குருந்தூர் மலை தமிழர் பிரதேசம் தொடர்பில் 88 வருடங்களுக்கு முன்னர் வெளியான வர்த்தமானி! சபையில் ரெலோ தலைவர் அடைக்கலநாதன் காட்டம்

1933ஆம் ஆண்டில் குருந்தூர் மலைக்காடு என தமிழில் பெயர் வரும்படி தொல்பொருள் ஆராய்வுக்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

88 வருடங்களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட வர்த்தமானி விடயத்தில் தற்போது எதற்காக கவனம் செலுத்தப்படுகிறது என ரெலோ தலைவரும் தமிழ்த் தேசியகூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது குருந்தூர் மலைப்பகுதி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இதனைக்கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

முல்லைத்தீவு – குருந்தூர் மலைப்பகுதியில் சிவன் ஆலயம் ஒன்று காணப்பட்டது.அங்கு பொங்கல் வைத்து வழிபாடும் முன்னெடுக்கப்பட்டு வந்தது.பிக்கு ஒருவரின் தலையீட்டினால் இவ்விடயம் நீதிமன்றத்திற்கு சென்றது.

இவ்வழக்கின் தீர்ப்பில் இங்கு வழிபாடுகளை நடத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.