மடு தேவாலயம் சென்று வழிபட்டார் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

புதிதாக பொறுப்பேற்ற இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்று (15) மன்னாரில் உள்ள மடு தேவாலயத்துக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து, இந்திய உயர்ஸ்தானிகர் மன்னார் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட மீனவ சமாசங்களுக்கு குளிர்சாதனப் பெட்டிகள் வழங்கும் நிகழ்விலும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.