அரசின் போலி வேடத்திற்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்  – ரெலோவின் செயலாளர் நாயகம் ஜனா

ஆட்சியாளர்களின் இத்தகைய சட்டத் திருத்தங்களின் போலி வேடம் தொடர்பாக நீங்களும் குரல்கொடுங்கள் இல்லையேல் நாளை இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம் மகாசங்கத்தினர் மீதோ மற்ற மதகுருமார்கள்மீதோ பாயாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நாடு தொடர்பாக நல்லதொரு முடிவை காலம் கடந்தும்எடுக்கத் தயங்காதீர்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலைஇயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகம் – கோ.கருணாகரம் (ஜனா) பா.உ செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்ட திருத்தம் தொடர்பிலானவிவாதத்தின் போது கருத்துத் தெரிவக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசியல் வரலாற்றில் குள்ளநரித்தனம் மிக்கவர் என்ற புகழுக்குரிய ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களின்நரித்தனச் சிந்தனையின் வெளிப்பாட்டினாலேயே இன்று நாடும் எம் தமிழினமும் அனுபவித்து வரும் தற்காலிகஏற்பாடாகக் கொண்டு வரப்பட்ட 1979ம் ஆண்டின் 48ம் இலக்கப் பயங்கரவாதத்தடைச் சட்டம்.

அன்று நடைபெற்ற தமிழ் இளைஞர்களின் உணர்வு பூர்வமான உரிமைப் போராட்டத்திற்கு முகங்கொடுக்க முடியாமல்சர்வதேச நியமங்களுக்குப் புறம்பாக சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு முரணாக குறுகிய காலங்கள் எனப்பாராளுமன்றத்தை ஏமாற்றி தனது குள்ளநரி இராஜதந்திரத்தைச் சாமர்த்தியமாகச் செயலில் காட்டி இந்த நாட்டின்தமிழ் இளைஞர்களை, தமிழ்த் தேசியவாதிகளை இலக்கு வைத்துக் கொண்டு வரப்பட்டதே இந்தப் பயங்கரவாதத்தடைச்சட்டம்.

ஆயுதப் படையினருக்கும், முப்படையினருக்கும், பொலிசாருக்கும் நாட்டின் குற்றிவியல் மற்றும் தண்டணைச் சட்டக்கோவைகளுக்கு அப்பால் தனித்துவமான அதிகாரங்களை வழங்கி தமிழன் எவன்மீதாவது சந்தேகம் இருந்தால் கைதுசெய்யலாம் அல்லது அவன் உயிரை மாய்த்து விடலாம், மரண விசாரணையோ எதுவித விசாரணையோ இல்லை.தனது உரிமையைக் கோரும் எந்தத் தமிழனையும் அழித்துவிடு, கைது செய், சித்திரவதை செய், முடிந்தவரைதமிழனைக் கொடுமைப்படுத்து, தமிழர்களின் அந்தரங்க உறுப்புகளை அசிங்கப்படுத்து, தமிழர்களின் ஆண்மையை, பெண்;மையை அழித்துவிடு என்ற இன்னபிற மனிதாபிமானம் கண்டிராத, மனித குலம் கண்டிராத சித்திரவதைகளைச்செய்வதற்கு அவர்களுக்கு அங்கீகாரம் அளித்ததே இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம்.

சட்டம் கூறுகின்றது 18 மாதங்கள் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவோடு தடுத்து வைக்கலாம் என்று. ஆனால்நடைமுறையில் நடந்தது என்ன? நடப்பது என்ன? முப்பது வருடங்களுக்கு மேலாக எதுவித குற்றச்சாட்டுகளும்சுமத்தாமல், குற்றச்சாட்டுப் பத்திரமும் நீதிமன்றத்தில் சமர்ப்;பிக்காமல் இளமையில் கைது செய்யப்பட்டு இன்றுமுதுமை வரைக்கு தம் வாழ்நாளைத் தொலைத்து விட்டு தமிழ் இளைஞர்களின் வாழ்க்கையுடன் விளையாடுவதேஇந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம்.

இதற்கும் மேலாக முகநூலில் பதிவிடும் இளைஞர்களைக் கூடக் கைது செய்கின்றது. கடந்த வருடத்தில்மட்டக்களப்பு மாவட்டத்தில் 25க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இச்சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டார்கள். தற்போது அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தாலும் அவர்களோடு கைது செய்யப்பட்ட செங்கலடி வர்த்தகர்தியேட்டர் மோகன் என்பவர் இன்னும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்.

இன்று சர்வதேச நெருக்குவாரத்தால் கொண்டுவரப்பட்ட இந்தப் பயங்கரவாதத் தடைச்சடத் திருத்தம் பற்றி சட்டம்படித்த சட்டப் பேராசிரியர் அமைச்ர் ஜி.எல்.பீரிஸ் அவர்கள் கூறிய விளக்கத்தைக் கேட்டு நாகன் வாயால் கூடச் சிரிக்கமுடியாதுள்ளேன். நீதி அமைச்சர் திறமையான மனிதன். இந்தச் சட்டத்திருத்தத்தைப் பொருத்தளவில் அவர்சூழ்நிலைக் கைதி. இந்தப் பதினெட்டு மாதத் தடுப்பை அவர்கள் ஒரு வருடம் என்று குறைக்கின்றார்கலாம் என்றுஇவர்கள் படம் காட்டுவது எதைக் காட்டுகின்றது?

ஒன்று மட்டும் உண்மை அன்று இந்த நாட்டில் பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது இந்த நாட்டிலுள்ளதமிழர்களை, தமிழ் இளைஞர்களை இலக்காகக் கொண்டே. இன்று இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் மூவினமக்கள் மீதும் பாய்கின்றது. இந்த நாட்டில் பிறந்த இந்த நாட்டை நேசித்து தமிழ்த் தேசியத்திற்காக ஆயுதம் ஏந்திஒருங்கிணைந்த நாட்டில் சமத்துவமாக வாழ வேண்டும் என்று நம்பிக்கை கொண்ட நான் இந்த நாட்டின் அரசியலைஇயக்கும் மகாசங்கத்தினர், பௌத்த பீடங்களின் பிரதானிகள், பௌத்த, இந்;து கத்தோலிக்க, இஸ்லாமியமதகுருமார் உட்பட இந்த நாட்டின் மூவின மக்களையும் அன்புடனும் ஆதரவுடனும் அறைகூவல் விடுத்துஅழைக்கின்றேன்.

இன்று இந்த ஆட்சியாளர்களின் இத்தகைய சட்டத் திருத்தங்களின் போலி வெடம் தொடர்பாக நீங்களும் குரல்கொடுங்கள் இல்லையேல் நாளை இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம் மகாசங்கத்தினர் மீதோ மற்ற மதகுருமார்கள்மீதோ பாயாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நாடு தொடர்பாக நல்லதொரு முடிவை காலம் கடந்தும்எடுக்கத் தயங்காதீர்கள்.

நாங்கள் கேட்பது இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் திருத்தம் அல்ல. இந்தக் கொடிய சட்டம் முற்றுமுழுதாகஇலங்கை அரசியல் அமைப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும். தூக்கி எறியப்பட வேண்டும். இந்தத் திருத்தம் சர்வதேசஅழுத்தம், ஐரோப்பிய பாராளுமன்றம் ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை இல்லாதொழிக்கும் என்ற பயத்தினால் கொண்டுவரப்படுகின்றதே தவிர தமிழர்களுக்கோ இந்த நாட்டு மக்களுக்கோ நிம்மதியான வாழ்வைக் கொடுக்க வேண்டும்என்பதற்காக அல்ல.

இந்த பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தத்தை நானும் எங்களது கட்சியும் முற்றுமுழுதாக எதிர்க்கின்றோம் என்றுதெரிவித்தார்.

சர்வகட்சி கூட்டத்தை பகிஷ்கரிக்க விக்னேஸ்வரனும் முடிவு

கொழும்பில் நாளை மறுதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச மேற்கொள்ளவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் தாம் பங்குபற்றமாட்டேன் என்பதை தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் முன்னாள் நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் எம்.பி ஜனாதிபதி செயலகத்துக்கு அறிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கான தீர்வும் அதிகாரப் பகிர்வில் தான் தங்கியுள்ளது என்பதை ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலும்,

இம்மாதம் 23ஆம் திகதி நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் என்னால் கலந்து கொள்ள முடியாவிட்டாலும், தற்போதைய பொருளாதாரச் சூழல் தொடர்பில் எனது கருத்துக்களை எழுதுமாறு தொலைபேசி மூலம் உங்களின் பணியாளர் என்னை வலியுறுத்தினார்.

எனவே எனது கருத்துக்களை மிகச் சுருக்கமாகக் கீழே தருகிறேன்.

இன்று நாடு எதிர்நோக்கும் இனப்பிரச்சினையும் பொருளாதாரப் பிரச்சினையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன என்பது சற்றே அசாத்தியமான விடயம்தான்.

நாட்டை தன் சக்திக்கு மீறி செலவு செய்ய வைத்துள்ளது இந்தப் போர். பின்விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல் கடன் வாங்கப்பட்டது.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கும் தீர்வு காண்பதற்கான ஒரே சாத்தியமான வழி, கூட்டாட்சி அடிப்படையில் தமிழ் மக்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை ஏற்படுத்துவதுதான் என்பது எனது புரிதல்.

அவ்வாறு செய்வது தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளுவதற்கு வழி வகுக்கும் என்பது மட்டுமன்றி, இலங்கையை நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு ஒரு வளமான மற்றும் அமைதியான நாடாக மாற்றுவதற்கும் வழி வகுக்கும்.

நீங்கள் சிந்திக்கும் அரசமைப்பு மாற்றத்தின் ஊடாக உண்மையான அதிகாரப்பகிர்வைத் தைரியமாக நிறைவேற்ற முடிந்தால் சர்வதேச சமூகத்தின் பூரண பொருளாதார ஆதரவையும் புலம்பெயர் தமிழர்களின் முழு மனதுடன் ஆதரவையும் பெற முடியும்.

அவ்வாறு செய்வதன் மூலம், இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மிகக் குறுகிய காலத்திற்குள் மீண்டு தெற்காசியாவின் சொர்க்கமாக மாறும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.

இனப்பிரச்சினை தொடர்பில் நாம் அனைவரும் முன்னர் தெரிவித்த கருத்துக்கள் எமது மனங்களிலிருந்து துடைக்கப்படட்டும்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வந்து இந்த நாட்டை தெற்காசியாவில் மட்டுமன்றி முழு உலகிலும் ஒரு சிறந்த, வளமான, ஒன்றுபட்ட நாடாக மாற்றுவோம். இது வெறும் கனவு அல்ல; அது நிஜத்தில் நடக்கலாம்.

நீங்கள் துணிச்சலுடன் செயற்பட்டு இந்த நாட்டில் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணுவீர்களாயின் இலங்கை வரலாற்றில் உங்கள் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். ஜனாதிபதியே! உங்களுக்கு இப்போது கிடைத்திருக்கும் இந்தப் பொன்னான வாய்ப்பை தவறவிடாதீர்கள். நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ராஜபக்ஷக்களுக்கு மீண்டும் உயிர்கொடுக்க விரும்பவில்லை – கஜேந்திரகுமார்

ராஜபக்ஷக்களுக்கு மீண்டும் உயிர்கொடுக்க முடியாது என்பதனால் சர்வகட்சி மாநாட்டை புறக்கணிக்க போவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்தரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ளபோதும் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து கலந்துரையாட தொடர்ந்தும் தயக்கம் காட்டுவதாக குறிப்பிட்டார்.

இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என கூறி உறவுகளின் வேதனையுடன் அரசாங்கம் விளையாடியுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

அதேபோன்று பயங்கரவாத தடைச்சட்டத்தினை திருத்துவதாக கூறினாலும், நீண்டகாலத்திற்கு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாது தடுத்து வைக்கும் முறையினை கைவிடும் எண்ணம் இந்த அரசாங்கத்திற்கு இல்லை என்றும் ஜேந்தரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தற்போதைய நெருக்கடி காரணமாக அரசாங்கத்தின் மீது அனைத்து மக்களும் வெறுப்பினை வெளிப்படுத்திவரும் சூழலில் மாநாட்டில் பங்கேற்பதானது வீழ்ச்சி கண்டிருக்கும் ராஜபக்ஷ குடும்பத்திற்கு மீண்டும் புத்திதுயர் அளிப்பதாக மாறிவிடும் என கூறினார்.

ஆகவே, இவ்விதமான பினனணிகளைக் கொண்டவர்கள் கூட்டும் சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதில் தமிழ் மக்களுக்கு எவ்வதமான நன்மைகளும் கிடைக்கப்போதில்லை என கஜேந்தரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

Posted in Uncategorized

சர்வ கட்சி மாநாட்டை நிராகரித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

எதிர்வரும் புதன்கிழமை(23) இடம்பெறவுள்ள சர்வ கட்சி மாநாட்டில் கலந்துகொள்ளாதிருப்பதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் நீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, குறித்த சர்வ கட்சி மாநாட்டில் கலந்துகொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி இன்று(21) அறிவித்துள்ளது.

Posted in Uncategorized

தமிழ் முற்போக்கு கூட்டணி சர்வ கட்சி மாநாட்டில் கலந்துக்கொள்ளாது

பொருளாதார துறையில் மட்டுமல்லாது, பொருளாதார வீழ்ச்சியின் தொடர்ச்சியாக நம் நாடு அரசியல், சமூக, கலாச்சார துறைகள் உள்ளிட்ட சகல துறைகளிலும் அதல பாதாளத்தில் விழுந்துள்ள பின்னணியில், சர்வகட்சி மாநாட்டில் கலந்துக்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை கவனமாக பரிசீலித்து, இம்மாநாட்டில் கலந்துக்கொள்வதில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி முடிவு செய்துள்ளதாக கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி மேலும் கூறியுள்ளதாவது, அரசாங்கத்தின் தோல்வியை எதிரணியின் தலைகளில் சுமத்துவதற்கான முயற்சியாகவும், அரசாங்கத்தின் பங்காளி கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை திருப்தி படுத்த அரசாங்கம் செய்யும் முயற்சியாகவும், இந்த அழைப்பை, பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் கூட்டணி கட்சியாக நாம் கணிக்கிறோம்.

Posted in Uncategorized

ஜனாதிபதியின் அழைப்பை கூட்டமைப்பினர் நிராகரிக்க வேண்டும் – யோகராசா கனகரஞ்சினி

ஜனாதிபதியுடனான சந்திப்பினை தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்க வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் அரசியல்வாதிகள் ஓர் அணியில் திரண்டு எமக்காக பேச வேண்டும். எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

ஜனாதிபதியை சந்திக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக நாங்கள் அறிகிறோம். அதனை அவர்கள் புறக்கணிக்க வேண்டும் என கோருகிறோம்.

அரசாங்கம் ஆட்டம் கண்டுள்ள இந்த நிலையில் அவர்களுடன் பேச்சுக்களை நடத்துவதனை விட இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி எமக்கான உரிமைகளையும் , எமக்கான நீதியையும் பெற அவர்கள் அணிதிரள வேண்டும்.

குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் , நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் ஜனாதிபதியுடான பேச்சுக்களை புறக்கணிக்க வேண்டும்.

ஜனாதிபதியுடன் பேச்சுக்கு செல்வார்கள் ஆயின் அது எமக்கு இழைக்கப்படும் அநீதி மாத்திரமல்ல , துரோகமும் கூட என மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

டெலோ சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணிக்கின்றது – செல்வம் அடைக்கலநாதன் பா.உ

சர்வகட்சி மாநாட்டை தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவும் புறக்கணிக்கின்றது என அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சர்வகட்சி மாநாட்டை தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ புறக்கணிக்கின்றது. ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனாதிபதிக்கிடையிலான சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் நல்லிணக்க சமிஞ்சையைக் காட்டும்படியான கோரிக்கையை நாங்கள் முன்வைத்திருக்கின்றோம். தற்போதும் அவ்வாறான நல்லிணக்க சமிஞ்சையைக் காட்டுகின்ற பட்சத்திலே மேற்கொண்டு சிந்திக்கலாம் என்றும் தெரிவித்திருக்கின்றோம்.

தற்போது சர்வகட்சி மாநாட்டைக் கூட்டியிருக்கினற இந்த தருணத்திலே நாங்கள் அதனையும் புறக்கணிக்கின்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் எங்களுடைய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்தின் போது அங்கிருக்கின்ற பொலிசாரால் மிக மோசமான மனித உரிமை மீறல் செயற்பாடுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

தற்போது வடக்கு கிழக்கை நோக்கியே அமைச்சர்களின், அரச பிரதிநிதிகளின் பயணங்கள் இருக்கின்றது. காரணம் சிங்கள மக்கள் அவர்களைப் புறக்கணித்துள்ளார்கள். இத்தருணத்தில் தமிழ் மக்கள் மத்தியிலே வந்து தங்களுடைய கருத்துகளைச் சொல்லுகின்ற போது சிங்கள மக்கள் தங்களுக்குச் சார்பாக மாறுவார்கள் என்ற யுத்தியோடு தமிழ்ப் பிரதேசங்களிலே வந்து புத்த கோயில்களை அமைப்பதும், எமது மக்களின் போட்டங்களை மழுங்கடிக்கும் செயற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இவை நிறுத்தப்பட வேண்டும். இந்த அரசாங்கம் அடிப்படையாகப் பொருளாதார ரீதியிலே தன்னை ஒருபோதும் நிவர்ததி செய்ய முடியாத நிலையில் இருக்கின்றது. வெளிநாடுகளில் இவ்வாறான நிலைமைகள், தேர்தல் தோல்விகள் என்பன ஏற்பட்டால் அதன் தலைவர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்து விடுவார்கள். இதேபோல் இன்றைக்கு மிகவும் மோசமான பின்னடைவைக் கண்டிருக்கின்ற இந்த நாட்டின் தலைவர்கள் இராஜினாமா செய்வதுதான் சாலச் சிறந்தது என்பதோடு தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ இந்த சர்வகட்சி மாநாட்டை புறக்கணிக்கின்றது என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

களுதாவளையில் சிறி சபாரெத்தினம் ஞாபகாத்த பயணிகள் நிழற்குடை திறந்து வைப்பு

தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் சிறி சபாரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாக மட்டக்களப்பு மண்முனை தென்எருவில் பற்றுப் பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட களுதாவளை பிரதேசத்தில் பயணிகள் நிழற்குடையொன்று அமைக்கப்பட்டு இன்றைய தினம் மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.

மண்முனை தென்எருவில் பற்றுப் பிரதேச சபைத் தவிசாளரும் ரெலோவின் மத்திய குழு உறுப்பினருமான ஞா.யோகநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், கட்சியின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினருமான கோ.கருணாகரம் (ஜனா), உபதலைவர் இந்திரகுமார் பிரசன்னா, மட்டக்களப்பு மாநகரசபைப் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், களுதாவளை தேசியப் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாநகரசபை மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

களுதாவளை தேசியப் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிரதேச மக்களின் நன்மை கருதி அவர்கள் பயன்பெறும் வகையில் களுதாவளை தேசியப் பாடசாலைக்கு அருகாமையில் இப் பயணிகள் நிழற்குடை கட்சியின் சுவிஸ் கிளையின் நிதியுதவியில் அமைக்கப்பட்டு இன்றைய தினம் அவர்களுக்கு பயனளிக்கும் முகமாகத் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கதரக்கதர எரித்த சாபத்தையே இந்த ஆட்சியாளர்கள் அனுபவித்து வருகிறார்கள் – ரவூப் ஹக்கீம்

கொரோனா வைரஸால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கதரக்கதர எரித்த சாபத்தையே இந்த ஆட்சியாளர்கள் அனுபவித்து வருகிறார்கள் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நாட்டினுடைய பொருளாதார நெருக்கடியால் நாட்டு மக்களை படுபாதாளத்துக்குள் அரசாங்கம் தள்ளியுள்ளது. நாட்டு மக்களின் சாபத்தைப் பெற்ற அரசாங்கமாக இது இருக்கிறது. வீட்டுக்குப் போங்கள் என்று சொல்லுமளவுக்கு இன்றைய ஆட்சியாளர்கள் மாறியுள்ளதென்றும் அவர் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை இளைஞர் காங்கிரஸின் 5ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று மாலை இளைஞர் ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“இன்றைய ஆட்சியாளர்கள் ஒவ்வொரு நாட்டுக்கும் சென்று பிச்சை வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அண்மையில் இந்தியா ஒரு பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. இது இன்னும் இரண்டு மாதத்திற்குள் முடிந்து விடும். அதற்கு பிறகு எந்த நாட்டில் போய் வாங்குவது.

மீண்டும் இவ்வாறான நெருக்கடி ஏற்படும். இவ்வாறான நிலைமை கடந்த காலங்களில் கிரேக்கத்திலும், லெபனான் போன்ற நாடுகளில் ஏற்பட்டிருந்தன. அந்த நாடுகளில் அரசாங்கங்கள் மாறி மாறி ஆட்சியை அமைத்தாலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தன. அவ்வாறான நிலைமைதான் எமது நாட்டுக்கும் ஏற்படப் போகின்றது” என்றார்.

இலங்கைக்கு தொடர்ந்து எரிபொருளை விநியோகிக்க முடியாது: இந்திய நிறுவனமான IOC அறிவிப்பு

இலங்கைக்கு தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியாது என இந்திய எண்ணெய் நிறுவனம்(IOC) இலங்கைக்கு அறிவித்துள்ளது.

இந்தியாவின் கடன் உதவியின் கீழ் தொடர்ந்து இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் எரிபொருளை கொள்வனவு செய்ய முன்னர் எதிர்பார்த்து இருந்ததாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி. ஆர்.ஒல்கா தெரிவித்துள்ளார்.

எனினும் இந்திய எண்ணெய் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு காரணமாக வேறு விநியோகஸ்தரிடம் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான விலை மனு கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மசகு எண்ணெய் பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளதாகவும் மசகு எண்ணெய் மற்றும் எரிபொருளை இந்திய நிறுவனம் வழங்காததால், கூட்டுத்தாபனமே கொள்வனவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized