‘இனப்படுகொலையாளியே வெளியேறு’: யாழில் விகாரையில் கலசம் திறக்க வந்த சவேந்திர சில்வாவிற்கு எதிர்ப்பு!

நாவற்குழியில் அமைக்கப்பட்டுள்ள சிங்கள குடியேற்றத்தில் கட்டப்பட்டுள்ள விகாரையின் கலச திரை நீக்கம் இன்று இடம்பெற்றது.

சமீத்தி சுமன என்ற இந்த விகாரையின் கலச திரை நீக்கத்தில் முப்படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் பங்குபற்றினார். அவருக்கு எதிராக போராட்டமும் இடம்பெற்றது.

இதற்காக தென்பகுதியிலிருந்து பேருந்துகளில் பிக்குகளும், பொதுமக்களும் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இதன்போது, மக்கள், முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.