மரண அச்சுறுத்தல் விவகாரம் : ஜனாதிபதியின் தொலைபேசியை பரிசோதிக்க வேண்டும் – அனுர

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைபேசியை பரிசோதிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதியின் தொலைபேசியை பரிசோதிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அச்சுறுத்தல் விடுப்பதற்காக பயன்படுத்தப்பட்ட தொலைபேசி யாருடையது என்பது குறித்தும் ஆராய வேண்டும் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.