அரசியலமைப்பு பேரவை தொடர்பில் கலந்துரையாடல்

21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு பேரவையை ஸ்தாபிப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் இரண்டு சந்திப்புகள் இடம்பெற்றன.

பிரதமர் தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அரசியலமைப்பு பேரவையின் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் இந்தக் கூட்டங்களில் கலந்துகொண்டனர்.

அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு இணங்க, அரசியலமைப்புச் சபைக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் நியமனங்களை உடனடியாக சபாநாயகரிடம் கையளிப்பதற்கு பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது ஒப்புக்கொண்டனர்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இல்லாத மூன்று உறுப்பினர்களை அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்களாக தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை கோரும் வர்த்தமானி ஒன்றை வெளியிடுவதற்கும் விண்ணப்பங்களை அனுப்புவதற்கு 02 வார கால அவகாசம் வழங்குவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.