மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பை ஒத்திவைக்குமாறு பரிந்துரை

தெளிவான, நியாயமான தீர்வு கிடைக்கும் வரை சம்பள அதிகரிப்பை ஒத்திவைக்குமாறு அரசாங்க நிதி தொடர்பான பாராளுமன்றக் குழு இலங்கை மத்திய வங்கிக்கு பரிந்துரை செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியில் கடமை புரிவோரின் சம்பள அதிகரிப்பு குறித்து அரசாங்க நிதி தொடர்பான பாராளுமன்ற குழுவின் அறிக்கை அதன் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில் இந்த விடயம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.