பிரிட்டனின் தடைகள் தொடர்பான திணைக்களத்திடம் கையளித்தது சர்வதேச அமைப்பு

இராணுவதளபதி சவேந்திரசில்வா தொடர்பிலான ஐம்பது பக்க ஆவணமொன்றறை தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம் என்ற அமைப்பு பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் தடைகள் திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளது.

இது தொடர்பில் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது.

இராணுவதளபதி சவேந்திரசில்வா தொடர்பிலான ஐம்பது பக்க ஆவணமொன்றறை தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம் என்ற அமைப்பு பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் தடைகள் திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டம் தொடர்பில் எங்களிடம் பெருமளவு ஆதாரங்கள் உள்ளன என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

மிகவும்நுணுக்கமான முறையில் சர்வதேச சட்டத்தரணிகள் மற்றும் வழக்கு தொடுநர்களினால் சேகரி;க்கப்பட்டவையே இந்த ஆதாரங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் தற்போது வசிக்கும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கண்ணால் கண்டவர்களின் வாக்குமூலங்கள் இந்த ஆவணங்களின் முக்கியமானவையாக காணப்படுகின்றன எனவும் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் முடிவில் இடமபெற்றதாக தெரிவிக்கப்படும் மீறல்களில் சவேந்திரசில்வாவிற்கு உள்ளதாக குற்றம்சாட்டப்படும் தொடர்பிற்காக 2020இல் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தடை விதித்தது என ஜஸ்மின்சூக்கா தெரிவித்துள்ளார்.

ஆனால் பிரிட்டனின் தடை தொடர்பான செயற்பாடுகளின் எல்லை பரந்துபட்டது, இராணுவநடவடிக்கைகளின்போது மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்களின் வாழ்விடங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணை தாக்குதல்கள் தொடர்பிலானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் தடை பொறுப்புக்கூறல் தொடர்பில் இன்னொரு முக்கியமான நடவடிக்கையாக காணப்படும் – சமீபத்தில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்ற தீர்மானத்தின் அடிப்படையிலானதாக அமையும், பிரிட்டனே இதில் முக்கிய பங்கு வகித்தது என அவர் மேலும்தெரிவித்துள்ளார்.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் சமர்ப்பித்துள்ள ஆதாரங்களில் பாரிய மனித உரிமைமீறல்கள் இழைக்கப்படுவதில் சவேந்திரசில்வாவின் பங்களிப்பு குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணம் மருத்துவமனைகள் மற்றும் உயர்பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட குண்டுவீச்சு மற்றும் எறிகணை வீச்சிலிருந்து உயிர்தப்பிய தமிழர்களின் கண்ணால் கண்ட சாட்சியங்களை அடிப்படையாக கொண்டவை. இவர்களில் பலர் தற்போது பிரிட்டனில் வசிக்கின்றனர்.

Posted in Uncategorized

500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் சீனாவுடன் இலங்கை கைச்சாத்து

இலங்கை சீன அபிவிருத்தி வங்கி ஊடாக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெறும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சீனாவிற்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் பாலித கொஹன்ன இந்த ஒப்பந்தத்தில் இன்று கைச்சாத்திட்டுள்ளார்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் அந்திய செலாவநியை ஊக்குவிக்கும் வகையில் குறித்த கடன் தொகையை பெற்றுக் கொள்ள இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கடன் தொகை தொடர்பிலான ஒப்பந்தம் குறித்து சீனாவில் உள்ள இலங்கைக்கான தூதரம் ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளது.

இவ்வொப்பந்தம் தொட்பில் சீனாவிற்கான இலங்கை தூதுவர் பாலித கொஹன்ன குறிப்பிடுவதாவது,

இலங்கையின் பொருளாதாரத்தை புத்தாக்கம் செய்யும் நோக்கில் சீனா அரசாங்கம் இக்கடன் தொகையினை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.

இக்கடன்தொகை பெறுவதன் ஊடாக இலங்கையின் முதலீடுகளை மேற்கொள்ளும் சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையினை உறுதிப்படுத்திக் கொள்ள முடிவதுடன், டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். நெருக்கடியான சூழ்நிலையில் நட்பு நாடு என்ற அடிப்படையில் சீனா இலங்கைக்க இக்கடன் தொகையினை வழங்கவுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் 6 இலட்சம் கொவிட்-19 வைரஷ் தடுப்பூசிகள் சீனாவினால் இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

சந்தைப்படுத்தல், முதலீடு, சுற்றுலா மற்றும் விளையாட்டு ,கல்வி ஆகிய துறைகள். ஊடாக இரு நாடுகளுக்கிடையில் இரு தரப்பு உறவினை மேம்படுத்த இலங்கையுடன் தொடர்புக் கொள்ள தூதுவர் சீனாவிற்கு அழைப்பு விடுத்தார்.

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் மட்டுப்படுத்தப்பட்ட பின்னர் சீன நாட்டு சுற்றுலாப்பிரயாணிகள் இலங்கைக்கு வருவதற்கு எதிர்பார்த்துள்ளார்கள்.

சீனாவில் உள்ள இலங்கைக்கான தூதரக காரியாலயத்தில் இலங்கை உற்பத்திகளை சீன நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தல், சீன நாட்டு முதலீடுகளை இலங்கையில் துரிதப்படுத்தல், ஆகிய நடவடிக்கைகளுக்கான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறுகிய காலத்தில் இலங்கையின் பொருளாதாரம் மேம்படுத்தப்படும்.

இந்த 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் சீனாவினால் கடந்த வருடம் வழங்கப்பட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டொலரின் இரண்டாம் பகுதியாகும். இந்நிதியை பெற்றுக் கொள்வதற்கு சீனாவில் உள்ள இலங்கை தூதரகம் உரிய சீன நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது என்றார்.

தனித்து போட்டியிட சுதந்திர கட்சி தீர்மானம்

எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் தனி கட்சியாக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷமன் பியதாச தெரிவித்தார்.

ஸ்ரீ.ல.சு.க.வை வலுப்படுத்த கிராம மட்டத்தில் ஏற்கனவே பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

“ஒரு கட்சியாக எங்களுக்கு முக்கிய தேவை அதிகாரத்தைக் கைப்பற்றுவதாகும். மாகாண சபைத் தேர்தல் வரும்போது, ​​நாங்கள் ஒரு கட்சியாக போட்டியிட தயாராக இருக்கிறோம்.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு அமைச்சர் டக்ளசின் சிபாரிசில் மன்னிப்பு வழங்க முடியாதா? – ரெலோ செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் கேள்வி

யாழ். மாநகர முதல்வரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசின் பேரில் விடுவிக்க முடியுமாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளை ஏன் அவ்வாறு விடுவிக்க முடியாது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், யாழ். முதல்வர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசில் முதல் தடவை மன்னிப்பாக ஜனாதிபதியால் விடுவிக்கப்படுகிறார் என செய்திகள் வெளியாகியிருந்தன.

அவ்வாறு, மீன்பிடித்துறை அமைச்சரின் சிபாரிசில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்த யாழ். மாநகர முதல்வரை விடுதலை செய்ய முடியுமாக இருந்தால், பல ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை அவ்வாறான சிபாரிசில் மன்னித்து ஏன் விடுதலை செய்ய முடியாது” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

Posted in Uncategorized

மைத்திரி – மகிந்த சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று கொழும்பிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தி​ல் இடம்பெற்றுள்ளது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களும் இச்சந்திப்பில் கலந்துகொண்டதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பில் தற்​போதைய அரசியல் நிலைமைகள் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

அரசாங்கத்தின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளன – அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு

இலங்கை அரசாங்கங்களினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் முழுமையான நிறைவேற்றப்பட வேண்டியுள்ளன என்று இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவர் அலைய்னா பி.டெப்லிட்ஸ் வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அல்லது மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான நீதிப் பொறிமுறையொன்றை ஸ்தாபித்தல் போன்ற வாக்குறுதிகளும் இன்னமும் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம், இலங்கையின் மனித உரிமைகள் பற்றிய ஏனைய கவலைகள் எழுந்துள்ளன. ஆட்சிமுறையின் ஜனநாயக பண்புகளை நிலைநாட்டி, சட்டத்தின் ஆட்சியை மதிப்பதோடு சிறுபான்மையின சமூகங்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தெற்காசியாவின் மிகப் பழைய ஜனநாயக தேசத்தின் ஜனநாயக நண்பன் என்ற வகையில் அமெரிக்கா இலங்கையிடத்தில் இந்த விடயங்களை எதிர்பார்க்கிறது என்றார்.

அமெரிக்காவில் மாற்றத்தை ஏற்படுத்த 6 மில்லியன் டொலர்களை செலவிட்ட சிறீலங்கா

சிறீலங்காவுக்கு ஆதரவான நிலை ஒன்றை அமெரிக்காவில் ஏற்படுத்தும் நோக்கத்துடன் அமெரிக்காவின் தொழிலதிபர் ஒருவருக்கு 6.5 மில்லியன் டொலர்களை சிறீலங்கா அரசு வழங்கியது தற்போது தெரியவந்துள்ளது.

2014 ஆம் ஆண்டு சிறீலங்காவின் மத்திய வங்கி ஊடாக இந்த பணப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் சிறீலங்காவினால் இந்த பணிக்கு அமர்த்தப்பட்ட இமாட் சூபேரி என்ற தொழிலதிபர் ஒரு புலனாய்வு அதிகாரியாவார்.

தற்போது அமெரிக்காவின் நீதி மன்ற விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இந்த அதிகாரி புதிய நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து அதன் ஊடாகவே சிறீலங்காவில் இருந்து பணத்தை பெற்றதாகவும், அதில் பெரும்பகுதியை அவரும் அவரின் மனைவியும் செலவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

இலங்கையுடன் ‘ஏயர் பபுள்’ விமான சேவையை ஏற்படுத்தியுள்ள இந்தியா

இரு நாடுகளுக்கிடையில் சிறப்பு சர்வதேச பயணிகள் விமானங்களை இயக்க இலங்கையுடன் இருதரப்பு ‘ஏயர் பபுள்’ விமான சேவையை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கிடையேயான இந்த ஒப்பந்தத்தின் கீழ், சிறப்பு சர்வதேச பயணிகள் விமானங்களை தங்களது விமான நிறுவனங்கள் ஒருவருக்கொருவர் எல்லைகளுக்குள் கட்டுப்படுத்தக்கூடிய நிலைமைகளின் கீழ் இயக்க முடியும்.

இலங்கை மாத்திரமன்றி ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, ஈராக், ஜப்பான், மாலைத்தீவு, நைஜீரியா, கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 28 நாடுகளுடன் இந்தியா தற்சயம் அத்தகைய ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தனது டுவிட்டர் பதிவில்,

இந்தியா இலங்கையுடன் ஒரு ‘ஏயர் பபுள்’ விமான சேவை ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது, இது சார்க் பிராந்தியத்தில் இதுபோன்ற 6 ஆவது ஏற்பாடாகவும், மொத்தம் 28 ஆவது இடமாகவும் அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக 2020 மார்ச் 23 முதல் இந்தியாவில் திட்டமிடப்பட்ட சர்வதேச விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

எனினும் சிறப்பு சர்வதேச பயணிகள் விமானங்கள் கடந்த ஆண்டு மே முதல் வந்தே பாரத் மிஷனின் கீழ் மற்றும் ஜூலை முதல் இருதரப்பு ஏயர் பபுள் ஏற்பாடுகளின் கீழ் இயங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

நான்கு நாடுகளில் இருந்து இஸ்லாமிய மத போதகர்கள் இலங்கைக்குள் நுளைவதற்குத் தடை

பாகிஸ்தான், கட்டார், குவைத் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து இஸ்லாமிய மத போதகர்கள் இலங்கை வருவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த நாடுகளில் இருந்து இலங்கைக்கு மத போதகர்களை வரவழைத்த 32 இஸ்லாமிய அமைப்புகள் தொடர்பாக அரச புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 1800 இஸ்லாமிய மத போதகர்கள் இலங்கைக்கு வந்துள்ளதாக அரசாங்கம் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர்கள் பேருவளை, அக்கரைபற்று, காத்தான்குடி, மாதம்பை, மூதூர் ஆகிய பிரதேசங்களுக்கு சென்று மத போதனைகளை நடத்தியுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளதாக தெரியவிக்கப்படுகிறது.

உள்நாட்டு சர்வதேச ஒத்துழைப்பு இல்லாது உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்த முடியாது : ரெலோ செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உள்நாட்டு சர்வதேச ஒத்துழைப்பு இல்லாமல் நடத்த முடியாது. அத்துடன் தாக்குதலுக்கு முன்னர் நாட்டில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தாமல் அதனை புலிகளின் மீது சுமத்தி பாதுகாப்பு துறை வேடிக்கை பார்த்துள்ளார்கள் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான ஆறாவதுநாள் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஏப்ரல் தாக்குதல் சாதாரணமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாக இருக்க முடியாது. அதற்கு உள்நாட்டு சர்வதேச ஒத்துழைப்புகள் இருந்திருக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் இதனை நடத்தமுடியாது.

அதேபோன்று ஏப்ரல் தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் பல தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. அந்த சம்பவங்கள் அனைத்தையும் விடுதலை புலிகளின் மீது சுமத்தி பாதுகாப்பு படையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

வடக்கில் இடம்பெற்ற மோட்டார் கைக்கிளில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பானது ஏப்ரல் தாக்குதலுக்கான பரீட்சாத்த நடவடிக்கையாகவும் இருந்திருக்கலாம். இந்த சம்வவங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு என்ன நடந்தன.

மேலும் ஏப்ரல் தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான் உட்பட குண்டுதாரிகளில் அதிகமானவர்கள் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக சம்பளம் பெற்றுக்கொண்டவர்கள் என்பது தற்போது வெளிப்படையாகி இருக்கின்றது. அதனால் அப்போதைய அரசாங்கத்தை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இந்த தாக்குதலை பயன்படுத்தி இருக்கலாம்.

அத்துடன் ஏப்ரல் தாக்குதலின்போது 8 குண்டுகளே வெடிக்கப்பட்டன. அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்க கர்த்தினால் மெல்கம் ரஞசித் குரல் கொடுத்து வருகின்றார். அதனை நாங்கள் வரவேற்கின்றோம். அதேபோன்று வடக்கு கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தில் ஆயிரக்கணக்கான குண்டுகள் வெடிக்கப்பட்டன. தேவாலயங்கள் தாக்கப்பட்டன. அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவும் கர்த்தினால் மெல்கம் ரஞ்ஜிசி குரல் கொடுக்கவேண்டும்.

மேலும் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு 2009 இல் முடிவடையும்வரை இந்த நாட்டில் முஸ்லிம் மக்கள் ஆட்சியில் இருந்து அரசாங்கங்களால் பாராட்டப்பட்டு வந்தனர். ஆனால் 2009 க்கு பின்னர் ஆட்சியில் இருந்து அரசாங்கங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட ஆரம்பித்தன. அந்த நடவடிக்கை இன்றுவரைக்கும் இடம்பெறுகின்றது.

முஸ்லிம்களின் மத கலாசாரத்தின் மீது கைவைத்தார்கள். அவர்களின் பொருளாதாரத்தின் மீது கைவைத்தார்கள். பல நெருக்கடிகளை கொடுத்து வந்தார்கள். கொராேனாவில் மரணிப்பவர்களை அடக்கம் செய்யும் உரிமையையும் பறித்தார்கள்.

எனவே நாட்டில் இடம்பெற்ற 83 கலவரம் ஒரு சிறிய இனவாத குழுவாலே ஆரம்பிக்கப்பட்டதாகும் அதனை தடுக்க தவறியதாலே அது யுத்தம் வரைக்கு சென்றது. அதனால் அவ்வாறான இனவாத குழுக்களின் நடவடிக்கைகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதா அல்லது நாட்டில் மீண்டும் இனவாத பிரச்சினை ஒன்றை ஏற்படுத்துவதா என்பதை அரசாங்கம் தீர்மானிக்கவேண்டும் என்றார்.