தமிழ் அமைச்சர்களுடன் சீனத் தூதரகம் சென்றார் மஹிந்த ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று மாலை கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்திற்குச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் முன்னாள் ஜனாதிபதியுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் இராகவனும் சீனத் தூதரகத்துக்கு சென்றுள்ளார்கள்

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

1989 முதல் 2002 வரை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும், 1989 முதல் 2004 வரை மத்திய இராணுவ ஆணைக்குழுவின் தலைவராகவும் இருந்த H.E. ஜியாங் ஜெமின் (H.E Jiang Zemin) மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்திற்குச் சென்றார்.

அதேவேளை அனுதாப குறிப்பிலும் கையொப்பமிட்டமை குறிப்பிடத்தக்கது.