தேர்தலை நடாத்த முதுகெலும்பில்லாத ஜனாதிபதி ரணில் – சஜித் குற்றச்சாட்டு

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு முதுகெலும்பில்லாத ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பொதுத் தேர்தலைப் பற்றி தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்கின்றது.

அதேவேளை, ஜனாதிபதி தேர்தலில், சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர்கள் யார் என தெரியாமல் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவும் குழப்பமடைந்துள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.