தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மறைந்த தலைவர் சிறிசபாரெத்தினம் சிறியண்ணாவின் 39 ஆவது படுகொலை நாளை நினைவு கூர்ந்து , இன்று மாலை(29.04.2025) திருக்கோவிலில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மூத்த போராளியும், ரெலோ கட்சியின் கௌரவ உபதலைவருமான மதிப்புக்குரிய திரு.கு.ஹென்றி மகேந்திரன் ( ஹென்றி அண்ணன்) அவர்களின் பிரசன்னத்துடன, கட்சியின் மாவட்டச் செயலாளரின் தலைமையில் நடைபெற்ற இவ் அஞ்சலி நிகழ்வில், கட்சியின் மூத்த உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மறைந்த தலைவர் சிறியண்ணாவின் உருவப் படத்துக்கு , திரு . ஹென்றி அண்ணன் மற்றும், சிறி /சிறிகந்தராசா( திருக்கோவில்) இருவரும் இணைந்து மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து,மூத்த போராளிகள் மற்றும், கட்சி உறுப்பினர்களால் அஞ்சலிச் சுடர் ஏற்றப்பட்டு , மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மூத்த போராளிகளால் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.