மாதவனை, மயிலத்தமடு மேய்ச்சல் தரைகளுக்கு பெரும்பான்மை இனத்தவரால் கிருமிநாசினிகள் விசிறி தீ வைப்பு

மட்டக்களப்பு – மாதவனை, மயிலத்தமடு பகுதியில் பெரும்பான்மை இனத்தவரால் கால்நடைகளின் மேச்சல்தரையினை பரக்குவாட் போன்ற களைநாசினிகளை விசிறி, தீ வைத்து வருவதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பண்ணையாளர்கள் மேலும் தெரிவிக்கையில்,

காணி ஆக்கிரமிப்பாளர்கள், தாம் அபகரித்த காணிகளில் பயிர் செய்கையினை மேற்கொண்டு வருவதுடன், அருகிலுள்ள வேறு மேச்சல்தரை காணிகளையும் அபகரிக்கும் நோக்குடன் புற்தரைகளையும், காடுகளையும் தீயிட்டு அழித்து வருகின்றனர்.

இச்சம்பவம் கடந்த 14ம் திகதி புதன்கிழமை தொடக்கம் இடம் பெற்று வருகின்றது. இதனை வனலாகா, வன ஜீவராசிகள் திணைக்களம் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

பரக்குவாட் களைநாசினி விசிறிய புல் தரையில் தமது கால்நடைகள் மேய்வதால் சில மாடுகள் நோய்வாய்பட்டுள்ளதாகவும் பண்ணையாளர்கள் கூறுகின்றனர்.