அலி சப்ரி ரஹீமிடம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்குமாறு கோர தீர்மானம்

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்குமாறு அலி சப்ரி ரஹீமிடம் உத்தியோகபூர்வ கோரிக்கையை முன்வைக்க கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை கட்சித் தலைவர்களால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினரை அலி சப்ரி ரஹீமை அப்பதவியில் இருந்து நீக்குவதற்கு வேறு வழியில்லாததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுமந்திரன் குறிப்பிட்டார்.

தங்கம் மற்றும் ஏனைய பொருட்களுடன் நாட்டிற்குள் நுழைய முற்பட்டதற்காக விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் அலி சப்ரி ரஹீம் கைது செய்யப்பட்டார்.

74 மில்லியன் மதிப்புள்ள மூன்றரை கிலோ தங்க நகைகள் மற்றும் 4.2 மில்லியன் மதிப்புள்ள 91 ஸ்மார்ட் போன்கள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.