பாதாள உலக தலைவர் கஞ்சிப்பானை இம்ரான் இந்தியாவுக்குத் தப்பி ஓட்டம்

சமீபத்தில் பிணையில் விடுதலையான பாதாள உலக தலைவரான கஞ்சிப்பானை இம்ரான் இந்தியாவின் இராமேஸ்வரத்திற்கு தப்பி சென்றுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கஞ்சிப்பானை இம்ரான் தமிழ்நாட்டிற்கு தப்பிச்சென்றுள்ள தகவல் கிடைத்ததும் மாநிலத்தின் புலனாய்வு பிரிவினர் தமிழ் நாட்டின் கரையோர பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாநில பொலிஸ் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.

டிசம்பர் 25 ம் திகதி படகு மூலம் தமிழ்நாடுசென்றுள்ள இம்ரானையும் அவரது சகாவையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கொலைக் குற்ற அச்சுறுத்தல் போன்றவற்றிற்காக இலங்கை அதிகாரிகளால் தேடப்பட்டுவந்த இம்ரான், 2019 இல் துபாயில் வைத்து கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

சமீபத்தில் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியிருந்தது.

பிணையில் விடுதலையானதும் கஞ்சிப்பானை இம்ரான் இந்தியாவிற்குள் நுழைய திட்டமிட்டுள்ளார் என மத்திய புலனாய்வு வட்டாரங்களும் நம்பகத்தன்மை மிக்க தரப்புகளும் தமிழ்நாடு புலனாய்வு பிரிவினருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தன.

அவர் நீதிமன்றத்திலிருந்து தலைமன்னார் சென்றார் அங்கு அவரது சகாக்கள் அவர் தமிழ்நாட்டிற்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது