வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச்சந்நிதியானின் சித்திர தேர் எரிக்கப்பட்டு 38 ஆண்டுகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச்சந்நிதியானின் சித்திர தேர் எரிக்கப்பட்டு 38 ஆண்டுகள். கடந்துவிட்டது

இலங்கையின் மிக உயரமானதும் உலகில் நான்காவது உயரமானதும் என வர்ணிக்கப்பட்ட பிரசித்திபெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதியானின் சித்திரத் தேர் 20.04.1986 அன்று சிங்கள இராணுவத்தால் தீயிட்டு அழிக்கப்பட்டு இன்றுடன் 38 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

தீயிட்டு எரிக்கப்பட்ட பின்னர் தேரின் சில்லுகளின் இரும்பு வளையங்களும் தேரின் இரும்பு அச்சும் மட்டுமே எஞ்சியது குறிப்பிடத்தக்கது, அந்த சில்லின் வழையங்கள் சுமார் ஆறு அடி உயரம் சராசரி ஒரு மனிதனுடைய உயரத்தை விட பெரிதாகும்.

இந்த தேர் 1984 ஆம் ஆண்டு முதல் முதல் இழுத்தார்கள். ஆனால் 1986 ஆம் ஆண்டு இழுக்க முதல் தேர் எரியூட்டி சாம்பலாக்கப்பட்டது.

இத் தேர பல நிதி நெருக்கீட்டிற்கு மத்தியில் செய்து முடிக்கப்பட்டது இத் தேருக்கு வடம் வாங்க காசு இல்லாத நிலையில் பூசாரியின் கனவில் வந்து முருகன் சொன்னதாக பக்தர்களோடு அக்கடற்கரைக்கு சென்று பார்தபோது கடலில் வடம் ஒன்று மிதந்து வந்த்து அதை எடுத்துவந்தே தேரில் போட்டு வொள்ளோட்டம் விட்டார்கள் அவ் வடம் தேர்முட்டியில் இருந்தபோது அவ் வடமும் தேருடன் சேர்ந்து எரிந்துவிட்டது

இத் தேரில் 1008 மணிகள் பெருத்தி இருந்தார்கள் இத் தேர் இழுபடும்போது கலீரென மணிஒசை அச்சுவேலி சந்திவரை கேட்கும் என்று பெரியவரகள் சொல்லுவார்கள்