மஹிந்த தேசப்பிரிய தேர்தல் ஆணைக்குழு உறுப்புரிமைக்கு விண்ணப்பம்

அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்ள விண்ணப்பங்கள் கோரப்பட்ட நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

இந்நிலையில் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்ள விண்ணப்பம் கோரும் பணி முடிவுற்றுள்ளதாகவும் புதிய உறுப்பினர்கள் விரைவில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.