கோத்தாவின் இல்லத்தில் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இல்லை – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தின்  அறையில் 17.85 மில்லியன் பணத்தைக் கைப்பற்றியமை தொடர்பிலான வழக்கில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதில்லை என, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கே நேற்று புதன்கிழமை (18) இவ்வாறு அறிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில்  போதிய  ஆதாரங்கள் இன்மையால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.