ரெலோவின் வவுனியா அமைப்பாளர் கிறிஸ்ரி குகராஜா 24ம் ஆண்டு நினைவஞ்சலி

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முன்னாள் வவுனியா மாவட்ட அமைப்பாளரும்,மத்தியகுழு உறுப்பினருமான அமரர்.கிறிஸ்ரி குகராஜா மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் நிதிச்செயலாளர் அமரர்.சிவதாசன் அவர்களினதும் 24வது ஆண்டு நினைவு அஞ்சலிகள் வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள அன்னார்களின் நினைவிடத்தில் நடைபெற்றது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்களும் அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றனர்.