ஜனாதிபதி – தமிழ் எம். பிக்கள் பேச்சில் ஆக்கபூர்வமான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை

இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதிக்கும் வடக்கு, கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற அதிகார பகிர்வு சம்மந்தமான பேச்சுவார்த்தை எந்த விதமான தீர்க்கமான நம்பிக்கை தரக்கூடிய விடயங்கள் எதுவும் உறுதிப்படுத்தப்படாத நிலைமையில் முடிவடைந்தது.

தமிழ் தரப்பு தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்ற அரசியல் யாப்பில் இருக்கக்கூடிய அதிகாரங்களை முழுதாக நடைமுறைப்படுத்தி மாகாண சபை தேர்தல்களை நடத்துவதன் மூலம் தான் ஒரு அரசியல் தீர்வுக்கான, பேச்சுவார்த்தைக்கான நம்பிக்கையை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்க முடியும் என்ற அடிப்படையில் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் இருந்து பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டது.

இடையிலே நிறுத்தப்பட்டது திரும்பவும் ஆரம்பிக்கப்பட்ட பொழுது இன்று அந்த பேச்சுவார்த்தை தொடர்ச்சியாக அதிகார பகிர்வு தொடர்பில் தமிழ் தரப்பினாலே வலியுறுத்தப்பட்டிருந்தது. ஜனாதிபதியின் பக்கத்திலிருந்து அதற்கு உறுதியான நிலையான செயல்பாடுகள் தொடர்பில் எந்த உறுதிமொழியும் வழங்கப்படாத நிலைமையில் அது நம்பிக்கை தருவதாக அமைந்திருக்கவில்லை.

இருப்பினும், அதிகார பகிர்வு தொடர்பில் ஒரு குழுவை அமைப்பதாகவும் அந்த குழுவின் இருக்கக்கூடிய பிரதிநிதிகளை தமிழ் தரப்பில் இருந்தும் அவர் கூறியிருந்தார். அந்த குழுவை அமைத்துக் கொண்டு இந்த அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக மேலும் கலந்துரையாடி தீர்க்கமான முற்றுமுழுதான அதிகாரப்பகிர்வை நிறைவேற்ற முடியும் அன்பு ஜனாதிபதியில் கருத்து தெரிவிக்கப்பட்டது. இருப்பனும் தமிழ் தரப்பு அதை ஏற்றுக்கொள்ளவில்லை ஏற்கனவே அரசியல் யாப்பில் இருக்கின்ற விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் பேச்சுவார்த்தை குழுக்கள் அமைப்பது என்பது காலநீடிப்பாக இருக்கும் தவிர ஆரோக்கியமானதா இருக்காது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது எனவே எந்த விதமான ஆக்கபூர்வமான முடிவுகள் இன்றி இந்த கூட்டம் என்று முடிவடைந்துள்ளது