சிரேஷ்ட பிரஜைகள் நாட்டுக்கு வளம் என்பதை நிருபித்தவர் அமரர் கனகராசா –சபையில் தவிசாளர் நிரோஷ் இரங்கல்

வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தில் முதியோர்களின் நலவாழ்வு தொடர்பில் அக்கறையுடன் செயற்பட்ட முதியோர் சங்கத் தலைவரும் சிரோஷ்ட பிரஜையுமான சுப்பிரமணியம் கனகராசா அவர்களின் இழப்பிற்கு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை உத்தியோகபூர்வமாக அஞ்சலிக்கின்றது என ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இறுதியா இடம்பெற்ற சபையின் விசேட அமர்வில் அன்னாருக்கு அஞ்சலியைத் தெரிவிக்கும் முகமாக கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும், அமரர் சுப்பிரமணியம் கனகராஜா அவர்கள் எம்மை விட்டுப் பிரிவடைந்துள்ளார். அவர் எமது பிரதேசத்தில் முதியோரின் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு சிரோஷ்ட பிரஜைகளின் நலவாழ்விற்கான பல விடயங்களைச் சாதித்து இருக்கின்றார்.

வலிகாமம் கிழக்கில் சிரோஷ்ட பிரஜைகள் ரம்யமாகவும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வாழவேண்டும் என தன் உடல் நலனையும் பாராது சிந்தித்துச் செயற்பட்ட ஓர் கல்வியாளர் ஆவராவார். சிறுப்பிட்டியில் முதியோர் சங்கத்தின் தலைவராக நல்ல பல காரியங்களை நிறைவேற்றியுள்ளார். அவர் சிரேஷ்ட பிரஜைகளின் நலவாழ்வு தொடர்பில் சகல அரச திணைக்களங்களுடனும் கடிதத்தொடர்பு வாயிலாகவும் தொலைபேசி வாயிலாகவும் தொடர்புகளைப் பேணியவர். சிறந்த ஆங்கிலப் புலமையும் கல்விப் புலமையும் மிக்க அதிபருமாவார்.

அவர் ஏற்கனவே சி.வை. தாமேதரம்பிள்ளை நற்பணி மன்றம் உள்ளிட்ட பல தாபனங்களினால் கௌரவிக்கப்பட்டவராவார். தான் ஒரு மூத்த பிரஜையாக இருந்து இள நிலையாளர்களை வழிநடத்தும் தன்னலமற்ற ஆளுமை அவரிடம் காணப்பட்டது.

பிரதேச சபையின் ஒவ்வொரு அபிவிருத்தி விடயத்திலும் அவர் அக்கறை கொண்டிருந்தார். தவிசாளரான எனக்கும் ஏனைய பல உறுப்பினருக்கும் அடிக்கடி வழிகாட்டல்களை தொலைபேசி ஊடாக வழங்கும் ஓர் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய வலிகாமம் கிழக்கின் பொக்கிசத்தினையே நாம் இழந்திருக்கின்றோம்.
சின்னச்சின்ன மாற்றங்கள் பல முன்னேற்றங்களை எம்மிடத்தில் கொண்டு வரும் என அரச உத்தியோகத்தர்கள் முதல் சமூக அமைப்புக்களின் தலைவர்கள் வரையில் அவர் தெரிவித்து குறை நிறைகளைச் சுட்டிக்காட்டும் அவர் போன்ற பெரியவர்களை இழப்பது வேதனைக்குரியது.

முதியவர்கள் வாழும் போதே கௌரவமளிக்கப்பட வேண்டும் என பலதடவைகள் வலிகாமம் கிழக்கில் முதியோர் தினத்தினை வருடாவருடம் சிறப்புற நடத்தியவர். சிரேஷ்ட பிரஜைகளின் உரிமைக்காகவும் செயற்பட்டவர். சிரேஷ்ட பிரஜைகள் ஓய்வூதியர்கள் நாட்டுக்குச் சுமையாகக்கூடாது வளமாக அமையவேண்டும் என உழைத்த நல்ல மனிதரை இழந்துள்ளோம் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதற்கான ஆயுதமாக மனித உரிமைகளைப் பயன்படுத்தவேண்டாம் – சீனா வலியுறுத்தல்

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்வதற்கான ஓர் ஆயுதமாக மனித உரிமைகளைப் பயன்படுத்துவதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தவிர்த்துக்கொள்ளவேண்டும் என்று சீனா பேரவையில் வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரம் தொடர்பான எழுத்துமூல அறிக்கை உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் கடந்த வெள்ளிக்கிழமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இலங்கை மீதான விவாதத்தில் பல்வேறு நாடுகள் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த நிலையில், இலங்கை தொடர்பான விவாதத்தின் இரண்டாம்நாள் அமர்வு நேற்று திங்கட்கிழமை ஜெனிவா நேரப்படி காலை 9 மணிக்கு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சீனாவின் பிரதிநிதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

இலங்கை குறித்து மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் அவதானம் செலுத்தியிருக்கின்றோம்.

அதேவேளை எமது நட்புறவு நாடு என்ற ரீதியில் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிசெய்தல், மேம்படுத்தல் ஆகியவற்றை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை வரவேற்கின்றோம். அதேபோன்று நிலைபேறான பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக்கொண்ட செயற்பாடுகளும் பாராட்டத்தக்கவையாகும்.

எனினும் இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானமானது, பக்கச்சார்பற்ற தன்மை, அரசியல் ரீதியான பாகுபாடற்ற தன்மை, தேர்வுசெய்து இயங்காத தன்மை உள்ளிட்ட பேரவையின் ஸ்தாபகக்கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானதாகக் காணப்படுகின்றது.

இலங்கையின் அரசியல் உறுதிப்பாடு, இறையாண்மை ஆகியவற்றுக்கு பேரவை மதிப்பளிக்கவேண்டியது அவசியமாகும். அதேபோன்று அந்நாட்டின் தேசிய ரீதியான வரையறைகளுக்கு அமைவாக மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிசெய்வதற்கான பொறிமுறையை முன்னெடுப்பதற்கு இடமளிக்கவேண்டும்.

இலங்கைக்குள் தலையீடுகளை மேற்கொள்வதற்கான ஓர் ஆயுதமாக மனித உரிமைகளைப் பயன்படுத்துவதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தவிர்த்துக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார்.

மார்ச் இறுதியில் பசில் ராஜபக்ஸ இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ள தீர்மானம்

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ மார்ச் மாத இறுதிப்பகுதியில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்வதற்கு தயாராகியுள்ளார்.

இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கருடனான தொலைபேசி கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இயலுமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு இந்தியா ஆதரவை வழங்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

Posted in Uncategorized

மேய்ச்சல்தரையில்  சட்டவிரோத குடியிருப்பை ஒப்புக்கொண்ட  சட்ட மா அதிபர் திணைக்களம் 

மட்டக்களப்பு  மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவணையில் மகாவலியின் இடது கரையில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையாக ஒதுக்கப்பட்டிருந்த காணிகளில் சட்டவிரோத குடியிருப்பாளர்கள்  குடியேறியுள்ளமையை சட்ட மா அதிபர் நேற்று மேன் முறையீட்டு நீதிமன்றில் ஒப்புக்கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம் (ஜனா)  ஆகியோர் தாக்கல் செய்திருந்த எழுத்தாணை மனு (ரிட் மனு)  மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சோபித்த ராஜகருணா மற்றும் தம் மிக கனேபொல ஆகியோர் முன்னிலையில் நேற்று (7) மேன் முறையீட்டு நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்டது.

இதன்போது, பிரதிவாதிகளுக்காக மன்றில் ஆஜரான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி விக்கும் டி ஆப்றூ  ஆகியோர் மேற்படி விடயத்தை நீதிமன்றில் ஒப்புக் கொண்டார்.

குறித்த பகுதியில்  32 சட்டவிரோத குடியிருப்பாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல் தரைப் பகுதியிலிருந்து வெளியேற்ற சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக சொலி சிட்டர் ஜெனரல் விக்கும் டி ஆப்று குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவணையில் மகாவலியின் இடது கரையில் மாடுகளுக்கான மேய்ச்சல் தரையாக ஒதுக் கப்பட்டிருந்த 100 ஏக்கர் காணியை சோள செய்கைக்காக தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்குஇ மகாவலி அதிகார சபை மேற்கொண்ட தீர்மானத்தை வலுவற்றதாக்கக் கோரி கடந்த வருடம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

சோளச் செய்கைக்கு தற்காலிகமாக வழங்கப்பட்ட அதிகாரப்பத்திரம் காலாவதியான நிலையில்இ மனுவில் சுட்டிக்காட்டப்பட்ட பிரச்சினைகளுக்கான துரித தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான இயலுமை கிடைக்க வேண்டும் என சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விக்கும் டி ஆப்றூ முன்னர் மன்றில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில்இ குறித்த விவகாரத்தில் , மேய்ச்சல் தரை நிலத்தில் சட்டவிரோத குடி யேற்றங்கள் இடம்பெற்றுள்ளமையும் மனு தாரர்களுக்காக மன்றில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனினால் மன்றில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அதன்படி நான்கு இலட்சத்திற்கு மேற்பட்ட கறவை மாடுகளுக்கு உணவளித்த மயிலத்தமடு, மாதவணை பகுதியை மீண்டும் கால்நடை வளர்ப்பாளர்களிடம் கையளித்தால் தமது மனுவை வாபஸ் பெறுவதற்கு தயாராகவுள்ளதாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இதற்கு முன்னர் நீதிமன்றில் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று, சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் தெரிவிக்கப்பட்ட சட்ட விரோத குடியிருப்பாளர்களை அகற்றும் நடவடிக்கை தொடர்பில், உரிய நடைமுறைகளைப் பின்பற்றவும், சட்டவிரோத குடியிருப்பாளர்களை அகற்றும் நடவடிக்கை குறித்த சட்ட நடவடிக்கையின் நிலைமையை மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு எதிர்வரும் ஜூன் 21ஆம் திகதியன்றோ அதற்கு முன்னரோ சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் பிரதிவாதிகள் தரப்பில் ஆஜராகும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலுக்கு உத்தரவிட்டது.

அதன் பின்னர், இந்த ரிட் மனுவை முன் னெடுத்து செல்வது அவசியமா இல்லையா என்பதை தாம் மன்றுக்கு அறிவிக்கக் கூடியதாக இருக்கும் என இதன்போது மனுதாரர் தரப்பின் ஜனாதிபதி சட்டத்தரணி விக்கும் டி ஆப்றூ குறிப்பிட்டார். இதனையடுத்து இந்த ரிட் மனு எதிர்வரும் ஜூலை 21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளர்இ ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினர் உள்ளிட்ட தரப்பினர் இந்த ரிட் மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஒரே நாடு ஒரே போக்கு ஒரே இருள் | பி.மாணிக்கவாசகம்

சிங்கள பௌத்த தேசியவாதத்தில் ஊறியுள்ள பேரின அரசியல்வாதிகள் இலங்கையின் பூர்வீகக் குடிகளாகிய தமிழ் மக்களின் அரசியல் அதிகார உரிமைகளைத் தொடர்ச்சியாக மறுத்து வருகின்றனர். இதன் விளைவாகவே தமிழ் மக்கள் தங்களுடைய தாயகப் பிரதேசத்தில் தனிநாடு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இந்தத் தனிநாட்டுக் கோரிக்கை தனித் தமிழ் ஈழத்துக்கான ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்தது.
ஆனால் சாத்வீக வழியில் ஆரம்பிக்கப்பட்டு ஒத்துழையாமையாக வளர்ச்சியடைந்து பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வை எட்ட முயற்சித்த போதிலும் தமிழ் அரசியல் தலைவர்களினால் தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகார உரிமைகளை வென்றெடுக்க முடியமாற்போனது.

தனிநாட்டுக் கோரிக்கையை நிராகரித்த அரசு இலங்கையை ஒரே நாடாகப் பிரகடனப்படுத்தியது. அதுவும் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் அடிப்படையிலான ஒரே நாடாகும் என்று நிலைப்பாட்டை வலியுறுத்தியது.

பிரிவினைவாத எதிர்ப்பும் ஒரே நாட்டு நிலைப்பாடும்

இந்தப் பின்னணியிலேயே ஈழக் கோரிக்கைக்கான ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதமாகச் சித்தரித்து 30 வருட கால யுத்தத்தை 2009 ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வந்தது. ஈழக் கோரிக்கைக்காகப் போராடிய விடுதலைப்புலிகளின் பிரிவினை வாதத்தைத் அரசியலமைப்பின் ஆறாம் திருத்தச் சட்டத்தின் மூலம் சிங்களப் பேரினவாத அரசியல்வாதிகள் தடை செய்தனர்.

எந்தவொரு அரச நிர்வாகக் கட்டமைப்பிலும் மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்படுவதற்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்பவர்கள் பிரிவினைவாதத்தை முன்வைக்க முடியாது என சட்ட ரீதியாக நிலைநாட்டியது. அத்துடன் எந்த நிலையிலாயினும் மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்து பதவியைப் பொறுப் பேற்பதற்கான சத்தியப் பிரமாணம் செய்பவர்கள் ஆறாவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் பிரிவினைவாதத்தைக் கோர மாட்டோம் என சத்தியம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் உருவாக்கப்பட்டது.

இதன் அடிப்படையிலேயே இலங்கை என்பது ஒரே நாடு என்ற நிலைப்பாடு நிலைநிறுத்தப்பட்டது. இந்த ஒரே நாடு என்ற நிலைப்பாட்டைத் தொடர்ந்து அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒரே சட்டத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை ஜனாதிபதி கோத்தாபாய அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது.

இந்த முயற்சிக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டார். ஞானசார தேரர் ஒரு பௌத்த துறவியாக இருந்த போதிலும் முஸ்லிம்களுக்கு எதிரான தீவிர இனவாதியாகச் செயற்பட்டவர். செயற்படுபவர். சிங்கள பௌத்த தேசியவாதிகளில் முக்கியமானவராகத் திகழ்பவர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிமன்றத்தினால் தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட இவரை நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்த மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பளித்து விடுதலை செய்தார். அதன் பின்னரும் ஞானசார தேரர் தனது இனவாதப் போக்கினைக் கைவிடவில்லை. முன்னரைப் போன்ற தீவிரவாதியாகவே செயற்பட்டு வருகின்றார்.

இந்த நிலையில் தமிழ் மக்களின் பாரம்பரிய சட்டங்களையும், முஸ்லிம்களின் சட்டங்களையும் இல்லாதொழித்து பௌத்த சிங்கள மக்களை முதன்மைப்படுத்தும் தன்மையிலான சட்டமாகவே ஒரு நாடு ஒரே சட்டம் என்ற கோசத்தின் ஊடாகப் புதிய சட்டத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சிறுபான்மை தேசிய இன மக்கள் கருதுகின்றனர்.

அதனை உறுதி செய்யும் வகையிலேயே பல்வேறு அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் ஞானசார தேரருடைய கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதனால் ஒரே நாடு ஒரே சட்டம் என்பது சிறுபான்மை இன மக்களை சட்டரீதியாக அதிகார வலு நிலையில் அடக்கி ஒடுக்குவதற்கான எத்தனிப்பு இடம்பெறுவதாக சிறுபான்மை இன மக்கள் சந்தேகிக்கின்றனர்.

இராணுவ மயமாகியுள்ள சிவில் நிர்வாகம்

இருள்யுத்தத்தை வெற்றிகொண்டு சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் வெற்றி வீரர்களாக எழுச்சி பெற்ற ராஜபக்ச சகோதரர்களின் – 2019 ஆம் ஆண்டிற்குப் பின்னரான இரண்டாம் கட்ட ஆட்சியில் வெளிப்படைத்தன்மை இல்லாத நடவடிக்கைகளே அதிகமாக முன்னெடுக்கப் பட்டு வருவதாக ஜனநாயகச் செயற்பாட்டாளர்கள் சுட்டிக் காட்டியிருக்கின்றனர். இந்தக் கருத்தைப் பொது அமைப்புக்களும் ஜனநாயகக் கட்டமைப்பில் நம்பிக்கை கொண்டுள்ள அமைப்புக்களும் பிரதிபலித்திருக்கின்றன.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதக் குண்டுத் தாக்குதலின் போது தேசிய பாதுகாப்பிற்கு அந்த ஆட்சியாளர்களினால் ஊறு விளைவிக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டி, இனவாதப் பிரசாரத்தை வலிமையாக முன்னெடுத்து ராஜபக்சக்கள் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களின் ஊடாகத் தமது ஆட்சி அதிகாரத்தை மீண்டும் நிலை நாட்டினார்கள். இதன் மூலம் பௌத்த சிங்கள மக்களினால் அமோக ஆதரவில் கோத்தாபாய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

இராணுவப் பின்னணியைக் கொண்டவராகவும், அரசியல் வழியிலான அனுபவ மற்றராகவும் கருதப்படுகின்ற ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச இராணுவ முனைப்புப் பெற்ற ஓர் அரசாட்சியையே முன்னெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ற வகையிலேயே அவருடைய நடவடிக்கைகள் அமைந்தன.

அரசியல் சாணக்கியமிக்க வகையிலான கொள்கைகளை அவருடைய செயற்பாடுகளில் காண முடியவில்லை என அரசியல் நிபுணர்களும் ஜனநாயகச் செயற்பாட்டாளர்களும் எடுத்துக் காட்டியிருந்தனர். அதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே பணி ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை சிவில் நிர்வாகக் கட்டமைப்புக்களின் தலைமைப் பதவிகளில் நியமித்தார்.

இருள்கோவிட் 19 நோய் அச்சுறுத்தலை எதிர் கொள்வதற்கான செயலணியின் தலைவராக முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், வெளி விவகார அமைச்சு, சுகாதார அமைச்சு உள்ளிட்ட முக்கிய தலைமைப் பதவிகளுக்குப் பணி ஓய்வு பெற்ற இராணுவ உயரதிகாரி களையே ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச நியமித்தார். சிவில் நிர்வாகக் கட்டமைப்பை இராணுவ மயப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாகவே இது அமைந்தது.

முரண்பாடான நிலைமைகள்

இராணுவ அதிகாரிகளை நியமிப்பதன் மூலம் சீரான சிவில் நிர்வாகத்தைக் கொண்டு நடத்த முடியும். ஊழல்கள் மோசடிகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது என்றெல்லாம் அவருடைய நடவடிக்கை சிலாகித்துப் பேசப்பட்டது. ஆனால் நிலைமைகள் தலைகீழாகவே மாறியிருக்கின்றன. இராணுவ அதிகாரிகளின் கீழான அமைச்சுக்களின் நடவடிக்கைகளில் என்ன நடக்கின்றது, உண்மையான நிலை என்ன என்பது மூடு மந்திரமாகவே உள்ளது.

அமைச்சக்களின் செயலாளர்களும், ராஜாங்க அமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் அரச உயரதிகாரிகள் யாவரும் தங்களுக்கு ஏற்றவாறான கருத்துக்களையே வெளியிடுகின்றனர். ஜனாதிபதியின் கருத்துக்களும் இவற்றுக்கு மத்தியில் அவ்வப் போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் இந்தக் கருத்துக்களும் அமைச்சக்கள் திணைக்களங்களின் நிலைப் பாடுகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாகவே காணப்படுகின்றன. நெருக்கடிகள் மிகுந்த பிரச்சினைகளில் ஜனாதிபதியின் கூற்று ஒன்றாக இருக்க நடைமுறை நடவடிக்கைகள் நேர்மாறானதாகவே அமைந்திருக்கின்றன.

குறிப்பாக டொலர் பற்றாக்குறையினால் ஏற்பட்டுள்ள மருந்து, எரிபொருள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டு;ப்பாடு தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரு கருத்தையும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் வேறு ஒரு கருத்தையும் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் பற்றாக்குறையினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்களைத் தீர்க்கும் வகையில் ஜனாதிபதி விடுக்கின்ற உத்தரவுகளும் வெளி வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பிரச்சினை மாத்திரம் தீராமல் தொடர்ந்து கொண்;டிருப்பதைக் காண முடிகின்றது.

உதாரணமாக எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மின் வெட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருவதை அனைவரும் அறிவார்கள். ஆனால் இந்த மின்வெட்டு தவிர்க்க முடியாத நடவடிக்கை என்று மின்சாரசபை அதிகாரிகள் கருத்து வெளியிடுகின்ற அதேவேளை, அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என அதற்குப் பொறுப்பான பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு கூறியது. அதேவேளை எந்தக் காரணத்தைக் கொண்டும் மின்சாரம் தடைப்படுத்தப்பட மாட்டாது என மின்விநியோகத்திற்குப் பொறுப்பான அமைச்சர் கூறிய கருத்தும் வெளியாகி இருந்தது. அதேவேளை தடையின்றி மின்விநியோகம் செயற்படுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட தகவலும் வெளியாகியிருந்தது.

ஆனால் எல்லாவற்றையும் மீறி மின்வெட்டு நiமுறைப்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் என்ன நடக்கின்றது. உண்மையில் நிர்வாகச் செயற்பாடுகள் யாருடைய கையில் இருக்கின்றது. அதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பது குறித்து குழப்பமடையவே நேரிட்டிருந்தது.

என்ன நடக்கின்றது?

அண்மையில் மின்விநியோகம் தடையின்றி செயற்படுத்தப்படும் என்றும், அதற்குத் தேவையான எரிபொருளைத் தட்டுப்பாடின்றி வழங்குமா

று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் எரிபொருள் போதிய அளவில் கிடைக்காத காரணத்தினால் மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டிருப்பதாக மின்சாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதற்கமைய நாட்டில் இரண்டு மணித்தியாலங்களாக இருந்த மின்வெட்டு நாலரை மணித்தியாலங்களாகி இப்பொது ஏழரை மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப் படுத்தப்படுகின்றது. இது நாளொன்றுக்குப் பத்து மணித்தியாலங்களாக அதிகரிக்கின்ற நிலைமை குறித்த எதிர்வு கூறல்களும் வெளியாகி இருக்கின்றன.

இந்த நிலையில் நாடு நாளொன்றின் கிட்டத்தட்ட மூன்றிலொரு பங்கு நேரம் இருளில் மூழ்கிக் கிடக்க நேர்ந்திருக்கின்றது. ஆனால் உண்மையில் என்ன நடக்கின்றது, ஏன் இந்த நிலைமை, இதற்குத் தீர்வு கிடைக்குமா, கிடைக்காதா என்பது குறித்த உண்மையான நிலைமைகள் குறித்த வெளிப்படைத்தன்மைழயைக் காண முடியவில்லை.

எரிபொருள் தட்டுப்பாடும் மிக மோசமான நிலைமையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. எரிபொருள் நிலையங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே எரிபொருள் விநியோகம் நடைபெறுகின்றது. எரிபொருளுக்கு ஏன் இந்தத் தட்டுப்பாடு ஏற்பட்டது, அது எப்போது தீர்க்கப்படும் என்பது குறித்த உண்மையான – வெளிப்படையான தகவல்கள் எதுவும் பொதுமக்களுக்குக் கிடையாது.

இதனால் மின்வெட்டு காரணமாக நாடு இருள்ல் மூழ்கியிருப்பதைப் போலவே முக்கியமான நெருக்கடியான விடயங்கள் பற்றிய உண்மையான நிலைமைகள் என்ன குறித்த வெளிப்படையான நிலைமைகளைக் காண முடியவில்லை.

இதனால் ஒரே நாட்டுக் கோஷத்தை முன்வைத்துள்ள இந்த ஆட்சியில் ஜனாதிபதியினதும், அவருடைய வழியிலான ஒற்றைப் போக்குடைய அரச நிர்வாகச் செயற்பாடும், மின்சாரம் இல்லாத இருள் சூழ்ந்த நிலைமையும், நாட்டில் என்ன நடக்கின்றது, நாடு எங்கு சென்று கொண்டிருக்கின்றது என்பது தெரியாத இருளான நிலைமையுமே காணப்படுகின்றது.

Posted in Uncategorized

தமிழின அழிப்புக்கு நீதி கோரி 7200 பன்னாட்டு அமைப்புகள் ஐக்கிய நாடுகள் சபைக்கு கடிதம்

தமிழ் இன அழிப்புக்கான நீதி மற்றும் சுய நிர்ணய உரிமையை ஐ.நா அங்கீகரிக்குமாறு கோரி 7200க்கும் மேற்பட்ட பன்னாட்டு அமைப்புக்கள் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவுக்கு கடந்த வாரம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளன.

தமிழ் இனத்தின் மீது சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புக்கு எதிரான பன்னாட்டு விசாரணை மற்றும் சுயநிர்ணய உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என ஐ.நாவில் அங்கத்துவம் பெற்ற 60க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 7200க்கும் மேற்பட்ட பன்னாட்டு அமைப்புக்களே எவ்வாறு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளன. இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது,

ஈழத் தமிழர்கள் கடந்த 20 வருடங்களாக தங்களது சுய நிர்ணய உரிமைக்காக போராடி வருகின்றனர்.

தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருவது தமிழர்களைத் தொடர்ந்தும் அடிமைகளாக வைத்திருப்பதற்கான நடவடிக்கையாகும்.

2009ம் ஆண்டு அறிக்கையில், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட போதும் 2012ம் ஆண்டு மன்னார் பேராயர் ராயப்பு ஜோசப்புவினால் ஒரு இலட்சத்திற்கும் அதிகம் என உறுதி செய்யப்பட்டது.

பாடசாலைகளில் மருத்துவமனைகளில் மற்றும் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் சிறீலங்கா போர் விமானங்கள் தாக்குதல்களை நடத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றொழித்தது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில் உலகத்தில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாக ஐ.நா செயற்குழு தெரிவித்துள்ளது.

போர்முடிந்து 13 வருடங்கள் கடந்த நிலையில் ஐ.நா மனித ஆணையகத்தின் உள்ளக பொறிமுறை மூலமான பொறுப்பு கூறலில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. சிறையில் பல வருடங்களாக விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வலியுறுத்த வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டம் என்ற போர்வையில் தமிழ் செயற்பாட்டாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்களை சிறைகளில் அடைப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வரும் பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும். மேலும் இராணுவ மயமாக்கல், நில அபகரிப்பு, ஊடகவியலாளர் மீது தாக்குதல், மனித உரிமை செயற்பாட்டாளர்களை அச்சுறுத்துகின்றமை என தாக்குதல்கள் தொடந்த வண்ணமே உள்ளன.

ஐ.நாவின் அங்கத்துவ நாடுகள் தமது விசேட பிரதிநிதியை அனுப்பி இலங்கையில் இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியான விசாரணை செய்ய வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து குறித்த கடிதம் ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

விமல், கம்மன்பில இல்லாத மொட்டு இருக்கமுடியுமா?

விமலும் கம்மன்பிலவும் இல்லாத மொட்டு எவ்வாறானது? யாராவது உங்களிடம் கேட்டால் நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?ரட்டே ரால குறிப்பிடுவது பருப்பு இல்லாத ஹோட்டலை போன்று. உண்மையில் விமல் மற்றும் கம்மன்பில இல்லாமல் இருப்பது மொட்டுவுக்கு எவ்வாறு தாக்கம் செலுத்தும்? அது மொட்டுக்கு சாதகமானதா பாதகமானதா ? அது தொடர்பில் நியாயமான ஒரு ஆய்வை மேற்கொள்வதாக இருந்தால் தற்போது மொட்டுவில் இருக்கக்கூடிய எண்ணிக்கையை சரியாக விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.

சிறிய கட்சி கூட்டணியை விடுத்து அடுத்த எல்லாம் மொட்டுவினுடையமது என்று யாருக்காவது சொல்ல முடியும். ஆகையால் அதனை ரட்டே ரால ஒரு போதும் ஏற்றுக்கொள்வது கிடையாது. இதனுள்ளே இன்னும் பல பிரிவுகள் காணப்படுகின்றன. அதாவது வெறுப்படைந்த மொட்டு உறுப்பினர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்கள் இந்த நிலையை தற்போது அளவிட்டு பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அதேபோன்று வெறுப்புணர்வோடு இருக்ககூடிய மொட்டுவின் சிரேஷ்ட்ட உறுப்பினர்கள் வாயை திறக்காவிடினும் அவர்கள் விமலிற்கும் கம்மன்பிலவிற்கும் நடந்ததை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்பது உறுதி. எங்களுக்கும் இதுதான் நடக்கும் என்ற பயத்தினால் அவர்கள் வாயை மூடி இருக்கின்றார்கள். அதற்குப் புறம்பாக ரட்டே ரால தொடர்ச்சியாக குறிப்பிட்டது ராஜபக்சக்களுக்கிடையே பிளவுகள் இருப்பதாக. தற்போது அது நிரூபிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சிறிய கட்சி கூட்டணியின் ஊடக கலந்துரையாடலில் விமல் அதனை நிரூபித்திருக்கிறார். இதற்கு முன்னரும் ஜனாதிபதி பதவி விலகல் கடிதத்தை அனுப்புமாறு கேட்டிருக்கின்றார். அப்போது மஹிந்த பைத்தியமா என்று எழுதிய அந்த பதவி விலகல் கடிதத்தை ஏதோ ஒரு அடிப்படையில் நிறுத்தியுள்ளார். அந்த இடத்தில் மஹிந்த பைத்தியம் என்று குறிப்பிட்டது யாருக்கு என்பது இன்னும் தெரியவில்லை.

அதேபோன்று தொடர்ச்சியாக பெசில் அவருக்கு அவசியமான வகையில் கோட்டாபயவை வழி நடத்துகிறார் என்று விமல் குறிப்பிடுகின்றார். அப்போது எங்களுக்கு வெளிப்படையாக இதன் உள்ளே இரண்டு குழுக்கள் இருப்பதை காண முடிகின்றது. அவையாவன மஹிந்த, பெசில்,அடுத்தது பெசில் பலவந்தமாக வழிநடாத்தும் கோட்டாபய. தற்போது ரட்டே ரால தொடராக குறிப்பிட்டு வந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ராஜபக்சக்களிடையே பிளவு உள்ளது. அடுத்ததாக பாருங்கள் அந்த பிளவு ஏற்பட்டது என்ன காரணத்திற்காக என்று? உண்மையில் இந்தப் பிளவானது ஏற்பட்டிருப்பது அதிகாரம் தொடர்பில் ஆகும். எதிர்கால அரசியல் பலம் தொடர்பில் ஆகும். விமல் குறிப்பிடுகின்ற அடிப்படையில் 2015ஆம் ஆண்டு தோல்வியின் பின்னர் பெசில் மஹிந்தவின் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கேட்டுள்ளார். அதன் பின்னர் 2019ஆம் ஆண்டு மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளர் வருவதற்கு அவர் முயற்சி செய்துள்ளார். அதற்கு விமல் இணங்கவில்லை. சில சந்தர்ப்பங்களில் விமலுக்கு பின்னர் மஹிந்தவும் இருந்திருக்க கூடும். அடுத்ததாக பொது ஜனபெரமுன என்பது பெசிலின் தனிப்பட்ட சொத்து என்று விமல் குறிப்பிடுகின்றார். கடந்த காலத்தில் மகிந்தவின் பிரதமர் பதவியை கழற்றுவதற்கு பெசில் பெரிய முயற்சி எடுத்தார் என்பது நாட்டுக்கு தெரியும்.

அவ்வாறாயின் ஒன்று வெளிப்படையானது. பெசில் இந்த அனைத்தையும் செய்வது 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவிக்கு வர.ரட்டே ரால சொன்ன அனுமானத்தை தற்போது விமல் அதனை உறுதிப்படுத்தி உள்ளார். பெசில் மஹிந்தவை மீறி அதிகாரத்திற்கு வருவதற்கு முயற்சி செய்த பல சந்தர்ப்பங்கள் இதனுள்ளே காணப்படுகின்றது. பெசிலுக்கு அதனை செய்வதற்கு முடியாது. எனினும் அவர் அந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார். இருப்பினும் மஹிந்த தன்னுடைய அரசியல் அனுபவத்தை பயன்படுத்தி அவை அனைத்தையும் தோல்வியடைய செய்துள்ளார்.விமல் அதற்கு அதிகம் உதவி செய்திருக்க கூடும். இன்றும் மஹிந்தவுக்கு அந்த தைரியம் காணப்படுகின்றது. உடலியல் ரீதியாக அவர் பலவீனமானராக இல்லையாயின் மஹிந்த தற்போதும் நல்ல ஒரு தைரியம் உடையவர் தான். எவ்வாறு இருப்பினும் பெசில் குடும்பத்தினரிடையே அதிகாரம் ஏலம்கோரப்பட்டுள்ளது என்பது வெளிப்படையானது. இருப்பினும் தற்போதைய பிரச்சினை ஏன் மஹிந்த பெசிலிற்கு இடம் வழங்காமை எப்பதாகும்.கோட்டாபயவிற்கு பின்னர் ராஜபக்ச குடும்பத்தில் இருந்து பதில் நபராக வர பெசில் பொருத்தமானவரா,

ரட்டே ராலவிற்கு என்றால் எந்த ராஜபக்சக்கள் என்றாலும் ஒன்றுதான். பெசிலுக்கு மஹிந்த வழங்கவில்லை என்றால் மஹிந்தவிடம் option ஒன்று இருக்கிறது. அதாவது அது தினேஷ் குணவர்தன இருக்க முடியாது தானே.டலஸ்ஸோ விமலோ இருக்க முடியாது. அவசியம் எனின் எந்தவொரு சிறுபிள்ளைக்கும் மஹிந்தவின் option என்னவென்று தெரியக் கூடியதாக இருக்கும். அவ்வாறாயின் மஹிந்த பெசிலுக்கு வழங்காமல் கோட்டாபயவுக்கு வழங்கியிருப்பது ஏன். அவசியம் எனின் இன்னும் ஒரு தடவை வழங்கி 2030ஆம் ஆண்டு நாமலுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என்று. மஹிந்தவுக்கு தெரியும் கோட்டாபயவிற்கு வழங்கினால் மீண்டும் அதனை பெற்றுக்கொள்ள முடியும் என்று.பெசிலுக்கு வழங்கினால் அதனை நினைத்துப் பார்க்கவும் முடியாது என்று. அதிகாரம் தொடர்பான விடயத்தில் பெசிலைப்போன்றே மஹிந்தவும். இருவரும் செத்த பிணங்கள். இருப்பினும் தற்போது கோட்டாபயவுக்கு பலவீனம் என்பதனால் 2024 ஆம் ஆண்டு வெற்றிடம் ஒன்று ஏற்பட இருக்கின்றது. இந்த நாட்டினுடைய மக்கள் மீண்டும் அதிகாரத்தை கனவில்கூட கோட்டாபயவிற்கு வழங்குவார்கள் என்று நினைக்க முடியாது. அதனால் வெற்றிடத்தை நிரப்புவதற்கு பெசில் முயற்சி செய்கின்றார். அதை நிரப்புவதற்கு முடியுமா என்பது இந்த இடத்தில் இருக்கக்கூடிய வேறு பிரச்சினையாகும்.

ஒரு மனிதருக்கு அவ்வாறான கனவு ஒன்று இருக்க முடியும். மஹிந்த வழங்கவில்லை என்றால் இதனை எவ்வாறாவது சரி செய்ய வேண்டுமல்லவா. பெசிலும் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும். அவர் ஒரு மூத்த மனிதர் அல்லவா. பெசில் ப்ளேன் ஒன்றை செய்திருக்கின்றார். அது நடைமுறைப்படுத்தப்படுமாக இருந்தால் 2030 இல் நாமலுக்கு சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடும். மஹிந்தவுக்கு அது தெரியும். அதனால் தற்போது மஹிந்தவிடம் இருக்கக்கூடிய பதில்தான் 2030 க்கு நாமலை அனுப்புவதை விட 2024 இல் நாமலை அனுப்புவதே ஆகும். அதாவது பெசில் மஹிந்தவிடம் 2015 இல் இருந்து ஒரு சந்தர்ப்பத்தை கேட்டுவரும்போதும் மஹிந்த அதற்குரிய வழியை வழங்கவில்லை. தற்போது பெசிலுக்கு கோபம் வந்துள்ளது. தற்போது அவர் உருவாக்கிய அந்த திட்டத்தோடு நோக்கி செல்கின்றார். இந்த இடத்தில் விமல் குறிப்பிட்ட விடயம் சரியானதே. அந்த எண்ணத்திலேயே பெசில் மொட்டுவை உருவாக்கிறார். இன்று விமலுக்கு அது தெரிந்த போதும் அன்று விமலுக்கு அது தெரியவில்லை. தெரியவில்லை அல்ல தெரியாதது போன்று இருந்தார். சுருக்கமாகச் சொன்னால் விமல் 2017 குழந்தையானார்.

இல்லையெனின் பெசிலின் இந்த தேவையை நிறைவேற்றுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக உடைந்து பெசிலுக்கு உதவுமா?பெசிலுடன் இணைந்து விமல் அதனை செய்தார். இருப்பினும் பெசில் அதற்கு ஒத்துக்கொண்ட கணக்கை விமலிற்கு வழங்கவில்லை. விமல் கேட்டது பொது ஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பதவியை தமக்கு வழங்குமாறு. வழங்காமல் இருந்ததனால்தான் விமல் பெசில் முரண்பாடு ஏற்பட்டது. அந்த முரண்பாட்டின் உள்ளே உள்ள ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மஹிந்த அதனை நாமலுக்காக பயன்படுத்தினார். விமல் தெரிந்தோ தெரியாமலோ சுய விருப்பில் அவற்றை மேற்கொண்டார். அந்த நிலையில்தான் மொட்டுவின் ஒரு அதிகாரம் மிக்கவராக பெசில் வந்தார்.மொட்டுவின் முக்கிய நபர்களை தம்வசப்படுத்தினார். முக்கிய நபர்கள் மாத்திரமல்ல சிறிய கட்சியினர்களையும் தன்வசப்படுத்தினார். விமலின் கட்சியினுடைய நபர்களையும் அவர் தன் வசப்படுத்தினார். இன்று அந்த இடத்தில் விமலுடன் உள்ளவர்களையும் பிடித்து இருக்கின்றார். தேவையான சந்தர்ப்பத்தில் பெசில் அவர்களை வெளியே எடுப்பார். அவ்வாறான ஒரு நிலையில் தான் விமலை பற்றி நாங்கள் பார்க்க வேண்டிய தேவை இருக்கின்றது.

அடுத்ததாக இந்த இடத்தில் இன்னுமொரு விடயத்தை கவனத்திற் கொள்ளல் வேண்டும். அதுதான் மொட்டுவின் உரிமையாளர் யார் என்பது? மஹிந்தவின் உடையதா அல்லது பெஸிலின் உடையதா? இந்த கேள்விகளுக்கு பதிலை தேடும்போது விமல், கம்மன்பில இன்னும் மொட்டுவில் இருக்க வேண்டுமா இல்லையா என்பதனை தீர்க்க முடியும். உண்மையில் மஹிந்தவின் Angele லில் நாங்கள் பார்த்தால் விமல் கம்மன்பில இன்னமும் மொட்டுவில் இருத்தல் வேண்டும்.மஹிந்தவின் இலக்கை நோக்கி செல்வதாக இருந்தால் விமல், கம்மன்பில உள்ளிட்ட சிறிய கட்சிகள் அவசியம். அந்த இடத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை எடுக்க முடியாமல் போகும். இருப்பினும் அடுத்தவர்களை எடுக்கக் கூடியதாக இருக்கும். அதாவது நாமலுக்கு கிரீடத்தை அறிவிப்பதற்கான அந்த project ற்கு விமல் போன்றவர்கள் அத்தியாவசியமாகும். இருப்பினும் பெசிலின் Angele லில் பார்த்தால் அவருடைய பயணத்திற்கு இருக்கக்கூடிய இரண்டு ஆணிகளாக காணப்படுபவர்கள் விமலும் கம்மன்பிலவும். ஏனென்றால் குறித்த இரண்டு பேரும் மஹிந்தவின் உடைய வழியிலே இருக்கின்றார்கள். அதனால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பெசில் முயற்சிப்பது அந்த இரண்டு ஆணிகளையும் பிடுங்குவதற்கு தான்:

விமல் குறிப்பிடுகின்ற அடிப்படையில் பெசில் பாராளுமன்றத்திற்கு வருகை தருவதற்கு முன்னர் அந்த விடயத்தை செய்து இருந்தார். பாராளுமன்றம் வருகை தந்ததன் பின்னரே கூடுதலாகக் காணப்பட்டது. அதாவது கடந்த காலத்தில் மொட்டுவின் அமைச்சர்கள் விமல் போன்றவர்களுக்கு நன்மைகளை தெரிவிக்காது நன்மைகளை பகிர்ந்தது பெசிலின் தேவைகளுக்கே. ரோஹித,ஜோனி,எஸ்எம்,குட்டி போன்றவர்களின் குரல்களுக்கு பின்னால் இருந்தது பெசிலே.இருப்பினும் இவையாவற்றின் இறுதி கொத்தணியாக மாறியது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே. தாம் அதிகாரத்துக்கு வருவதற்கு அதிகபட்சமாக உதவி செய்த இருவரதும் கழுத்தை வெட்டும் அளவுக்கு ஜனாதிபதி ராசியற்றவராக மாறியுள்ளார். உண்மையில் விமல் குறிப்பிடும் வகையில் கோட்டாபயவுக்கு கத்தியை கொடுத்தவர் பெசிலே. அதிலிருந்து எங்களுக்கு இவ்வாறு நினைக்க முடியும். கோட்டாபயவுக்கு இந்த அனைத்து விதமான வேலைகளுக்கும் கயிற்றை வழங்குவது பெசில் என்று.அதேபோன்று ரட்டே ரால இன்னமும் விசுவாசம் கொள்வது விமல் போன்றவர்கள் கடந்த 2ஆம் திகதி மேற்கொண்ட அந்த நாடகத்திற்கு பின்னால் இருப்பது மஹிந்த என்று.அதன் பிரதி மஹிந்தவின் உடையது.

வேலை பிழைத்ததற்கு காரணம் நடிகர் எழுதிக்கொடுத்த இருவகையான உரையாடல்களுக்கு மேலதிகமாக அந்த விடயத்தை சொல்ல முற்பட்டபோது தான். அதாவது அந்த மாத்திரையை கூடுதலாக எடுத்தது. ஓவர் ஓவர்டோஸ் ஆகியமை. ரட்டே ரால குறிப்பிடுவது மஹிந்த இந்த நிலையை நன்றாக நினைத்து மீண்டும் ஒரு திரைக்கதையை எழுதுவார். தற்போது நீங்கள் இருக்கக்கூடிய அந்த சூழ்நிலையை பாருங்கள் அவ்வாறு நடைபெறுகிறதா இல்லையா என்று. இருப்பினும் இந்த நடிகர் இருவரும் போராடுகின்ற நடிகர்களாக வர முடியாமல் உள்ளனர். ஏனென்றால் அது அந்த பரம்பரையின் 5 வது சபையாக இருப்பதாகும். உண்மையில் ரட்டே ரால குறிப்பிடுவது அந்தத் திரைப்படம் அண்மித்து அண்மித்து வரும்.coming துண்டுகள் தற்போது வருகின்றது.அதனை சரியாக செய்தால் அந்த இருவருக்கும் மீண்டும
ஒரு சான்சை ஒன்றை பெறமுடியாமல் இல்லை. இருப்பினும் தற்போது இருக்கக்கூடிய போராட்டத்தில் பெசில் வெற்றிபெற்றுள்ளார். பெசிலின் நிலைக்கேற்ப விமலையும் கம்மன்பிலவையும் துரத்துவது அவருக்கு நல்லது.பார்ப்போம் மஹிந்த வேறு ஏதாவது ஒரு புதிய போராட்ட அறிமுகத்தை கொண்டு வருகின்றாரா என்று. ஏனென்றால் விமல் குறிப்பிடுகின்ற அடிப்படையில் ஜனாதிபதிக்கு பெசில் குறிப்பிட்டிருப்பது விமலும் கம்மன்பிலவும் அமைச்சரவைக்கு வருவதாக இருந்தால் தான் வரமாட்டேன் என்று.

அதற்கிணங்க தான் கோட்டாபய அந்த வேலையை செய்துள்ளார். அவசியம் என்றால் மஹிந்தவுக்கும் சொல்ல முடியும் விமலும் கம்மன்பிலவும் இல்லாத அமைச்சரவைக்கு நான் வரமாட்டேன் என்று. ஏனென்றால் பெசிலைவிட மஹிந்தவுக்கு பெரிய அழுத்தத்தை கொடுக்க முடியும்.ரட்டே ரால குறிப்பிடப்படுகின்ற இந்த எந்த ஒன்றும் செய்ய முடியாமல் இல்லை. நாமலுக்காக மஹிந்தவிற்கு அவ்வாறு செய்ய முடியாமலும் இல்லை. இதிலிருந்து இந்த நாட்டுக்கு கற்றுக் கொள்ளக் கூடிய பெரிய அரசியல் பாடம் ஒன்று இருக்கின்றது. முழு நாடும் சரியான பாதைக்கு என்று சொல்லி அவ்வாறு இல்லை என்றால் பெசிலை வர்ணித்து வருகின்ற எந்த ஒன்றும் அதிகாரப் போட்டிக்கே. அதன் உள்ளே இருப்பது மஹிந்த அல்லது பெசில். அடுத்ததாக மொட்டுவில் இருக்கக்கூடிய ராஜபக்சவாதிகளுக்கு இதன் மூலம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடம் இதனுள்ளே காணப்படுகின்றது. வரலாற்றில் ஒருநாள் ரட்டே ரால விமலுக்கும் இதனை குறிப்பிட்டிருக்கின்றார். யாராவது ஒருவர் ராஜபக்ஷக்களுக்கு தலையை பணித்தால் அவர்களது தலையை கீழ்படும் அளவுக்கு பணியச்செய்வார்கள். இறுதியில் நிலத்தில் வைத்து காலால் உதைத்து சும்மா விடுவார்கள்.

இதனை மஹிந்த செய்வது வேறு அடிப்படையில். அதாவது நோகாதவாறு.பெசில் நேரடியாக கால் பூட்டு போடவதுபோல் செய்துவிடுவார். இருவரும் செய்வது ஒரே வேலையைத்தான். இருப்பினும் அவை இரண்டு வகையான முறை அதுதான் வேறுபாடு. அதற்குத்தான் சிறந்த உதாரணம்தான் விமல் மற்றும் கம்மன்பில. இந்த இடத்தில் ஒரு விடயம் உறுதிபடுகின்றது. ராஜபக்சக்களை உயர்த்துவதற்கு கைகொடுத்தவர்கள் எழும்போது ராஜபக்சக்கள் அடிப்பார்கள். உதவி செய்தவர்களுக்கு வரும்போதே தாக்கும் அளவு தன்மை கொண்ட ராஜபக்சக்களைப்போன்ற நல்ல மனிதர்களை ரட்டே ரால இந்த நாட்டில் இன்னும் காணவில்லை. அதே போன்ற தன்மை விமலிடமும் காணப்படுகின்றது. யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதுதான் உண்மையாகும்.

அப்படியாயின் போய் வருகின்றேன் கடவுள் துணை, வெற்றி கிட்டட்டும்

இப்படிக்கு
ரட்டே ரால

Posted in Uncategorized

சிறுபான்மை மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் இலங்கைக்கு நெருக்கடி ஏற்படும் – சந்திமா விஜேகுணவர்த்தன

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கைக்கு எதிராக தடைகளை விதித்தால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் நாட்டுக்குள் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் இடம்பெறாமல் பாதுகாத்துக்கொண்டு செயற்பட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

குறிப்பாக சிறுபான்மை மக்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என சிறிலங்கா மனிதநேய கட்சியின் தலைவி கலாநிதி சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் பாதுகாத்துக்கொள்ள அரசாங்கம் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கைக்கு எதிராக தடைகளை விதிப்பதற்கு கலந்துரையாடி வருகின்றது. உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தாக்குதல் மேற்கொண்டுவருவால் ஐராேப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு பொருளாதார தடைகளை ஏற்படுத்திவருவதன் மூலம் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்பைவிட ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கைக்கு எதிராக தடைகளை விதித்தால் பலமடங்கு பாதிப்பு ஏற்படும்.

அதனால் அரசாங்கம் நாட்டுக்குள் சிறியளவிலான தவறும் ஏற்படாமல் செயற்படவேண்டும். குறிப்பாக இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை தொடர்ந்து பேணி வரவேண்டும்.

மனித உரிமைகள் மீறப்படாமல் பாதுகாத்துக்கொண்டு செயற்படுதல், மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் இடம்பெறாமல் பாதுகாத்துக்கொண்டு செயற்படல் மற்றும் நாட்டின் ஜனநாயகத்தை முறையாக செயற்படுத்திவருவது இந்த காலத்தில் மிகவும் முக்கியமாகும்.

ஏனெனில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 196 அங்கத்துவ நாடுகள் இருக்கும் நிலையில் பேரவையின் இரண்டாவது தினத்திலேயே, மனித உரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கையின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளதான் மூலம் வெளிப்படுத்தப்படுவது, இலங்கைக்கு எதிராக பாரிய அழுத்தங்களை ஏற்படுத்தக்கூடிய பலம் தங்களிடம் இருப்பதையே காட்டுகின்றது.

அந்த பலத்தை இல்லாமலாக்குவதற்கு இலங்கையில் வாழும் மக்கள் ஜனநாயக உரிமைகளுடன் செயற்படுவதை உறுதிப்படுத்தவேண்டும்.

பல்லின மக்கள் வாழும் இந்த நாட்டில் அனைத்து இன மக்களும் தங்கள் மத, கலாசார உரிமைகளுடன் வாழ்வதை உறுதிப்படுத்தவேண்டும்.

இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தவேண்டும். குறிப்பாக நாட்டில் பெரும்பான்மை மக்களுக்கு இருக்கும் அனைத்து உரிமைகளையும் பெற்று, சிறுபான்மை மக்கள் சுதந்திரமாக வாழ்வதை உறுதிப்படுத்துவது ஆட்சியாளர்களின் பொறுப்பாகும்.

அத்துடன் நாடுபொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ளது. உற்பத்தி பொருட்கள் இல்லாமையால் தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நாட்டில் அமுல்படுத்திவரும் மின் துண்டிப்பு பொருளாதாரத்துக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. அதேபோன்று மின் துண்டிப்பு காரணமாக அதி குளிரூட்களில் உணவுப்பொருட்களை பாதுகாத்துவைக்கும் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு 7,8 மணி நேரம் ஜெனரேட்டர்களை பயன்படுத்துவது சாத்தியமில்லை.

அதனால் செலவு அதிகரிக்கும். இந்த நடவடிக்கையை முன்னெடுத்துச்செல்வதற்கு யாராவது நடவடிக்கை எடுப்பதாக இருந்தால், அது இலங்கையை வீழ்ச்சியடையச்செய்ய செய்யும் சதித்திட்டமாகும் என்றார்.

Posted in Uncategorized

மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மகிழ்ச்சியளிக்கிறது – ஜனா எம்.பி.

ஐந்து தமிழ்க் கட்சிகளினால் அனுப்பப்பட்ட கடிதத்திலுள்ள பெரும்பாலான விடயங்கள்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் உள்ளடங்கியிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) இன்றைய தினம் மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் கூட்டத் தொடர் தொடங்கியிருக்கிறது. அதுதான் தற்கால பேசுபொருளாகவும் இருக்கின்றது. இலங்கையில் பொறுப்புக்கூறலானது பின்னடைவைச் சந்தித்துள்ளதாக மனித உரிமை ஆணையகத்தின் ஆணையாளர் தெரிவித்திருக்கிறார்.

ஓவ்வொரு முறையும் மனித உரிமை ஆணையகத்தின் கூட்டத்தொடர்களிலும் பாதிக்கப்பட்ட எமது தமிழர் தரப்பிலிருந்து பிரதிநிதிகள் நேரடியாக பங்கேற்பர். கடந்த சில தவைகளில் நேரடியாகப் பங்குபற்றாமல் இங்கிருந்து மெய்நிகர் வழியாக இங்கு நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்களை கடிதம் மூலமாக அனுப்பி வைக்கிறோம். அந்த வகையில் இந்த வருடம் கூட தற்போதைய கூட்டத் தொடருக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறது.

அதேபோன்று விபரமாக இங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்கள், காணி அபகரிப்புகள், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக நடைபெறும் கைதுகள் தொடர்ந்தும் அரசியல் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது போன்ற பல விடயங்களை உள்ளடக்கி தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கும் ஐந்து கட்சிகள் இணைந்து விபரமான அறிக்கையை அனுப்பியிருந்தார்கள்.

அந்த வகையில் ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் மெய்நிகர் மூலமாக இந்த ஐந்து கட்சித் தலைவர்களுடன் உரையாடியிருந்தார்கள். இந்த ஐந்து கட்சிகள் அனுப்பிய விளக்கக் கடிதத்தில் குறிப்பிட்ட பல விடயங்கள் ஆணையாளரின் இலங்கை சம்பந்தமான அறிக்கையில் உள்ளடங்கியிருக்கிறது. ஆணையாளரினால் அங்கத்துவ நாடுகளுக்கு 13 பக்க அறிக்கை வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த அறிக்கையில் ஐந்து கட்சியினால் அனுப்பப்பட்ட கடிதத்தின் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பது எங்களுக்கு உண்மையில் மகிழ்ச்சியைத் தருகின்றது.

மனித உரிமை ஆணையாளரின் குறுகிய அறிக்கை நிமித்தம் மெய்நிகர் மூலமாக உரையாடிய அதிகாரிகள், இலங்கையில் பொறுப்புக்கூறல் முறையாக நடைபெறவில்லை. இலங்கையில் சகலராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு அரசியல் தீர்வு காணப்படுவதன் முக்கியத்துவத்தினை வலியுறுத்தியிருக்கின்றார். அத்தோடு இந்திய அரசாங்கத்தின் சார்பில் பங்குபற்றிய அதிகாரி, 13வது திருத்தச் சட்டம் உள்ளடங்கலாக இலங்கையில் தமிழர்கள் சமத்துவமாக, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு அதிகாரப்பரவலாக்கத்துடன் கூடிய அரசியல் தீர்வு கொண்டு வரப்பட்டு மிக விரைவாக மாகாண சபைகள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியிருக்கின்றார்.

இவற்றையெல்லாம் பார்க்கின்ற பொழுது எமக்கான தீர்வு மிக விரைவில் வரும் என்பதில் ஓரளவுக்கு நிம்மதியடையக்கூடியதாக இருக்கின்றது.

இந்த அளவில் ஒன்றைக் கூறிக்கொள்ள வேண்டும். தமிழ்த் தேசியப் பரப்பில் தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் ஒருகாலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒற்றுமையாக, தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்காக, அரசியல் ரீதியாக போராடிய கட்சிகள் 2009களுக்குப் பிற்பாடு இக் கட்சிகள் பிளவுபட்டிருக்கின்றன. இந்தக் கட்சிகள் பிளவுபடுவதற்கான காரணங்கள் ஓரளவுக்கு தெரியாமலில்லை. இந்த விடயத்தில் நாங்கள் நான் பெரிது நீ பெரிது என்று பார்க்காமல் ஐந்து கட்சிகள் ஒன்றாக இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாகத்திற்கு கடிதம் எழுதியது போன்று ஏனைய கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவோhக இருந்தால் இன்னமும் விரைவாக, கூடுதலான பெறுபேறுகளைப் பொற்றுக் கொள்ள முடியும்.

அந்தவகையில், பாதிக்கப்பட்டு, உரிமையிழந்து இருக்கின்ற எமது இனத்துக்காக நாங்கள் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும் என்பதனை அனைத்துக் கட்சிகளிடமும் வலிந்து கேட்டுக் கொள்கின்றேன்.

அசிங்கமான அமெரிக்கர் சிறிய கட்சி கூட்டணியை விழுங்குவாரா?

சிறிய கட்சி கூட்டணி தங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட வேலை தொடர்பில் நேற்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தார்கள். வேலை ஆரம்பிக்கப்பட்ட இடமே லொக் போல. 2ஆம் திகதி முழு நாட்டையும் சரியான பாதைக்கு என்று குறிப்பிட்டு அந்த மேடையில் இருந்த அனைத்து கட்சிகளது தலைவர்களும் நேற்று காணப்படவில்லை. சிறு கட்சி கூட்டணியின் முக்கியமான பங்குதாரராக இருக்கக்கூடிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பக்கத்திலிருந்து அனுப்பியிருந்தது ஒரு முன்னாள் மாகாண சபை உறுப்பினரே. அவர்கள் அந்த வேலை தொடர்பில் கவனத்தில் கொள்ளவில்லை.

எவ்வாறு இருந்த போதிலும் இந்த போராட்டத்தின் இறுதி பிரதிபலனாக நடைபெற்றது முழு முழு நாடும் சரியான பாதை என்பது, இருப்பினும் சிறிய கட்சிகளின் கூட்டணி இடையே இது முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் அவ்வாறு ஏற்பட்டது ஏன்? அதனை மேற்கொண்டவர்களுக்கு அடுத்த செயற்பாடொன்றை எடுக்க முடியாத தற்கான காரணம் என்ன? அதற்கு பிரதான காரணமாக அமைவது சிறிய கட்சி கூட்டணிக்கு எவ்விதமான ஒரு நோக்கமுமல இல்லாமல் இருப்பதாகும். உண்மையில் சிறிய கட்சி கூட்டணியின் நோக்கம் முழு நாடும் சரியான பாதைக்கு கொண்டு செல்வது அல்ல. அது அவ்வாறு இல்லையெனின் இந்த கட்சிகளின் தலைவர்கள் கடந்த காலங்களில் நடந்து கொண்ட விதம் மூலமாக அறியக்கூடியதாக இருந்தது. அதனை சரியாக சொல்லவதாக இருந்தால் இவர்கள் ராஜபக்ஷக்களுக்கு பின்னால் சென்றது எவ்வித ஆடையும் இல்லாமலே. இருப்பினும் இவர்கள் கொக்கரிக்க ஆரம்பித்தது தாங்கள் உணர்வுபூர்வமாக நிறைவேற காரணமாய் அமைந்த 20ஆவது திருத்தத்துக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு பின்னர் ஆகும். சுருக்கமாக சொன்னால் பெசில் பாராளுமன்றம் வருகை தந்ததன் பின்னரே.

இது நடைபெறுவது பெசில் மற்றும் இவர்களுடைய நோக்கங்களிடையே ஒருமித்த தன்னை இன்மையே. பெசிலிற்கு 2024 ஆம் ஆண்டு நாட்டினுடைய ஜனாதிபதிக்கான பயணம் இருக்கின்றது. இவர்களிடம் இருந்தது மஹிந்த பெயர் குறிப்பிடுகின்ற அல்லது நாமலோடு உரிய பயணம். அந்த இரண்டுக்குமிடையிலான முரண்பாடே தற்போது வெளியிலே வந்துள்ளது. இருப்பினும் மஹிந்தவோ, பெசிலோ வேறு ராஜபக்ஷக்களோ அதுகுறித்து வெளியில் கதைக்கவில்லை. அந்த முரண்பாட்டுக்கு இரண்டு பக்கமும் அரசியல் வேட்டை நாய்கள் இருந்தது. அந்த இரு அணிகளிலும் பெசில் அணி முக்கியமானது. அதன் முன்னே விமல், கம்மன்பில,வாசு போன்றோர் மிகவும் கஷ்டப்பட்டதுடன் அதிலிருந்து வெளியேறுவதற்கான ஏற்படுத்திய ஒரு பபர்தான் சிறிய கட்சி கூட்டணி. உண்மையில் அவர்கள் ஒன்று சேர்ந்து தங்களுடைய உடலில் ஏற்படுகின்ற அழுத்தத்திற்காக வேண்டியே ஒழிய நாடு எதிர்நோக்குகின்ற அழுத்தத்திற்கான ஒன்றல்ல. உண்மையில் இது ஒரு தனிப்பட்ட நோக்கமே ஒழிய பொது நோக்கம் ஒன்று இதில் காணப்படவில்லை என்ற விடயம் தற்போது தெளிவாகியுள்ளது.

அரசாங்கம் விமலையும் கம்மன்பிலவையும் நீக்க எடுத்த செயற்பாடு அவர்கள் இருவருக்கும் மாத்திரமானது அல்ல. கருத்துப்போனது அவர்கள் இருவருக்கும் ஆக இருந்தாலும் அந்த செயற்பாடு பொறிமுறை எடுத்திருப்பது சிறிய கட்சி கூட்டணியின் ஒட்டுமொத்த செயற்பாடுகளுக்கும் எதிராகவே. அதனால் அவர்கள் பொது நோக்கத்தில் இருந்தால் தற்போது அடுத்த செயற்பாடாக அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். சரியாக அந்த இடத்தில் தன்னுடைய அமைச்சுப்பொறுப்பிலிருந்து விலகி இருத்தல் வேண்டும். தற்போது புதுமையான ஒரு பைலா அடிக்கின்றார். அதுவும் நோயாளிகளை பணயக்கைதிகளாக வைத்து சுகாதார சேவைப்பிரிவின் வேலைநிறுத்தத்தைப்போன்று.வாசு அமைச்சின் வரப்பிரசாதங்களுக்கு முன்னால் உள்ளவைகளை அரிவாளாலும் சுத்தியலாலும் அவற்றை மறைக்க முடியாது. உண்மையில் வாசு எனபவர் கருத்தியல் ரீதியாக உறுதியானவரன்று. அதாவது பச்சை திரவம் போன்ற ஒரு நபராவார். உங்களுக்கு ஞாபகம் இருக்கின்றது வாசு ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஒரு நாள் அவர் கூறிய விடயம் கோட்டாபய என்பவர் மிலிட்டரி மனதுடையவர் என்று .அந்த இரும்பு செருப்புக்கு நாட்டை கீழ்நிலைப்படுத்த முடியாது என்று.

அவ்வாறு குறிப்பிட்ட வாசுக்கு ஒரு கிழமைகழிந்த பின்னர் கோட்டாபய சிறந்த ஜனாதிபதி வேட்பாளர் ஆனார். அதனால் ரட்டே ரால நினைப்பது அடுத்த பக்கத்தில் தற்போது வாசுக்கு சொட் வைத்துள்ளார்கள் என்று . வாசு பெசில் தான் அடுத்த ஜனாதிபதி அபேட்சகருக்கு பொருத்தமானவர் என்று சொன்னால் அது தொடர்பில் ரட்டே ரால புதுமை அடைவதில்லை .

அடுத்ததாக தேசிய சுதந்திர முன்னணியில் உள்ள இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர இதுவரைக்கும் அவருடைய பதவி விலகல் கடிதத்தை வழங்கி இருத்தல் வேண்டும் .ஆனால் கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி அவர் சுகயீனமாக இருக்கின்றாராம். சிறிய கட்சி கூட்டணி அல்ல குறைந்தபட்சம் தேசிய சுதந்திர முன்னணியின் செயற்பாடுகள் கூட ஒரு பக்கத்தில் செல்ல முடியாது உள்ளது. ஜயந்த பதவி விலகாமல் இருப்பது உண்மையில் அரசியல் கோழைத்தனமாகும். ரட்டே ரால நினைப்பது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விமலுக்காக கழுத்தை கொடுத்துள்ளது என்று . உண்மையில் அவர்களுக்கு ஒரு தர்க்கம் இருக்கலாம். நாங்கள் வந்தது முன்மொழிவுக்காக முன்னிற்க. இருப்பினும் குறித்த எல்லையை மீறி விமலும் கம்மன்பிலவும் பெசிலுக்கு செய்தது தவறு என்று . அவ்விருவரும் அரசாங்கத்தினுடைய கெபினட் அமைச்சர்கள் என்பதால் அவ்வாறு சொல்லலாம்.

விமல் மற்றும் கம்மன்பில எப்போதும் அவ்வாறான வேலைகளை செய்கின்ற இருவராவர். தாங்களால் ஏற்க முடியாதவைகளுக்கு எல்லை மீறி தம் கருத்துக்களை சொல்வார்கள். அதிலிருந்து அவர்கள் தங்களது எதிரிக்கு சொல்வது இந்த கூட்டம் அனைவரும் எங்களுடன் தான் இருக்கின்றார்கள் என்று. அதனால் மேடையில் இருக்கக்கூடிய அந்த நபர்கள் தர்மசங்கடத்திற்கு உட்படுவர். அன்று இரண்டாம் திகதியும் விமல் அதனை செய்தார். நேற்றைய கலந்துரையாடலின்போது அதனை செய்தார். தற்போது அவருக்கு ஒரு வினாடியேனும் இந்த அரசாங்கத்தில் இருக்க முடியாது. ஜனாதிபதி தனது சகோதரரரை வைத்துக்கொள்ள அவர்களை நீக்கிவிட்டார். உண்மையில் விமல் குறிப்பிட்டது இந்த ஜனாதிபதி பெசில் நடிக்கவைக்கும் பொம்மை என்று. அந்த கதை உண்மை ரட்டே ரால அதனை விமல் குறிப்பிடுவதற்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் தற்போது விமலிற்கு அரசாங்கத்தில் இருக்க முடியாது. குறைந்தபட்சம் தேசிய சுதந்திர முன்னணி, கம்மன்பில சுயாதீனமாக இருத்தல் வேண்டும். சிறிலங்கா சுதந்திரக் கட்சி தற்போது குறித்த போராட்டத்தில் விலகியது போன்று தோன்றுகின்றது உண்மையில் இந்தப் பிரச்சனையினால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு உள்ளே உள்ளக முரண்பாடு விரிசல் அடைவது திண்ணமானது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரை தலைமை ஆசனத்தில் வைத்துக்கொண்டே மேற்கொண்ட போராட்டமே இது.இருப்பினும் அவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது என்ற நிலையில் நிலையில் இருந்து கொண்டு வந்த போராட்டமாக இதனை நினைக்க முடியாது.சில சந்தர்ப்பத்தில் விமலும் கம்மன்பிலவும் அவ்வாறு நெளியமாட்டார்கள் என்று நினைத்திருக்கக் கூடும். இருப்பினும் அவர்களோடு ஒன்றாக போராட்டத்தில் இருந்த இருவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒன்றாக நின்று தம்முடைய எதிர்ப்பை தெரிவிக்கும் பொறுப்பை செய்தல் வேண்டும்.

இருப்பினும் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சுப் பொறுப்பை விடுவாரா? மஹிந்த அமரவீர அமைச்சுப் பொறுப்பை கைவிடுவாரா? துமிந்த திசாநாயக்க இராஜாங்க அமைச்சுப் பொறுப்பை கைவிடுவாரா? அதேபோன்று ரஞ்சித் சியம்பலாபிட்டிய பிரதி சபாநாயகர் பொறுப்பை கைவிடுவாரா? பைத்தியம் தான்.இவ்வளவு காலமும் தயாசிரி ஜயசேகர கூறியது மத்திய குழு கூட்டத்தில் எடுக்கும் தீர்மானத்திற்கேற்ப அரசாங்கத்திலிருந்து விலக முடியும் என்று. அப்படியாயின் தற்போது ஒரு பிரச்சினை இருக்கின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிறிய கட்சி கூட்டணி கூட்டத்திற்கு சென்றது. மத்திய குழுவின் தீர்மானத்தின் அடிப்படையிலா? இல்லை என்றால் ஒரு ஜொலிக்காக சென்றார்களா?

ரட்டே ராலவிற்கு தெரிந்த அரசியல் அடிப்படையில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஒரு பிளவு இருக்க வேண்டும். அது அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்கின்ற ஒரு குழுவும் வெளியேற முடியாமல் இருக்க வேண்டும் என்ற ஒரு குழுவும். தற்போது இந்த சந்தர்ப்பத்தில் எந்த ஒரு அணியும் வலுவானதாக இருந்தபோதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுதியான தீர்மானத்துக்கு சென்றால் அக்கட்சியின் ஒரு குழு அரசாங்கத்தில் கட்டாயமாக இருக்கும். இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியி மீண்டும் இரண்டாக உடையக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படும்.

அதே போன்று ஏனையகட்சியினுடைய ஆதரவாளர்கள் சிலரையும் அரசாங்கம் கழற்றி எடுக்கும். அதனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இருக்கக்கூடிய ஒரு பிரச்சினை இந்த பிரச்சினையில் ஒழிந்திருப்பதே. அடுத்ததாக ஒழியும்போது கட்சியினுடைய ஆதரவாளர்கள் மத்தியில் ஒரு வெறுப்புணர்வு ஏற்படும்.ரட்டே ரால இறுதியாக குறிப்பிட்ட ஆக்கத்தில் இவர்களிடம் இருக்கின்ற அரசியல் நோக்கங்களில் இறுதியானதாக குறிப்பிட்டதனை நேற்று வாசு நிரூபித்திருக்கிறார்.வாசு குறிப்பிட்டது அவர்கள் முயற்சி செய்வது அரசாங்கத்தில் வெளியேறுகின்றவர்களுக்கு தங்குவதற்கு வேறான தங்குமிடமொன்றை ஏற்படுத்துவதற்கு என்று.இதனால் இவர்களது அரசியல் நோக்கம் தொடர்பில் ரட்டே ரால குறிப்பிட்ட விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டு விட்டது.

தற்போது ரட்டே ரால குறிப்பிடுவது வேறு நோக்கங்களை தலையில் வைத்துக் கொண்டு வந்த சிறிய கட்சி கூட்டணிக்கு ஒன்றுபட்டு செயற்பட முடியாமல் போய்விட்டது. இல்லையென்றால் பாராளுமன்ற உறுப்பினர்கள் 30 பேரை வைத்துக்கொண்டு அவர்கள் அழுதுகொண்டு இருக்கவேண்டுமா? இந்த அரசாங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் 30 பேர் அதில் இருந்து கழன்று வந்தால் அந்தப் பயணம் 115- 120க்கு கீழே இறங்க வேண்டிய நிலை ஏற்படும். உண்மையில் அரசாங்கத்தின் உள்ளே வெறுப்படைந்து இருக்கக்கூடிய மொட்டு கட்சிக்காரர்கள் பலர் இருக்கின்றார்கள். தேவையாக இருந்தால் அரசாங்கத்தோடு அவர்கள் பேரம் பேசவும் முடியும்.

இருப்பினும் சிறிய கட்சி கூட்டணி யாருக்கும் அவ்வாறான விடயங்கள் தலைக்கு வராது. அவர்கள் இந்த இரண்டு வருடங்களுக்கு உள்ளே செய்தது, தங்களை தாக்க வேண்டிய அவசியமான ஆயுதத்தை ராஜபக்சக்கள் உடைய கைகளுக்கு வழங்கியதுதான். சும்மா அல்ல மூன்றில் 2 அதிகாரத்துடன் வழங்கப்பட்டது. அதனால் தங்களுக்கு உள்ள அதிகாரத்தை தெரிந்து கொள்ள முடியாமல் உள்ள அரசியல் கோமாளிகளாக அந்த சிறிய கட்சி கூட்டணிகள் இருக்கின்றது. அந்த உறுப்பினர்கள் 30 பேருக்கும் இருப்பது 30 நோக்கு. அவை அனைத்தும் தனிப்பட்ட நோக்கங்கள் ஆகும். அவையாவும் தனிப்பட்ட நோக்கங்களாகும். அதனால் அதனை முகாமை செய்வது ராஜபக்சக்களுக்கு பெரிய விடயமன்று. எங்களுக்கு முன்னர் சிறிய கட்சி கூட்டணியின் பேரவலத்தை பார்க்ககூடியதாக அமையும்.

அப்படியாயின் போய் வருகின்றேன்.
கடவுள் துணை, வெற்றி கிட்டட்டும்

இப்படிக்கு
ரட்டே ரால