மயிலத்தமடு ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! பொலிஸார் – பண்ணையாளர்கள் முறுகல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மேய்ச்சல் தரைப் பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்ட காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தவர்களை வெளியேற்றுமாறு கோரி பண்ணையாளர்கள் இன்று மட்டக்களப்பு – கொம்மாதுறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கலடி மத்திய கல்லூரி நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் மயிலத்தமடு – மாதவனைப் பகுதியில் தாங்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நேரில் முறைப்பாடு செய்வதற்காகப் பண்ணையாளர்கள் எடுத்த முயற்சிக்குப் பொலிஸார் தடை ஏற்படுத்தியதால் பண்ணையாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதியில் அதிகளவிலான பொலிஸார் மற்றும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

அத்துடன் வானில் ஹெலிகொப்டரும் வட்டமிட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பண்ணையாளர்களுடன் அரசியல்வாதிகளும், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.