புதுடெல்லியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

இந்தியாவின் புதுடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) நேற்று(18.5.2023), மே 18 தமிழர் இனப்படுகொலை நினைவு நாளை முற்போக்கு மாணவர் அமைப்பும் (PSA) ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக தமிழ் மாணவர் அமைப்பும் (JNUTSA) இணைந்து இலங்கையில் இந்நினைவேந்தலை மேற்கொள்ளும் மக்களுக்கான தோழமைக்காக தீபமேற்றியும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியும் நினைவுகூர்ந்தனர்.