13 வது அரசியலமைப்பு திருத்தத்தில் உடன்பாடு இல்லை

13வது அரசியலமைப்பு திருத்தத்தை மக்கள் விடுதலை முன்னணி ஏற்றுக்கொள்ளவில்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் மாகாண சபைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போது நான் மீண்டும் சொன்னேன், 13க்கும் மாகாண சபைக்கும் உள்ள வித்தியாசம் பொலிஸ் அதிகாரம் காணி அதிகாரம்.

அப்படியானால் பொலிஸ் அதிகாரங்களும் காணி அதிகாரங்களும் இப்போது எங்கே? அரசியலமைப்பில் உள்ளன, ஆனால் நடைமுறைப்படுத்த முடியாது. ஏன் 13 வேலை செய்யவில்லை தெரியுமா? மக்களுக்கு பிடிக்கவில்லை. ஜே.வி.பி. சார்பில் நான் கூறிய 13வது அரசியலமைப்பு திருத்தத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றார்.