேவைப்படுகின்ற சந்தர்ப்பத்தில், இருப்பவர்களை ஒதுக்கக்கூடாது என அமைச்சர் விமல் வீரவன்ச இன்று மாலபேயில் தெரிவித்தார்.

மாலபே ஆண்கள் கல்லூரியின் தொழில்நுட்ப கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் அமைச்சர் தினேஷ் குணவர்தன, ஜகத் குமார மற்றும் பிரதீப் உதுகொட ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வு நிறைவு பெற்றதன் பின்னர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் வினவுவதற்கு ஊடகவியலாளர்கள் முயன்றனர்.

இதன்போது ஊடகவியலாளர்களுக்கு பதிலளித்த விமல் வீரவன்ச, முடிந்தால் எதிர்க்கட்சியில் உள்ளவர்களையும் இணைத்துக் கொண்டு தேசிய இணக்கப்பாட்டுடன் நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பரந்த கூட்டணியொன்றை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய தருணமே இதுவென குறிப்பிட்டார்.

அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில், இருப்பவர்களையும் அகற்றிவிடக்கூடாது என சுட்டிக்காட்டினார்.

Posted in Uncategorized

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை நிதியுதவி கோராது! அமைச்சரவையில் எதிர்ப்பு

சர்வதேச நாணய நிதியத்திடம் நிதியுதவி கோருவதற்கான அமைச்சரவைக் கூட்டம் இணக்கமின்றி முடிந்தது. இதனால், சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை நிதியுதவி கோராது என்று தெரியவருகின்றது.

நேற்று முன்தினம் இரவு நடந்த அமைச் சரவை கூட்டத்தில் சர் வதேச நாணய நிதி யத்திடம் நிதி உதவி கோருவதற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் அனுமதி அளிக்கவில்லை என்று தெரிய வருகின்றது.

நிதியுதவிக்காக சர்வதேச நாணய நிதியம் முன்வைக்கும் நிபந்தனை களை அவர்கள் ஏற்கத் தயாராக இல்லா மையே இதற்குக் காரணம் என்று தெரிய வருகின்றது. அரசாங்கம் கோரினால் இலங்கைக்கு நிதி அளிப்பது தொடர்பில் ஆராயப்படும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பணித் தலைவர் மசா ஹிரோ நோசாகி கூறியிருந்தார்.

இந்நிலை யில், அது தொடர்பில் ஆராய்வதற்காக கூடிய அமைச்சரவை இணக்கமின்றி நிறை வடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக் கது.

இந்தியா தமிழ் தேசத்தை அங்கீகரிகும் முகமாக செயற்படவேண்டும் – சுரேஷ்

இந்தியா வடகிழக்கு இணைக்கப்பட்டு ஒரு தமிழ் தேசத்தை அங்கீகரிக்கும் முகமாக தனது அரசியல் நடவடிக்கையை எடுக்கவேண்டும். அதைவிடுத்து தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தூக்கி கொண்டு சீனாவை தடுக்கும் முகமாக நீங்கள் உங்களுடைய முகவர்களை பாவித்து பல கூட்டுக்களையும் பல ஒப்பந்தங்களையும்  செய்து அதன் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற நடவடிக்கையை உடனடியாக நிறுத்தவேண்டும்.  என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு அரசடி பிள்ளையார் வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட காரியலயத்தில் இன்று இடம்;பெற்ற அமரர் மாமனிதர் குமார் பொன்னம்பலம் 22 வது நினைவேந்தல் சுடர் ஏற்றி அஞ்;சலி செலுத்திய பின்னர் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார்.

அந்த கொடிய யுத்தம் நடந்து கொண்ட காலத்திலே தமிழினத்துக்கு நடந்த பல விரோத செயல்களை பல ஊடகங்கள் உண்மையைக் கொண்டுவர பட்டவேளையிலே அந்த காலத்தில் இருந்த அரசின் அடக்கு முறையால் ஊடகம் எல்லாம் தணிக்கை செய்யப்பட்டிருந்தது

அப்போது தமிழ் மக்களுக்கு வடகிழக்கிலே நடந்த கொடூர இனப்படுகொலைகள் கொடூர சம்பவங்கள் அச்சுறுத்தல்கள், காணாமல் போகப் செய்யப்பட்ட விடயங்களை உடனுக்கு உடன் அறிவிப்பதற்கு ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த வேளையிலே மாமனிதர் குமார் பொன்னம்பலம் கொழும்பிலே சிங்கள கோட்டையிலே துணிச்சலுடன் தமிழ் மக்கள் ஒரு நீதிக்காக போராடுகின்றனர்.

தமிழ் மக்கள் ஒரு அடக்குமுறைக்குள் உட்படுகின்றர்கள் அதனை எதிர்த்து தான் தமிழீழ விடுதலைப் புலிகள் போராடுகின்றார்கள். என அந்த ஆயுத போராட்டதை உலகத்துக்கு சர்வதேச ஊடகங்கள் ஊடாக நியாயப்படுத்தி தெரியப்படுத்தி வந்தார். இவ்வாறு செயற்பட்டமையினல் அவர் சந்திரிக்கா அமையார் காலத்தில் அவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

அன்று குமார் பொன்னம்பலம் நீங்கள் யுத்தத்தை நிறுத்தாவிட்டால் இந்த நாடு எதிர்காலத்தில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் தள்ளப்படும் நாட்டுமக்கள் நெருக்கடிக்குள் தள்ளப்படுவார் என கணித்து அன்று கூறினார். அப்போது  இருந்த அரசியல் தலைவர்கள் அவரின் கருத்தை நிராகரித்தனர்.

தமிழ் மக்களுடைய இன விடுதலைப் போராட்டம் ஒரு நியாயமான போராட்டம் சிங்கள மக்கள் போன்று தமிழ் மக்களும் சமமாக வாழவேண்டும் அதற்காகத்தான் போராடுவதாக அன்று குமார் பொன்னம்பலம் அவர் கூறினார் அவ்வாறு பல புத்திஜீவிகள் நியாயப்பாட்டை சொல்லும் போது படுகொலை செய்யப்பட்டனார்.

எனவே அந்த காலத்திலே ஒரு இனத்தை குறிவைத்து அவர்கள் போராடியதால் இன்று இந்த நாடு அதலபாதாளத்திற்கு போயுள்ளது இந்த விடையங்களை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.

பொதுவாக இலங்கை மீது கண்வைத்துள்ள நாடுகள் உங்களுடைய நாடுகளின்; நலன்கருதி கொண்டு இந்த இலங்கை தீவிலே நீங்கள் நினைத்தவாறு அரசியலை நடாத்துவதாக இருந்தால் இதற்கு வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் மக்கள் ஒருபோதும் ஒத்துழைக்கமாட்டோம.;

இங்கே சீனா கால் ஊன்றி இருக்கின்றது சீனாவை தடுக்கும் முகமாக இந்திய தங்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல கூட்டுக்களையும் பல அரசியல் தலைவர்களையும் தங்களுக்கு ஏற்ற மாதிரி பாவித்து ஒட்டு மொத்த தமிழ் மக்களின் நலனை பாதிக்கின்ற வகையில் அவர்கள் செயற்படுகின்றார்கள்.

எனவே நீங்கள் உங்களுடைய முகவர்களை பாவித்து பல கூட்டுக்களையும் பல ஒப்பந்தங்களையும் செய்து அதன் மூலம் மக்களை ஏமாற்றுகின்ற பகல்கனவை நீங்கள் உடனடியாக நிறுத்தவேண்டும்.

எங்களுடைய மக்களின் நியாயமான போராட்டத்தை கருத்தில் கொள்ளாவிட்டால் நிச்சயமாக உங்களுடைய நாட்டிற்கு சீனா அல்ல தெற்காசியாவிலுள்ள பல நாடுகள் உங்களை குறிவைக்கும்.

இந்த நாடு உண்மையிலே சீனாவின் கடன் எல்லைக்குள் அகப்பட்டிருக்கின்றது சீனா வடக்கு கிழக்கில் கால் ஊண்ற எத்தனிக்கின்றது. நாங்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல இந்தியாவின் செல்ல பிள்ளைகளாக நாங்கள் யோசிக்கின்றோம் ஆனால் நீங்கள் அவ்வாறு இல்லை நீங்கள் எங்களை பகடைக்காயாகவும் அடிமைகளாகவும் பாவிக்க எத்தனிக்கின்றீர்கள்

எனவே  அந்த விடையத்தை கையைவிட்டு நீங்கள் கடந்த 70 வருடகாலமாக  போரடிவருகின்ற எமது இந்த மக்களை அடிமைகளாக்க நினைப்பதை கைவிட்டுவிட்டு தமிழ் மக்கள் விரும்புகின்ற வடகிழக்கு இணைக்கப்பட்டு ஒரு சுயநிர்ணயத்துடன் அங்கீகரிகப்பட்ட இறையான்மையுள்ள ஒரு தமிழ் தேசத்தை அங்கீகரிக்கும் முகமாக நீங்க அரசியல் நடவடிக்கையை எடுக்கவேண்டும்

மாறாக ஓற்றை ஆட்சி அரசியல் அமைப்புக்கு எதிராக போராடிவருகின்ற வடக்கிழக்கு தமிழ் மக்களை   அதனை முடக்கும் விதமாக நீங்கள் செயற்படுவதாயின்  மக்கள் புரட்சி வெடிக்கும். அதேவேளை எங்கள் அரசியல் அபிலாiஷகளுக்கு உங்களைத்தாண்டி உலகத்தில் எங்களுடைய கருத்தை ஏற்றுக் கொண்ட நாடுகளுக்கு தெரியப்படுத்துவோம்

இந்திய இலங்கை ஒப்பந்தம் என்பது வெறும் உங்களுடைய நலுனுக்காக இலங்கையை உங்கள் கட்டுப்பாட்டிற்கு வைத்திருக்க போடப்ட்ட ஒப்பதந்தம் தமிழ் மக்கள் நலன்கருதி நீங்கள் போடவில்லை 34 வருடங்களுக்கு மேலாக அன்றே தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒப்பந்தம். எனவே மீண்டும் நீங்கள் பழையதை தூக்கி கொண்டுவந்து தமிழ் மக்களை அழிவு பாதைக்கு இட்டுச் செல்ல நீங்கள் எத்தனிக்க கூடாது  என்றார்.

Posted in Uncategorized

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள் இன்றைய தினம் (புதன்கிழமை ) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை தலைமன்னார் கடற்படையினர் கடந்த மாதம் 19 ஆம் திகதி கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக சட்டத்தரணி எஸ்.டிணேசன் தெரிவிக்கையில், ”குறித்த  12 இந்திய மீனவர்களும் இன்றைய தினம் (புதன்கிழமை ) மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.இவர்களில் சிறுவர் ஒருவரும் அடங்குகின்றார்.

இதன் போது குறித்த மீனவர்களுக்கு எதிராக 3 குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு கடற்தொழில் திணைக்களத்தினால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதன் போது குறித்த மீனவர்கள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், மூன்று குற்றச்சாட்டுக்களுக்கும் ஒரு வருட சாதாரண சிறை தண்டனை வழங்கப்பட்டதோடு, குறித்த சிறை தண்டனை 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் குறித்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

குறித்த மீனவர்களில் சிறுவர் ஒருவர் உள்ளமையினால் நிபந்தனையின் அடிப்படையில் எச்சரிக்கப்பட்டு, குறித்த சிறுவன் தனது கல்வியை தொடர வேண்டும் என நீதவான் அறிவுறுத்தியதோடு குறித்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் இலங்கைக்கான இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

ஆரியகுளத்தின் உரிமையை உறுதிப்படுத்துங்கள் மாநகர ஆணையாளருக்கு ஆளுநர் கடிதம்!

யாழ்ப்பாணம், ஆரியகுளத்தில் பொதுமக்களின் சமய உரிமையை மீறும் வகையில் செயற்படும்  அதிகாரம் மாநகர சபைக்குக் கிடையாது என சாரப்பட – மாநகர சபையை அச்சுறுத்தும் பாணியில் யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளருக்கு வடக்கு மாகாண ஆளுநர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

யாழ். மாநகர முதல்வரின் ஏற்பாட்டில் தனியார் நிதிப் பங்களிப்புடன் ஆரியகுளம் அழகுபடுத்தப்பட்டு, பொழுதுபோக்குத் திடலாகப் பொது மக்களின் பாவனைக்குத் திறந்து விடப்பட்டிருந்தது.

ஆரியகுளப் புனரமைப்புப் பணிகளின் போது, மதச் சின்னங்களை நிறுவுவதில் இழுபறி நிலை தோன்றியிருந்த நிலையில், எந்தவொரு மத அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான கட்டமைப்பெதனையும் அமைப்பதில்லை என மாநகர சபையில் தீர்மானம் இயற்றப்பட்டிருந்தது.

எனினும், அரசியலமைப்பின் படி மத அனுட்டானங்களைத் தடுக்கும் அதிகாரம் சபைக்கு இல்லை என சுட்டிக் காட்டியிருக்கும் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, ஆரியகுளம் மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்டது தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் உரித்து ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறும் மாநகர ஆணையாளரைப் பணித்திருக்கிறார்.

மேலும்,  சமயத்தைப் பின்பற்றும் உரிமை தொடர்பில் மாநகர சபை உறுப்பினர்களுக்கு மேலதிக விளக்கங்கள் தேவைப்படின் தன்னைச் சந்திப்பதற்கு ஆலோசனை வழங்குமாறும் அந்தக் கடிதத்தில் ஆளுநர் குறிப்பிட்டிருக்கிறார்.

Posted in Uncategorized

இலங்கைக்கு ஏற்படவுள்ள நிலை – பிரித்தானிய ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

2022ஆம் ஆண்டில் இலங்கை திவாலாகும் அபாயம் உள்ளதாக பிரித்தானிய பத்திரிகையான தி கார்டியன் தெரிவித்துள்ளது.

அன்னிய கையிருப்பு வறண்டு கிடப்பதாலும், வரலாறு காணாத பணவீக்கம் காரணமாகவும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நான்கு இலங்கையர்களில் ஒருவர் கூடிய விரைவில் நாட்டை விட்டு வெளியேற தயாராகி வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள பெரும்பான்மையான குடும்பங்கள் தமது வருமானத்திற்கான அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் பாரிய பொருளாதார சவாலை எதிர்நோக்கி வருவதாகவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

தமிழினத்திற்கு எதிராக வாங்கிய கடன் இலங்கையை சர்வதேசத்திடம் பிச்சையெடுக்க வைத்துள்ளது : சுரேஷ் க.பிறேமச்சந்திரன்

சிங்கள-பௌத்த மேலாதிக்க வாதத்தின் மூலம் ஆட்சியை கைப்பற்றித் தக்க வைத்துக்கொள்ளுவதற்காக இலங்கையின் ஆட்சியாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாகவே இன்று மக்களின் ஆணையை மீறி சர்வதேசத்திடம் அடகு வைப்பதற்கும் பிச்சையெடுப்பதற்கும் இலங்கையைத் தள்ளியுள்ளது என்று இலங்கையின் இன்றைய பொருளாதார நிலைகுறித்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிறேமச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

நாட்டின் இன்றைய பொருளாதார நிலைகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் மிக மோசமாக வீழ்ச்சியடைந்திருக்கிறது என்பதை நாட்டு மக்களும் சர்வதேச சமூகமும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். ஆளுந்தரப்பு அமைச்சர்களே மக்களை அச்சுறுத்தும் வகையிலும் எச்சரிக்கும் வகையிலும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி குறித்துப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

எத்திரணியிலிருக்கக்கூடியவர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு புதிய தேர்தலுக்குப் போகுமாறு வலியுறுத்துகின்றார்கள். ஆனால் அரசாங்கம் பொருளாதார வீழ்ச்சிக்கு கோவிட்-௧௯ நோய்த்தொற்று தான் காரணம் என்று ஒரே மந்திரத்தையே உச்சாடனம் செய்கிறது.

ஆனால் உண்மையான காரணம் அது மாத்திரம் தானா? இந்த நாட்டில் கடந்த முப்பது ஆண்டுக்கால அழிவு யுத்தத்திற்கு இவர்கள் செலவிட்ட ஆயிரக்கணக்கான பில்லியன் டொலர்கள் பொருளாதார வளர்ச்சிக்காகப் பாவிக்கப்பட்டிருந்தால் இந்த நாடு சொர்க்க புரியாக மாறியிருக்கும்.

இதற்கு மாறாக இனவாதமும் மேலாதிக்க சிந்தனையும் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினைக்கு அழிவு யுத்தத்தையே அரசாங்கம் தீர்வாகக் கொண்டிருந்தது. இலங்கை அரசு தமிழ் மக்கள் மேல் கட்டவிழித்துவிட்ட யுத்தத்தால் அவர்கள் சாதாரணமாகப் பாதிக்கப்படவில்லை. பலபத்தாண்டுகளாக அவர்கள் அறிவிக்கப்படாத பொருளாதாரத் தடையின்கீழ் வாழ்ந்துவந்தார்கள்.

இதன் உச்சக்கட்டமாக இறுதி யுத்த காலப்பகுதியில் தாலிக்கொடியை விற்று பால்மா வாங்கியதும், பொது இடங்களில் கஞ்சித்தொட்டியை வைத்து மக்களுக்குக் கஞ்சி ஊற்றியதும், சிறிய சத்திர சிகிச்சை மூலம் குணப்படுத்த வேண்டிய காயங்களை மருந்தின்றியும் உரிய மருத்துவமனைகளின்றியும் அங்கங்களை அறுத்தெறிந்ததும் நாங்கள் அனுபவித்த சொல்லொணா துன்பங்கள்.

இன்று அதே நிலை ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் வந்துவிடுமோ என்று நாம் கவலையடைகின்றோம். இலங்கையின் சமகால பொருளாதார வீழ்ச்சியென்பது வெறும் கோவிட் இனால் மட்டும் ஏற்பட்டது அல்ல. இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து உள்நாட்டில் ஆதிக்க சக்திகள் ஏற்படுத்திக்கொண்ட இனவாதங்களும் ஒடுக்குமுறைகளும் சமச்சீரற்ற பொருளாதார முன்னெடுப்புகளும் இதை வறிய நாடு என்ற பட்டியலுக்குள்ளேயே வைத்துக்கொண்டிருந்தது. யுத்தம் முடிவடைந்ததற்குப் பின்னரும் இன்று வரையில் பாதுகாப்பு செலவீனம் என்பது யுத்த காலத்திலும் பார்க்க அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

இதைப்பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பியபோது யுத்தத்திற்காக வாங்கிய கடன்களை அடைக்க வேண்டியிருக்கிறது என்றும் அதற்காகவே பாதுகாப்புச் செலவீனம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது. யுத்தம் முடிந்து பன்னிரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் யுத்தத்திற்காக வாங்கிய கடன்கள் அடைக்கப்பட்டுவிட்டதா என்ற கேள்வியும் எழுகின்றது.

இலங்கை போன்ற சிறிய நாட்டில், ஏறத்தாழ மூன்று இலட்சம் இராணுவமும், இதனைவிடவும் கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் ஆளணியும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. ஆளும் தரப்போ எதிர்த்தரப்போ இத்தகைய செலவீனங்கள் குறைக்கப்பட வேண்டும் என்று எப்பொழுதாவது பேசியிருக்கின்றார்களா?

உலகநாடுகள் அனைத்திலும் கடன் பெறுவதற்கான முயற்சிகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. கடன் வாங்கி, வாங்கிய கடனை கட்டுவதும் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதற்காகக் கடன் வாங்குவதுமாகத்தான் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடு இருக்கின்றது. சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவதா வேண்டாமா என்ற பட்டிமன்றமும் நடைபெற்றுவருகின்றது.

இப்பொழுது பங்களாதேஷ், இந்தியா, சீனா தொடக்கம் உலக நாடுகள் முழுவதிலும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி அலைகிறார்கள். புத்த பகவான் பிக்குகள் பிச்சைப் பாத்திரம் ஏந்தியே மக்களிடமிருந்து உணவைப் பெறவேண்டும் என்று போதித்துள்ளார். இன்று பௌத்த மேலாதிக்கத்தில் திளைத்திருக்கும் இலங்கை அரசாங்கம் ஒட்டு மொத்த மக்களையும் பிச்சைப்பாத்திரம் ஏந்த வைத்துள்ளது.

இன்று எல்லா வகையிலும் தோல்வியுற்ற ஒரு அரசாங்கமாக மாத்திரமல்லாமல், நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான எத்தகைய வழியுமின்றி தவிக்கும் வீழ்ச்சியடைந்த ஒரு அரசாங்கமாகவும் இன்றைய அரசாங்கம் மாறியிருக்கிறது. கடந்த ரணில்-மைத்திரி ஆட்சிக்காலத்தில் ‘உங்களால் நாட்டை ஆட்சி செய்ய முடியாவிட்டால் ஆட்சியை எங்களிடம் ஒப்படையுங்கள் நாங்கள் நாட்டை பொருளாதார ரீதியில் வளப்படுத்துகிறோம்’ என்று சவால் விட்டிருந்தார்கள்.

இன்று அவர்களே மக்கள் ஆதரவுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்துள்ளனர். இவர்களால் நாட்டை சோமாலியாவைவிட மோசமான நிலைக்குத் தள்ளியதைத் தவிர வேறு எதைச் சாதிக்க முடிந்தது? இந்த நாட்டை வளப்படுத்த வேண்டும், பொருளாதார ரீதியாக முன்னேற்ற வேண்டும் என்று கருதினால் பல்வேறுபட்ட மாற்றங்களைச் செய்வதற்கு இலங்கை அரசும், எதிரணியினரும் தயாராக இருக்க வேண்டும்.

முதலாவதாக இது சிங்கள பௌத்த நாடு என்ற மேலாதிக்க சிந்தனையை விடுத்து, அனைத்து மக்களும் சமத்துவமாக வாழ்வதற்கான அடிப்படைகளை உருவாக்க வேண்டு;ம். இரண்டாவதாக இனங்களிடையேயும், மதங்களிடையேயும், உழைக்கும் வர்க்கத்தினரிடையேயும் மோதல்களை உருவாக்கி அவற்றினூடாக வாக்குகளைக் கபளீகரம் செய்யும் நிலைவரங்களைக் கைவிட வேண்டும்.

இந்த நாட்டில் இருக்கக்கூடிய தேசிய இனங்கள் தங்கள் அபிவிருத்திகளைத் தாமே செய்யக்கூடிய வகையில் அவர்களுக்கான அதிகாரங்களை வழங்க வேண்டும். இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் தடையாக இருக்கக்கூடிய முப்படைகளின் அதிகரிப்பை நிறுத்துவதுடன் அவற்றை இயன்றவரை எவ்வாறு குறைக்கலாம் என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும்.

இலங்கையின் வெளி விவகாரக் கொள்கைகளை நாட்டு நலனுக்கேற்பவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றவகையிலும் உருவாக்கிக் கொள்ள வேண்டுமே தவிர, தரகுப் பணம் வருகிறதே என்பதற்காக நாட்டை வல்லரசுகளிடம் விற்றுவிடக்கூடாது. ஆகவே இலங்கையின் பொருளாதாரத்தைத் திட்டமிடுபவர்கள் யாராக இருந்தாலும், மேற்கண்ட விடயங்கள் அனைத்தும் கவனத்தில் எடுக்கப்பட்டு திட்டங்கள் தயாரிக்கப்படாவிட்டால், உலக நாடுகளிடம் பிச்சை எடுப்பதென்பது தவிர்க்க முடியாததாகிவிடும்.

ஆட்சி மாறவேண்டும், பொருளாதாரம் வளம்பெற வேண்டும் என்பதிலும் நாங்கள் ஒருமித்த கருத்துள்ளவர்களாகவே இருக்கின்றோம். வரப்போகின்றவர்கள் எவ்வாறு இதனை மாற்றியமைக்கப்போகின்றார்கள் என்பதுதான் கேள்வி. வெறுமனே ஆட்சி மாற்றம் மட்டும் பிரச்சினைக்குத் தீர்வாகாது. இந்த நாட்டு மக்கள் பசி, பட்டினி, பஞ்சம் ஆகியவற்றிலிருந்து காப்பாற்றப்படவேண்டும்.

அதற்கு இன, மத, மொழி வேறுபாடின்றி நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். சகல தொழிற்சங்கங்களும் ஒன்றிணைய வேண்டும். நாட்டில் இன்று எரிவாயு தட்டுப்பாடு, எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு, அடுத்துவரும் வாரங்களில் எரிபொருள் இறக்குமதி பாதிக்கப்படக்கூடிய சூழல், அதனால் ஏற்படக்கூடிய மின்சார வினியோகத் தடை, தற்போது சமையல் எரிவாயுவிற்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் மண்ணெண்ணெய்க்கும் வரப்போகும் தட்டுப்பாடு, போன்றவற்றால் அரச ஊழியர்களும் தனியார் துறை ஊழியர்களும் உரிய நேரத்திற்குப் பணிக்கு வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்படப்போகின்றது. இந்த அபாயங்களைப் புரிந்துகொண்டு சகல அரசியல் கட்சிகளும் செயற்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.

யாராவது பின்வாங்க விரும்பினால் அல்லது கையொப்பம் இடமறுத்தால்அவர்களை விலத்தி வரைபை கையொப்பமிட்டு அனுப்புவோம்; வினோ எம்பி!

இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்புவதற்காக ரெலோ எடுத்த முயற்சியில் இருந்து யாராவது பின்வாங்க விரும்பினால் அல்லது கையொப்பம் இடமறுத்தால் அது யாராக இருந்தாலும் அவர்களை விலத்திவைத்துவிட்டு அந்தவரைபை கையொப்பம் இட்டு அனுப்புவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்வோம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.

வவுனியாவில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்..

அனைத்து கட்சிகளும் இணைந்து தயாரித்த வரைபை தமிழரசுக்கட்சி முற்றாக நிராகரிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

எனினும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா இன்னும் ஓரிருநாட்கள் பிந்தினாலும் கூட இறுதிவரைபை தயாரித்து அனைவரும் கையொப்பம் இட்டு இந்தியப்பிரதமருக்கு அனுப்புவதாக உறுதிமொழி அளித்துள்ளார்.

எனவே இந்த விடயத்தில் யார் கையொப்பம் இடுவது, யாரை தவிர்ப்பது, யார் விலகிக்கொள்வார்கள் என்பது இன்னும் ஓரிருநாட்களில் தெரியவரும்.
ஆயினும் தமிழீழ விடுதலை இயக்கம் எடுத்த முயற்சியினை ஒருபோதும் கைவிடப்போவதில்லை.

இந்த முயற்சியில் இருந்து யாராவது பின்வாங்க விரும்பினால் அல்லது கையொப்பம் இடமறுத்தால் அது யாராக இருந்தாலும் அவர்களை விலத்தி வைத்துவிட்டு இந்த வரைபை கையொப்பம் இட்டு அனுப்புவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்வோம்.

வார்த்தை பிரயோகங்களை சாட்டாகவைத்துக்கொண்டு தமிழரசுக்கட்சி ரெலோ எடுத்த முடிவிற்குப்பின்னால் நாங்கள் செல்வதா என்ற சிறுபிள்ளைத்தனமான அல்லது தமிழ்மக்களை ஏமாற்ற நினைக்கின்ற இந்த செயற்பாட்டினை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் விளைவுதான் 13 வது திருத்தம். ஆகவே ஒன்றுக்கொன்று முடிச்சுப்போட்டு அதுவேறு இதுவேறு, தலைப்பு வேறு, வார்த்தை பிரயோகங்கள் வேறு என்று சொல்வது சிறுபிள்ளைத்தனமானது.

இந்தியாவின் பங்களிப்பில்லாமல் எமது அரசியல் ரீதியான பிரச்சனைக்கு நிச்சயமாக நிரந்தரமான அரசியல் தீர்வு கிடைக்கப்போவதில்லை. அதை உணர்ந்து அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளும் செயற்பட வேண்டும்.
அந்த வகையிலேயே இந்த முயற்சியினை எடுத்துள்ளோம் இது நிச்சயம் வெற்றிபெறும்.

இந்த விடயத்தில் எந்தவொரு ஆலோசனையும் இந்தியாவிடமிருந்து நாம் பெறவில்லை. இந்தியா எமக்கு எந்தவித அழுத்தங்களையும் வழங்கவில்லை.

ஆனால் நாம் பாதிக்கப்பட்ட இனம் என்றவகையில் கடந்தகாலங்களில் அரசியல் ரீதியாகவோ அல்லது வேறு வழியிலோ எமக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள் என்ற ரீதியில், அவர்களால் கொண்டுவரப்பட்ட சர்வதேச ஒப்பந்தம் என்ற ரீதியில் அழுத்தங்கள் என்பதற்கு அப்பால் தமிழ்மக்களின் விடுதலைக்காக செய்கின்ற பெரிய கைங்கரியமாக இதனை பார்ப்பதாக தெரிவித்தார்.