அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகக் குடியேறிய 46 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முயன்ற போது கைது செய்யப்பட்ட 46 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

குறித்த குழுவினர் இன்று பிற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.இவர்கள் சிலாபத்தில் வசிப்பவர்கள் என்பதுடன், ஐந்து வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகளும் குழுவில் உள்ளனர்.

இன்று காலை 8:40 மணிக்கு விமானத்தில் கொக்கோஸ் தீவில் இருந்து இலங்கையர்கள் குழு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.விமானத்தில் 100 அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகளும் இருந்தனர்.

குறித்த நபர்கள் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகளால் பண்டாராநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வருகை தந்துள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதனையடுத்து 46 இலங்கையர்களும் பண்டாராநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

குறித்த நபர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Posted in Uncategorized

அரசியலமைப்பு திருத்தங்கள் ஆட்சியாளர் அதிகாரம் பெறவே மக்கள் நன்மைக்காக அல்ல! – சபா குகதாஸ்

அரசியலமைப்பு திருத்தங்கள் ஆட்சியாளர் அதிகாரம் பெறவே மக்கள் நன்மைக்காக அல்ல என்று வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

தற்கால அரசியல் நிலைமைகள் குறித்து கருத்து வெளியிடுiகிலேயே இதனை அழவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அரசியல் அமைப்புத் திருத்தம் என்பது மாறி மாறி வரும் ஆட்சியாளர்கள் தமக்கான அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள மேற் கொள்ளப்படுகிறதே தவிர மக்களின் அல்லது நாட்டின் நலன்கள் கருதியவை அல்ல இதற்கு கடந்தகால திருத்தங்கள் சிறந்த உதாரணங்களாகும்.

1978 ஆண்டு கொண்டுவரப்பட்ட இரண்டாம் குடியரசு அரசியலமைப்பே தற்போது நடைமுறையில் உள்ளது இதன்ஆரம்பப் பிரசவமே சர்வாதிகாரத் தன்மை கொண்டதாக மக்களின் கருத்துக்களை உள்வாங்காது உருவாக்கப்பட்டது இந்த அரசியலமைப்பு 44 ஆண்டுகளில் 21 திருத்தத்தை கடந்து செல்கின்றது.

பௌத்த சிங்கள ஆட்சியாளர்கள் தாங்கள் ஏகபோக சுகபோகங்களை அனுபவிப்பதற்காகவும் ஊழல்ச் செயற்பாடுகளை மேற் கொள்வதற்காகவும் அவற்றில் இருந்து தம்மை பாதுகாப்பதற்காகவும் குடும்ப ஆட்சியை மேற் கொள்வதற்காகவும் அரசியலமைப்புத் திருத்தங்களை மாறி மாறி வந்த ஆட்சியில் அரங்கேற்றினார்கள் இதுதான் உண்மை நிதர்சனம்.

இதுவரை வந்த திருத்தங்களால் நாடு தொடர்ந்து பொருளாதார வீழ்ச்சியை மட்டுமல்ல நாட்டின் அத்தனை அபிவிருத்திக் குறிகாட்டிகளும் வீழ்ச்சியடைந்துள்ளன நாடு தொடர்ந்தும் அமைதியற்ற நவ காலணித்துவத்துள் விழுங்கப்பட்டு வருகின்றது.

19 திருத்தம் ஐனாதிபதிக்கும் பிரதமருக்கும் பாராளுமன்றத்திற்கும் அதிகாரங்களை பகிர்ந்தது ஆனால் ஐனாதிபதியும் பிரதமரும் வேறு வேறு கட்சி சார்ந்தவர்களாக இருந்தமையால் இருவரும் மாறி மாறி அதிகாரங்களை பயன்படுத்தி முரண்பட ஆட்சி சீரழிந்து ஏப்ரல் 21 குண்டு வெடித்ததுடன் பெரும் ஊழல்களும் அறுவடையாகியது.

20 திருத்தம் அபரி மிதமான அதிகாரங்களை ஐனாதிபதிக்கு கொடுத்தது பாராளுமன்றத்தை கபினட்ரை கணக்கில் எடுக்காது நடத்திய காட்டுத் தர்பார் இரண்டரை ஆண்டில் பெற்றல் இல்லாமல் டோக்கன் கொடுக்கும் கொடுமைக்கு நாடு வங்குறோத்தாகியது.

21 திருத்தமும் ஐனாதிபதியிடம் இருந்து அதிகாரங்களை பிரதமர் மற்றும் ஏனைய தரப்பும் பெற்றுக் கொள்வதற்கான ஒரு நாடகமே தவிர நாட்டு மக்களுக்கு ஏமாற்றமே கிடைக்கும். மீண்டும் நல்லாட்சியின் கயிறு இழுத்தல் போட்டிதான்.

ஆகவே அரசியலமைப்பு திருத்தங்களால் இலங்கை மக்களுக்கு விமோசனம் கிடைக்க வாய்ப்பு இல்லை மாறாக இந்த நாட்டில் உள்ள சகல இனங்களையும் மதிக்கின்ற சமஷ்டி அடிப்படையிலான பண்புகளைக் கொண்ட அதிகாரப் பகிர்வினைக் கொண்ட புதிய அரசியலமைப்பு மக்களின் கருத்துக்களை உள்ளடக்கி அமைக்கப்படும் போதே நாடு முன்னோக்கி பயணிக்கவும் நிரந்தர அமைதி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

 

Posted in Uncategorized

சமஷ்டி அரசியல் தீர்வே தேவை; ஜப்பான் தூதுவரிடம் வலியுறுத்தல்

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

யாழ் மாநகர சபையில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனும் உடனிருந்தார்.

இதன்போது மாநகர முதல்வரால் ஜப்பான் தூதுவருக்கு நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.

இந்த சந்திப்பின் போது சமகால நிலைமைகள் தொடர்பில் பல்வேறுபட்ட தரப்புக்களுடனும் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் பற்றி ஆராயப்பட்டது. ஜப்பான் கடந்த காலங்களில் யாழ் மாநகர சபையின் எல்லைக்குள் செய்துவந்த பொருளாதார மற்றும் அபிவிருத்தி பணிகளுக்கு யாழ் மாநகர முதல்வர் என்ற வகையிலும் மாநகர மக்கள் சார்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் இலங்கையில் சமாதானம் நிலவிய காலத்தில் ஜப்பானால் சமாதான பேச்சுவார்த்தைக்கு காத்திரமான பங்களிப்பு செய்யப்பட்டது குறிப்பாக இலங்கைக்கான விசேட தூதுவர் யசுசி அகாஷி அந்த பணிகளிலே ஈடுபட்டிருந்தார்.

அதேபோன்று தற்சமயமும் இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றுக்கு ஜப்பானிய அரசு பங்களிப்பு செய்ய வேண்டும் என்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இலங்கைக்கு ஜப்பான் உதவி வருகின்றது.

இந்நிலையில் இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முன்நிபந்தனையாக இலங்கையில் ஒரு சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசுக்கு ஜப்பானிய அரசு விடுக்க வேண்டும் என்று மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஜப்பானிய தூதுவரிடம் கேட்டுக்கொண்டார்.

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரினால் இன்று காலை இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இந்த செயலணி பல்வேறு தரப்பினரை சந்தித்து தமது கருத்துக்களை கேட்டறிந்தது.

இதன்படி தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

கந்தக்காடு தடுப்பு முகாமில் இருந்து 600 கைதிகள் தப்பியோட்டம்!

பொலனறுவை கந்தக்காட்டில் அமைந்துள்ள புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளில் 600 பேர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு இரண்டு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலை தொடர்ந்து இவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மோதலின் போது ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தப்பிச் சென்றவர்களை தேடி கந்தக்காடு, பொலனறுவை பகுதியில் தீவிர தேடுதல்களில் இராணுவமும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானியில்!

22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான அடிப்படைச் சட்டமூலத்திற்கு நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்டவரைஞரால் இருபத்திரண்டாவது அரசியலமைப்பு திருத்தம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு இணங்கியொழுகவில்லை என்பதை சட்டமா அதிபரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, இருபத்திரண்டாவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஒருநாள் கடவு சீட்டு சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை

கடவுச்சீட்டு ஒருநாள் சேவை துரிதப்படுத்தப்படும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.இதற்காக யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை ஆகிய பிராந்திய அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதன்முதல் கட்டமாக, யாழ்ப்பாணத்தில் உள்ள குடிவரவு, குடியகல்வு அலுவலகத்தில் தனது பிரத்தியேகப் பணத்தை முதலீடு செய்து ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கடவுச் சீட்டைப் பெறுவதற்கும் நீண்ட வரிசையில் காத்திருப்பதாகவும், இந்த நிலைமையை மாற்றியமைப்பதாகவும் அமைச்சர் தம்மிக்கப் பெரேரா தெரிவித்துள்ளார்.இதனைத் தவிர மேலும் ஐந்து இடங்களில் பிராந்திய அலுவகங்களையும், ஒருநாள் சேவையையும் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

அமெரிக்க தூதரகத்தின் கவனத்திற்கு? -Elanadu Editorial

இலங்கையை மீட்கும் முயற்சிகளுக்கு உதவுவது தொடர்பில் அமெரிக்கா
ஆராய்வதாக தெரிகின்றது. இதனடிப்படையில் கடந்த இரண்டு வாரங்களில்,
சிறு மற்றும் நடுத்தர வியாபார முயற்சிகளுக்கான உதவியாக 120 மில்லியன்
டொலர்களையும், பாலுற்பத்தி தொழிற்துறை மேம்பாட்டிற்காக 21 மில்லியன்
களையும், 5.75 மில்லியன்களை மனிதாபிமான உதவிக்கானதாகவும்
அமெரிக்கா அறிவித்திருக்கின்றது. இதனைத் தொடர்ந்து, நிலைமைகளை
ஆராயும் நோக்கில், அமெரிக்க உயர்மட்ட குழுவினர் இலங்கை வரவுள்ளனர்.
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவுற்றதை தொடர்ந்து பேசுபொருளான
மனித உரிமைகள் நிலவரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இப்போதும்
அது கேள்விக்குறியுடனேயே நகர்கின்றனது. கடந்த பதின்மூன்று வருடங்
களாக மேற்கொள்ளப்பட்ட சர்வதேச அழுதங்கள் தொடர்பில் தமிழ் மக்கள்
வெறுப்படைந்திருக்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி விடயத்தில்
சிறு தூரத்தைக்கூட இலங்கையின் ஆட்சியாளர்கள் இதுவரையில் கடக்க
வில்லை. இந்த அடிப்படையில் நோக்கினால், இலங்கையின்மீது இதுவரையில்
மேற்கொள்ளப்பட்ட மேற்குலக அழுத்தங்கள் வெற்றியளிக்கவில்லை.
இதனை பிறிதொரு வகையில் கூறுவதானால், அமெரிக்காவின் உலகளா
விய மனித உரிமைசார்ந்த அழுத்தங்களின் பின்புலத்தில், இலங்கையின்
மீதான அழுத்தங்கள் தோல்வியடைந்திருக்கின்றன. யுத்தம் முடிவுற்றதை
தொடர்ந்து, பொறுப்பு கூறலை வலியுறுத்தி 2012இல் முதலாவது பிரேரணையை
அமெரிக்கா முன்கொண்டுவந்தது. அன்றைய சூழலில் அது, அமெரிக்க
பிரேரணையென்றே பரவலாக அழைக்கப்பட்டது. அமெரிக்க தலையீட்டின்
மூலமாகவே, இலங்கையின் மோசமான மனித உரிமை மீறல் விவகாரம்
சர்வதேசத்தின் கவனத்தை பெற்றது. ஆனால், பிரேரணைகள் தொடர்ந்தனவே
தவிர, பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்கான கோரிக்கைளுக்கு எவ்வித வெற்றியும்
இதுவரையில் கிட்டவில்லை.
இவ்வாறானதொரு சூழலில்தான், நாடு மோசமான பொருளாதார நெருக்
கடியை எதிர்கொண்டிருக்கின்றது. இதற்கு, அமெரிக்கா உதவி செய்வது தொடர்
பில் கவனம் செலுத்துகின்றது. பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை
மீட்கும் அமெரிக்க முயற்சி நிச்சயம் வரவேற்கப்படவேண்டியதுதான்.
ஆனால், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதுடன் மட்டும் விடயங்கள்
முடிந்துவிடப்போவதில்லையென்பதை அமெரிக்க அதிகாரிகள் உணரவேண்
டும். தமிழ் மக்களுக்கான நீதி, பொருளாதார நெருக்கடிக்கு அப்பாற்பட்டது.
அமெரிக்காவின் உதவிகளுக்காக காத்திருக்கும்போதே இலங்கையின்
ஆட்சியாளர்கள், சீனாவின் ‘ஒரு சீனா’ கொள்கையை ஆதரிப்பதாகவும், ஜக்கிய
நாடுகள் சபை சீனாவின் உள் விவகாரங்களில் தலையீடு செய்யக்கூடாதென்றும்,
அண்மையில் ஜ.நாவில் வலியுறுத்தியிருந்தனர். ஆனால் மறுபுறுமோ,
தாய்வான் விடயத்தில் சீனாவின் ‘ஒரு சீனா’ கொள்கையை அமெரிக்கா கடுமை
யாக எதிர்த்துவருகின்றது. தாய்வானின் சுயாதீனத்தை அமெரிக்கா அங்கரித்
திருக்கின்றது. ஆனால், அமெரிக்காவின் டொலர்களுக்காக காத்திருக்கும்
நிலையிலிருக்கின்றபோதே, மறுபுறம் அமெரிக்காவின் மூலோபாய நிலைப்
பாட்டை வெளிப்படையாகவே கொழும்பு எதிர்கின்றது. இது, கோட்டாபயவின்
நடுநிலை வெளிவிவகாரக் கொள்கைக்கு முற்றிலும் முரண்பாடான விடய
மாகும். ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதுபோல், கொழும்பின்
சிங்கள ஆட்சியாளர்கள் எவ்வாறு பாம்புக்கு வாலையும் மீனுக்கு தலையையும்
காட்டும் அரா மீன் போன்றவர்கள் என்பதையே, அவர்களது மேற்படி
நடவடிக்கை தெளிவாக எடுத்தியம்புகின்றது. பொருளாதார உதவிகளைக்கூட
சரியாக பயன்படுத்துவார்களாக என்பதற்கும் எவ்வித உத்தரவாதமும் இல்லை.
அமெரிக்க மனிதாபிமான உதவிகள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை சரியாக
சென்றடையுமா என்பதிலும் சந்தேகங்கள் உண்டு. தமிழ் மக்கள் கொடிய
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள். சிங்கள மக்கள் இப்போது அனுபவிப்பதை,
தமிழ் மக்கள் ஏற்கனவே முப்பது வருடங்களாக அனுபவித்தவர்கள். ஆனால்,
யுத்தத்திற்கு பின்னரான சூழலில், தமிழ் மக்களின் பொருளாதார மீட்சிக்காக
அமெரிக்கா உட்பட, மேற்குலக நாடுகள் பாரிய மனிதாபிமான உதவிகளை
வழங்கியதாக சான்றில்லை. இப்போதும், அமெரிக்க உதவி நிறுவனம் மற்றும்
ஜரோப்பிய ஒன்றியத்தின் பாரியளவான நன்கொடைகள், கொழும்புமைய
அரசுசாரா நிறுவனங்களையே சேர்கின்றன. சிங்கள பகுதிகளே முக்கியத்துவப்
படுத்தப்படுகின்றன. இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பில்
சிந்திக்கும்போது, அமெரிக்க தூதரகம் இங்கே சுட்டிக்காட்டப்பட்டிருக்கும்
விடயங்கள் தொடர்பிலும் கவனம்செலுத்த முன்வரவேண்டும்.

ஜப்பான் தூதுவரை சந்தித்த கூட்டமைப்பின் தலைவர்கள்

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி இன்றைய தினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை கொக்குவிலிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் சந்தித்தார்.

இன்று மாலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட்டின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜப்பான் தூதுவர் சமகால நிலைமைகள் தொடர்பில் பல்வேறுபட்ட தரப்புக்களுடனும் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் அமைந்துள்ள பனை,தென்னை கூட்டுறவு சங்கத்தின் தலைமைக் காரியலயத்திற்கு இன்றையதினம் ஜப்பானிய தூதுவர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இலங்கை மற்றும் ஜப்பான் நாடுகளின் கூட்டுறவின் அடையாளமாக ஜப்பான் அரசின் நிதிப்பங்களிப்பில் நன்கோடையாக வழங்கப்பட்ட தேங்காய் எண்ணை சுத்திகரிப்பு நிலையத்திற்கு இயந்திரம் ஒன்று 2 மில்லியன் ரூபா பெறுமதியில் கடந்த 2021 ஆண்டு வழங்கிப்பட்டது.

அதன் பயன்பாட்டை பார்வையிடுவதற்காக ஜப்பான் நாட்டு தூதுவர் இன்றைய தினம் நேரில் சென்றிருந்தார்.

போராளிகளை விசாரிக்காமல் மாபியாக்களை கண்டுபிடியுங்கள் – புலனாய்வு பிரிவினருக்கு ரெலோ தலைவர் செல்வம் எம்.பி. அறிவுரை

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை தொந்தரவு செய்யாமல் எரிபொருளை பதுக்கும் மாபியாக்களை கண்டுபிடிப்பதற்கு புலனாய்வு பிரிவினர் முன்வரவேண்டும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (28) ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

அத்தியவசிய தேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிப்பது என்ற அரசின் அறிவிப்பானது குழந்தை பிள்ளைத்தனமானது. இதனால் கடற்றொழிலாளர்கள், விவசாயிகள் உட்பட பல தரப்பினர் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுவர்.

ஏசிரூமில் இருக்கும் அமைச்சர் பந்துல குணவர்த்தன சாதாரண மக்கள் வரிசையில் நிற்கும் பரிதாபத்தை உணர்ந்திருப்பாரோ என்று தெரியவில்லை.

அதிலும் பெண்கள் இந்த விடயத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒருநேர சாப்பாட்டுடன் வாழ்வை கழிக்கும் அவல நிலை பலருக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே அந்த மக்களின் பரிதாப நிலையை அறியாது அமைச்சர் பந்துல இவ்வாறு அறிவித்திருப்பது ஏற்க்க முடியாத கருத்தாகவே உள்ளது. எனவே இந்த நடைமுறையை அவர் உடனடியாக வாபஸ் பெறவேண்டும்.

அத்துடன் அனைத்து மக்களுக்கும் எரிபொருளை பெற்று கொடுப்பதற்கான வசதியினை அரசாங்கம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். எமதுமக்களை எள்ளி நகையாடுபவர்கள், துன்பப்படுத்துபவர்கள், இந்த அரசாங்கத்திலே இருக்கக்கூடாது .

இந்த அரசிடம் எந்த திட்டமும் இல்லை. ஜனாதிபதி எடுத்துள்ள முடிவில் மாற்றம் ஏற்ப்பட்டது போல எமக்கு தெரியவில்லை.

எனவே புதியவர்கள் வந்தபின்னரும் சரியான திட்டமிடல் இல்லை என்றால் எமது மக்களே எல்லாவிதத்தாலும் பாதிக்கப்படுவார்கள். இன்று அத்தியவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் எரிபொருளை கோரி ரஸ்யாவிற்கும் கட்டாருக்கும் செல்லும் அமைச்சர்கள் அந்த முஸ்தீபை முன்னமே செய்திருக்க வேண்டும்.

மக்களை நாட்கணக்கில் வீதிகளிலே காத்திருக்க செய்துவிட்டு தற்போது செல்கின்றமையானது அவர்களிடம் சரியான திட்டமிடல் இன்மையையே புலப்படுத்துகின்றது. இவர்களால் ஏன் சரியான ஒரு வழிமுறையை காணமுடியாமல் போனது என்ற கேள்வி எழுகின்றது.

இதேவேளை களவு செய்பவர்களிற்கும், பதுக்குபவர்களுக்கும் தாராளமாக எரிபொருள் கிடைக்க பெறுகின்றது. புனர்வாழ்வு பெற்ற விடுதலை புலி உறுப்பினர்களை இலங்கை புலனாய்வுபிரிவினர் ஒவ்வொருநாளும் சென்று விசாரணை மேற்கொள்கின்றனர். நான் அவர்களுக்கு ஒன்றை சொல்கிறேன்.

இவற்றை எல்லாம் இடைநிறுத்திவிட்டு எரிபொருளை பதுக்குபவர்களை கண்டறிவதற்காக இந்த புலனாய்வு உத்தியோகத்தர்களை பயன்படுத்து முடியும். என்றார்.