தனித்து போட்டியிட சுதந்திர கட்சி தீர்மானம்

எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் தனி கட்சியாக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷமன் பியதாச தெரிவித்தார்.

ஸ்ரீ.ல.சு.க.வை வலுப்படுத்த கிராம மட்டத்தில் ஏற்கனவே பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

“ஒரு கட்சியாக எங்களுக்கு முக்கிய தேவை அதிகாரத்தைக் கைப்பற்றுவதாகும். மாகாண சபைத் தேர்தல் வரும்போது, ​​நாங்கள் ஒரு கட்சியாக போட்டியிட தயாராக இருக்கிறோம்.

Posted in Uncategorized

தமிழ் அரசியல் கைதிகளுக்கு அமைச்சர் டக்ளசின் சிபாரிசில் மன்னிப்பு வழங்க முடியாதா? – ரெலோ செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் கேள்வி

யாழ். மாநகர முதல்வரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசின் பேரில் விடுவிக்க முடியுமாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளை ஏன் அவ்வாறு விடுவிக்க முடியாது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், யாழ். முதல்வர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசில் முதல் தடவை மன்னிப்பாக ஜனாதிபதியால் விடுவிக்கப்படுகிறார் என செய்திகள் வெளியாகியிருந்தன.

அவ்வாறு, மீன்பிடித்துறை அமைச்சரின் சிபாரிசில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்த யாழ். மாநகர முதல்வரை விடுதலை செய்ய முடியுமாக இருந்தால், பல ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை அவ்வாறான சிபாரிசில் மன்னித்து ஏன் விடுதலை செய்ய முடியாது” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

மைத்திரி – மகிந்த சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று கொழும்பிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தி​ல் இடம்பெற்றுள்ளது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களும் இச்சந்திப்பில் கலந்துகொண்டதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பில் தற்​போதைய அரசியல் நிலைமைகள் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

அரசாங்கத்தின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளன – அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு

இலங்கை அரசாங்கங்களினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் முழுமையான நிறைவேற்றப்பட வேண்டியுள்ளன என்று இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவர் அலைய்னா பி.டெப்லிட்ஸ் வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அல்லது மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான நீதிப் பொறிமுறையொன்றை ஸ்தாபித்தல் போன்ற வாக்குறுதிகளும் இன்னமும் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம், இலங்கையின் மனித உரிமைகள் பற்றிய ஏனைய கவலைகள் எழுந்துள்ளன. ஆட்சிமுறையின் ஜனநாயக பண்புகளை நிலைநாட்டி, சட்டத்தின் ஆட்சியை மதிப்பதோடு சிறுபான்மையின சமூகங்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தெற்காசியாவின் மிகப் பழைய ஜனநாயக தேசத்தின் ஜனநாயக நண்பன் என்ற வகையில் அமெரிக்கா இலங்கையிடத்தில் இந்த விடயங்களை எதிர்பார்க்கிறது என்றார்.

அமெரிக்காவில் மாற்றத்தை ஏற்படுத்த 6 மில்லியன் டொலர்களை செலவிட்ட சிறீலங்கா

சிறீலங்காவுக்கு ஆதரவான நிலை ஒன்றை அமெரிக்காவில் ஏற்படுத்தும் நோக்கத்துடன் அமெரிக்காவின் தொழிலதிபர் ஒருவருக்கு 6.5 மில்லியன் டொலர்களை சிறீலங்கா அரசு வழங்கியது தற்போது தெரியவந்துள்ளது.

2014 ஆம் ஆண்டு சிறீலங்காவின் மத்திய வங்கி ஊடாக இந்த பணப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் சிறீலங்காவினால் இந்த பணிக்கு அமர்த்தப்பட்ட இமாட் சூபேரி என்ற தொழிலதிபர் ஒரு புலனாய்வு அதிகாரியாவார்.

தற்போது அமெரிக்காவின் நீதி மன்ற விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இந்த அதிகாரி புதிய நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து அதன் ஊடாகவே சிறீலங்காவில் இருந்து பணத்தை பெற்றதாகவும், அதில் பெரும்பகுதியை அவரும் அவரின் மனைவியும் செலவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

இலங்கையுடன் ‘ஏயர் பபுள்’ விமான சேவையை ஏற்படுத்தியுள்ள இந்தியா

இரு நாடுகளுக்கிடையில் சிறப்பு சர்வதேச பயணிகள் விமானங்களை இயக்க இலங்கையுடன் இருதரப்பு ‘ஏயர் பபுள்’ விமான சேவையை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கிடையேயான இந்த ஒப்பந்தத்தின் கீழ், சிறப்பு சர்வதேச பயணிகள் விமானங்களை தங்களது விமான நிறுவனங்கள் ஒருவருக்கொருவர் எல்லைகளுக்குள் கட்டுப்படுத்தக்கூடிய நிலைமைகளின் கீழ் இயக்க முடியும்.

இலங்கை மாத்திரமன்றி ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, ஈராக், ஜப்பான், மாலைத்தீவு, நைஜீரியா, கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 28 நாடுகளுடன் இந்தியா தற்சயம் அத்தகைய ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தனது டுவிட்டர் பதிவில்,

இந்தியா இலங்கையுடன் ஒரு ‘ஏயர் பபுள்’ விமான சேவை ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது, இது சார்க் பிராந்தியத்தில் இதுபோன்ற 6 ஆவது ஏற்பாடாகவும், மொத்தம் 28 ஆவது இடமாகவும் அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக 2020 மார்ச் 23 முதல் இந்தியாவில் திட்டமிடப்பட்ட சர்வதேச விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

எனினும் சிறப்பு சர்வதேச பயணிகள் விமானங்கள் கடந்த ஆண்டு மே முதல் வந்தே பாரத் மிஷனின் கீழ் மற்றும் ஜூலை முதல் இருதரப்பு ஏயர் பபுள் ஏற்பாடுகளின் கீழ் இயங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

நான்கு நாடுகளில் இருந்து இஸ்லாமிய மத போதகர்கள் இலங்கைக்குள் நுளைவதற்குத் தடை

பாகிஸ்தான், கட்டார், குவைத் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து இஸ்லாமிய மத போதகர்கள் இலங்கை வருவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த நாடுகளில் இருந்து இலங்கைக்கு மத போதகர்களை வரவழைத்த 32 இஸ்லாமிய அமைப்புகள் தொடர்பாக அரச புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 1800 இஸ்லாமிய மத போதகர்கள் இலங்கைக்கு வந்துள்ளதாக அரசாங்கம் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர்கள் பேருவளை, அக்கரைபற்று, காத்தான்குடி, மாதம்பை, மூதூர் ஆகிய பிரதேசங்களுக்கு சென்று மத போதனைகளை நடத்தியுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளதாக தெரியவிக்கப்படுகிறது.

உள்நாட்டு சர்வதேச ஒத்துழைப்பு இல்லாது உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்த முடியாது : ரெலோ செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உள்நாட்டு சர்வதேச ஒத்துழைப்பு இல்லாமல் நடத்த முடியாது. அத்துடன் தாக்குதலுக்கு முன்னர் நாட்டில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தாமல் அதனை புலிகளின் மீது சுமத்தி பாதுகாப்பு துறை வேடிக்கை பார்த்துள்ளார்கள் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான ஆறாவதுநாள் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஏப்ரல் தாக்குதல் சாதாரணமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாக இருக்க முடியாது. அதற்கு உள்நாட்டு சர்வதேச ஒத்துழைப்புகள் இருந்திருக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் இதனை நடத்தமுடியாது.

அதேபோன்று ஏப்ரல் தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் பல தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. அந்த சம்பவங்கள் அனைத்தையும் விடுதலை புலிகளின் மீது சுமத்தி பாதுகாப்பு படையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

வடக்கில் இடம்பெற்ற மோட்டார் கைக்கிளில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பானது ஏப்ரல் தாக்குதலுக்கான பரீட்சாத்த நடவடிக்கையாகவும் இருந்திருக்கலாம். இந்த சம்வவங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு என்ன நடந்தன.

மேலும் ஏப்ரல் தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான் உட்பட குண்டுதாரிகளில் அதிகமானவர்கள் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக சம்பளம் பெற்றுக்கொண்டவர்கள் என்பது தற்போது வெளிப்படையாகி இருக்கின்றது. அதனால் அப்போதைய அரசாங்கத்தை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இந்த தாக்குதலை பயன்படுத்தி இருக்கலாம்.

அத்துடன் ஏப்ரல் தாக்குதலின்போது 8 குண்டுகளே வெடிக்கப்பட்டன. அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்க கர்த்தினால் மெல்கம் ரஞசித் குரல் கொடுத்து வருகின்றார். அதனை நாங்கள் வரவேற்கின்றோம். அதேபோன்று வடக்கு கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தில் ஆயிரக்கணக்கான குண்டுகள் வெடிக்கப்பட்டன. தேவாலயங்கள் தாக்கப்பட்டன. அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவும் கர்த்தினால் மெல்கம் ரஞ்ஜிசி குரல் கொடுக்கவேண்டும்.

மேலும் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு 2009 இல் முடிவடையும்வரை இந்த நாட்டில் முஸ்லிம் மக்கள் ஆட்சியில் இருந்து அரசாங்கங்களால் பாராட்டப்பட்டு வந்தனர். ஆனால் 2009 க்கு பின்னர் ஆட்சியில் இருந்து அரசாங்கங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட ஆரம்பித்தன. அந்த நடவடிக்கை இன்றுவரைக்கும் இடம்பெறுகின்றது.

முஸ்லிம்களின் மத கலாசாரத்தின் மீது கைவைத்தார்கள். அவர்களின் பொருளாதாரத்தின் மீது கைவைத்தார்கள். பல நெருக்கடிகளை கொடுத்து வந்தார்கள். கொராேனாவில் மரணிப்பவர்களை அடக்கம் செய்யும் உரிமையையும் பறித்தார்கள்.

எனவே நாட்டில் இடம்பெற்ற 83 கலவரம் ஒரு சிறிய இனவாத குழுவாலே ஆரம்பிக்கப்பட்டதாகும் அதனை தடுக்க தவறியதாலே அது யுத்தம் வரைக்கு சென்றது. அதனால் அவ்வாறான இனவாத குழுக்களின் நடவடிக்கைகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதா அல்லது நாட்டில் மீண்டும் இனவாத பிரச்சினை ஒன்றை ஏற்படுத்துவதா என்பதை அரசாங்கம் தீர்மானிக்கவேண்டும் என்றார்.

யாழ். மாநகர சபை முதல்வருக்கு பிணை வழங்கியது அரசாங்கமா, நீதிமன்றமா?

யாழ். மாநகர சபை முதல்வர் மணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா, நீதிமன்றமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) தெரிவிக்கையில், “யாழ். மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், நேற்றிரவு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் பிணையில் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னதாகவே அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, மணிவண்ணனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு அளிப்பதாகத் தன்னிடம் கூறியதாக ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மணிவண்ணன் நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னராகவே, மணிவண்ணன் பிணையில் விடுதலை செய்யப்படுவார் என்றும் அவர் மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட மாட்டாது எனவும் சாதாரண சட்டத்தின் கீழேயே வழக்கு தொடரப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

அமைச்சரின் இந்தக் கூற்று இந்த நாட்டில் நீதிமன்றங்களும், பொலிஸாரும் பெயரளவில் மட்டுமே இருக்கின்றனவா என்ற கேள்வியையும் ஜனாதிபதியினதும் அவரின் அரசாங்கத்தினதும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்பவே அவை செயற்படுகின்றனவா என்ற கேள்வியையும் ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை, மணிவண்ணன் அரசியல் உள்நோக்கம் கருதி, வேண்டுமென்றே கைது செய்யப்பட்டிருக்கின்றார் என்ற உண்மையையும் அமைச்சரின் கூற்று வெளிப்படுத்தி நிற்கின்றது. மணிவண்ணனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு அளித்தது உண்மை என்றால், மணிவண்ணன் ஏதோ தவறு செய்துள்ளார் எனறே அர்த்தப்படும்.

ஆனால், மணிவண்ணன் செய்தது தவறு என்று பொலிஸாரினால் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியவில்லை. ஆகவே, ஜனாதிபதி என்ன அடிப்படையில் மணிவண்ணனுக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார்?

அமைச்சர் ஏற்கனவே கூறியதுபோல, மணிவண்ணன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் அவர் மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

ஆனால், யாழ்ப்பாண நீதிமன்றத்தில் பொலிஸார் மற்றும் மணிவண்ணன் தரப்பு வாதப் பிரதிவாதங்களைக் கேட்டு அறிந்த பின்னரேயே மணிவண்ணன் பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக அறிகின்றேன்.

ஆனால், மணிவண்ணனுக்கு ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தேவானந்தா கூறியிருப்பதும் மணிவண்ணன் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லப்படுவதற்கு முன்னதாகவே அவர் பிணையில் விடுதலை செய்யப்படுவார் என்றும் பொலிஸார் இவ்வாறுதான் நடந்து கொள்வார்கள் என்றும் அமைச்சர் முன்னதாகவே கூறியிருப்பது, இந்த நாட்டில் பொலிஸ் திணைக்களமும் நீதிமன்றங்களும் எந்தளவுக்குச் சுயாதீனத்தை இழந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதற்கான ஆதாரமாகக் காணக்கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறான செயல்களை பொலிஸ் திணைக்களத்தையும் நீதிமன்றங்களையும் அவமதிக்கும் செயற்பாடுகளாகவும் கொள்ள முடியும்.

இதுதொடர்பாக, ஜனாதிபதியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.

அதிகாரத்தில் உள்ளவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பவே பொது மக்கள் இம்சைப்படப் போகின்றார்கள் என்றால் நீதிமன்றங்கள் எதற்காக?

அத்துடன் பொலிசார் மக்களுக்கான பொலிசாரா அல்லது ஜனாதிபதியின் கையாட்களா? விடை வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

அரசாங்கம் குறைப்பாடுகளை திருத்திக்கொள்வது அவசியம் – திஸ்ஸ விதாரண

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியை பலவீனப்படுத்துவது எமது நோக்கல்ல.

ஆளும் கட்சிக்கும், பங்காளி கட்சிக்குமிடையில் கருத்து வேறுப்பாடுகள் காணப்படுகின்றன. முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பதற்காகவே பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். அரசாங்கத்தின் செயற்பாடுகளில் உள்ள குறைப்பாடுகளை திருத்திக் கொள்வது அவசியமாகும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று முன்தினம் இரவுபெற்ற பங்காளி கட்சி தலைவர் கூட்டத்தில் இடம் பெற்ற சந்திப்பு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொதுஜன பெரமுன தலைமையில் கூட்டணியில் கூட்டணிய அமைத்துள்ள பங்காளி கட்சிகள் இடம் பெற்று முடிந்த பொதுத்தேர்தலிலும் , ஜனாதிபதி தேர்தலிலும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளன. இருப்பினும் பொதுஜன பெரமுனவின் ஒரு சில உறுப்பினர்களின் கருத்துக்களும், செயற்பாடுகளும் பங்காளி கட்சிகளை புறக்கணிப்பதாகவும் அமைகின்றன.

அரசாங்கத்தை பலவீனப்படுத்துவது பங்காளி கட்சிகளின் நோக்கமல்ல, ஒரு சில வெறுக்கத்தக்க பேச்சுக்கள் கூட்டணியை பலவீனப்படுத்துவதாக காணப்படுகிறது. இவ்விடயம் குறித்து கூட்டணியின் சிரேஷ்ட தலைவர்களுக்க பல முறை குறிப்பிட்டும் எவ்வித சாதகமான தீர்மானமும் கிடைக்கப் பெறவில்லை.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் 12 அரசியல் கட்சி தலைவர்களை உள்ளடக்கிய பேச்சுவார்த்தையின் போது மாகாண சபை தேர்தல் முறைமை குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது. எல்லை நிர்ணய பிரச்சினைக்கு தீர்வு காணாமல் மாகாண சபை தேர்தலை பழைய தேர்தல் முறைமையில் நடத்த இடமளிக்க முடியாது.

சுபீட்சமாக எதிர்கால கொள்கை திட்டத்தை முழுமையாக செயற்படுத்த வேண்டுமாயின் அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும். ஆளும் தரப்பின் ஒரு சிலரது வெறுக்கத்தக்க பேச்சுக்கள் கூட்டணியை பலவீனப்படுத்துகிறது. முரண்பாடுகளை ஏற்படுத்தி கூட்டணியை பலவீனப்படுத்தி 2014 ஆம் ஆண்டு காணப்பட்ட அரசியல் சூழலை ஏற்படுத்துவது ஆளும் தரப்பின் ஒரு சிலரது நோக்கமாக காணப்படுகிறது.

அரசாங்கத்தின் செயற்பாடுகளில் ஒரு சில குறைப்பாடுகள் காணப்படுகின்றன. குறைப்பாடுகளை திருத்திக்கொண்டு ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும். கடந்த காலங்களில் இடம் பெற்ற ஒரு சில செயற்பாடுகள் அரசாங்கத்திற்கு பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெனிவா விவகாரத்தை அரசாங்கம் கையாண்ட விதம் முற்றிலும் தவறு என்பது பேச்சுவார்த்தையின் போது சுட்டிக்காட்டப்பட்டது என்றார்.