யாழ் மாநகர முதல்வர் கைது தொடர்பில் உள்ளுராட்சி மன்ற அமைப்புக்களுக்கு முறையிட்ட ரெலோ தவிசாளர் நிரோஷ்

மேயர் மணிவண்ணன் கைது தொடர்பில் உள்ளுராட்சி அமைச்சருடன் உள்ளுராட்சி அதகார சபைகளின் கம்மேளனத்தின் தலைவரும் குருநாகல் மாநகர சபை முதல்வருமான துஸார சஞ்சிவ தெரிவித்ததாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

மேலும், யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் வி. மணிவண்ணன் கைது செய்யப்பட்ட விடயம் தொடர்பில் சக தவிசாளார் என்ற வகையில் இன்று காலை முதற்கட்டமாக இலங்கை உள்ளூராட்சி அதிகார சபைகளின் சம்மேளனம் (குநனநசயவழைn ழக ளுசi டுயமெயn டுழஉயட புழஎநசnஅநவெ யுரவாழசவைநைள) மற்றும் மாநகர முதல்வர் ஒன்றியம் ஆகியவற்றின் கவனத்திற்கு இவ்விடயத்தை தொலைபேசியில் கொண்டுவந்தேன்.

உள்ளுராட்சி மன்றங்களின் சம்மளனத்தின் தலைவராக பதவி வகிக்கும் குருநாகல் மாநகர முதல்வர் துஸார சஞ்சீவ, இவ்விடயம் தற்போது பொலிஸ் விசாரணையில் இருப்பதனாலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்குள் இருப்பதனாலும் தாம் உரிய சட்ட ஏற்பாடுகளுடன் தலையிடுவதாகவும் தெரிவித்தார். இதேவேளை இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம் என்ற வகையில் தாம் முதல்வருடைய கைது தொடர்பில் உள்ளுராட்சி அமைச்சருடன் தாமதமின்றி இவ்விடயம் குறித்து பேசவுள்ளதாகவும் தொவித்தார்.

மேலும், இலங்கையில் மேயர்களை உள்ளடக்கி முதல்வர்கள் ஒன்றியமும் உள்ள நிலையில் அதன் தலைவராகவுள்ள மொரட்டுவை மாநகர முதல்வர் டபிள்யூ. சந்திமல் பெர்ணான்டோவுக்கும் யாழ்.மாநகர முதல்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரின் விடுதலை தொடர்பில் தங்கள் சங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கேட்டுக்கோண்டேன்.

அதற்கு முதல்வர் ஒன்றியத்தின் தலைவர், தான் ஊடகம் வாயிலாக இவ்விடயம் பற்றித் தெரிந்து கொண்டதாகவும் இவ்விடயம் பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பான கைது. நகர ஒழுங்கு படுத்தல்களைச் செய்வதற்கு பொலிசாரையே முதல்வர் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்றார்.

நான் இது தங்கள் அபிப்பிராயம் சார்ந்த விடயமாக இருக்கின்ற நிலையில் தாங்கள் நாட்டில் உள்ள முதல்வர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அமைப்பு என்ற வகையில் தலையிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன்.

இதேவேளை சக உள்ளூராட்சி மன்றம் ஒன்றின் தலைவரின் கைது என்ற வகையில் ஏனைய அமைப்புக்களின் கவனத்திற்கும் இவ்விடயம் எழுத்துமூலம் கொண்டுவரப்படவுள்ளது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

Posted in Uncategorized

விடுதலைப் புலிகள் சீருடை சர்ச்சை: யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது

இலங்கையில், யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்வதற்கு சொல்லப்பட்ட காரணம் தற்போது விவாதப் பொருளாகிவருகிறது.

பயங்கரவாதத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று (09 ஏப்ரல் 2021) அதிகாலை 1.40 மணி அளவில் அவரைக் கைது செய்ததாக, யாழ்ப்பாணம் போலீஸார், பிபிசி தமிழுக்கு உறுதிப்படுத்தினர்.

யாழ்ப்பாணம் போலீஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட யாழ். மாநகர முதல்வர், வவுனியா பயங்கரவாதத் தடுப்பு பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் போலீசார் குறிப்பிட்டனர்.

ஏன் கைது செய்யப்பட்டார்?

யாழ்ப்பாணம் மாநகரத்தின் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவதற்கும், வெற்றிலை எச்சில் துப்புவதற்கும் தடை விதிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் என்ற முறையில் மணிவண்ணன் நேற்று முன்தினம் (7 ஏப்ரல்) தெரிவித்திருந்தார்.

இதன்படி, யாழ். மாநகர எல்லைக்குள் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு 5000 ரூபாவும், வெற்றிலை எச்சில் துப்புவோருக்கு 2000 ரூபாவும் தண்டப்பணம் விதிக்க நடவடிக்கை எடுத்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக யாழ். மாநகர காவல்படை என்ற பெயரில் குழுவொன்றையும் அவர் அமைத்திருந்தார்.

இந்த குழு, ஐந்து பேரை கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு அமைக்கப்பட்ட குழுவிற்கு சீருடையொன்றும் வழங்கப்பட்டது. அந்த சீருடை அணிந்த குழுவினர் புகைப்படங்கள் கடந்த இரு தினங்களாக சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டன.

இந்த குழுவிற்கு வழங்கப்பட்ட சீருடை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் காவல்துறை சீருடை போலவே இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், குறித்த சீருடை தொடர்பில் மணிவண்ணன், ஊடகங்களுக்கு தமது தெளிவூட்டல்களை வழங்கியிருந்தார்.

யாழ். மாநகரை சுத்தமாக வைத்திருக்கும் நோக்குடன், மாநகர சபையினால் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டு, அந்த தீர்மானம் வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விசேட குழுவொன்றையும் தாம் அமைத்திருந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.

குறித்த அதிகாரிகளை மக்கள் இலகுவாக அடையாளம் கண்டுக்கொள்ளும் வகையிலேயே தாம் இந்த சீருடையை அறிமுகப்படுத்த தீர்மானித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு மாநகர சபை ஊழியர்களின் சீருடையை அவதானித்து, அதே போன்றே, தமது ஊழியர்களுக்கும் இந்த சீருடையை அறிமுகப்படுத்தியதாக அவர் குறிப்பிடுகிறார்.

இதைதவிர, குறித்த சீருடையை அறிமுகப்படுத்துவதற்கு வேறு எந்தவொரு உள்நோக்கமோ அல்லது வேறு எந்தவொரு திட்டமோ கிடையாது என மணிவண்ணன் தெரிவிக்கிறார்.

இந்த சீருடை, விடுதலைப் புலிகளின் காவல்துறை சீருடையுடன் பொருந்தியிருக்கக்கூடும் என கூறிய அவர், தான் கொழும்பு மாநகர சபை ஊழியர்களின் சீருடைக்கு ஒத்ததாகவே இந்த சீருடையை வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடுப்பு பிரிவு கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் காவல் துறை சீருடைக்கு ஒத்ததான சீருடையை வழங்கியமை குறித்து விசாரணைகளை நடத்துவதற்காக மணிவண்ணன், யாழ்ப்பாணம் போலீஸ் நிலையத்துக்கு நேற்றிரவு 8 மணிக்கு அழைக்கப்பட்டார்.

இவ்வாறு அழைக்கப்பட்ட மணிவண்ணனிடம், பயங்கரவாதத் தடுப்பு பிரிவு சுமார் 6 மணிநேர விசாரணை நடத்தியுள்ளது.

விசாரணைகளின் பின்னர், மணிவண்ணன், பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணத்திலிருந்து, வவுனியா பயங்கரவாதத் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான, விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ், மணிவண்ணன் கைது செய்யப்பட்டுள்ளதாக, கைது செய்யப்பட்டமை குறித்து வழங்கப்படும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மைத்திரி, விமல், கம்மன்பில உள்ளிட்ட முக்கிய அரசியல்வாதிகள் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் மந்திர ஆலோசனை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய அரசியல்வாதிகள் இணைந்து இன்றையதினம் முக்கிய கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்நத் முக்கிய அரசியல்வாதிகள் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

அத்துடன் அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் அமைச்சர் விமல் வீரவன்ச, அமைச்சர் உதயகம்மன்பில மற்றும் டியூ குணசேகர ஆகியோர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

தற்போதைய அரசியல் நிலைவரம் மற்றும் மே தினம் தொடர்பில் இதன்போது பேசப்பட்டதாக கலந்துகொண்ட அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த கலந்துரையாடலில் 11 கட்சிகளைச் சேர்ந்த 11 தலைவர்களும் கலந்துகொண்டதாக அமைச்சர் உதய கம்மன் பில குறிப்பிட்டார். அத்துடன் தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பிலும் பேசினோம் என்றார்.

மாகாண சபை சட்ட வரைபு தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து கலந்துரையாடியதாக நிமால் சிறிபால டிசில்வா தெரிவித்தார். வேறு எந்தவித பயணத்தையும் நாம் மேற்கொள்ளவில்லை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற அடிப்படையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவித்தார்.

Posted in Uncategorized

மாநகர காவல் படை உருவாக்கம்: யாழ். மாநகர சபை அமர்வைப் புறக்கணித்தது ஈ.பி.டி.பி.

யாழ். மாநகர சபையின் இன்றைய அமர்வை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி புறக்கணித்துள்ளது என மாநகர சபை உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபை முதல்வரினால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாநகர காவல் படை தொடர்பாக தம்முடன் கலந்துரையாடப்படாமையே இந்தப் புறக்கணிப்பிற்குக் காரணமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அரசியலில் ஆர்வம் செலுத்துகின்ற இளைய தலைமுறையினருக்குச் சந்தர்ப்பத்தினை வழங்க வேண்டும் என்றே சட்டத்தரணி மணிவண்ணனுக்கு ஆதரவு வழங்குவதற்கு தமது கட்சித் தலைமை தீர்மானித்திருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், தமது கட்சியின் ஆதரவுடன் ஆதிகாரத்தைப் பெற்றுக்கொண்டவர்கள், முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளும்போது அவை தொடர்பாகத் தம்முடனும் கலந்துரையாட வேண்டியது தார்மீகக் கடமையென அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மாநகர காவல்படை உருவாக்கம் குறித்து தம்மோடு கலந்துரையாடப்படவில்லை என்பதில் கரிசனையை வெளிப்படுத்தும் விதமாகவே இன்றைய அமர்வுகளைப் புறக்கணித்துள்ளதாக யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

யாழ்.மாநகர காவல் படை சீருடையை ஒப்படைக்க காலக்கெடு – அதிகாரிகளிடம் பொலிஸார் தீவிர விசாரணை

யாழ். மாநகர காவல் படையின் சீருடைகளை காவல் நிலையத்தில் ஒப்படைக்க மாநகர சபைக்கு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த சீருடை விவகாரம் தொடர்பில் மாநகர சபை அதிகாரிகளிடம் தீவிர விசாரணை இடம்பெற்று வருகின்றது.

யாழ்.மாநகரசபையினால் சுகாதார நடைமுறைகளை கண்காணித்தல், கழிவகற்றல் பொறிமுறையை கண்காணித்தல், மற்றும் மாநகரின் ஒழுங்கு உள்ளிட்டவற்றை கண்காணிப்பதற்காக மாநகர காவல் படை உருவாக்கப்பட்டு இன்று பரீட்சார்த் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில் குறித்த சீருடை விடுதலைப் புலிகளின் ஆளுகைப் பகுதிகளுக்குள் காவல்துறையினர் பயன்படுத்திய சீருடையைப் போன்ற வர்ணத்தினால் வடிவமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த பொலிஸார் சீருடைகளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு மாநகரசபைக்கு அறிவித்தல் விடுத்துள்ளனர்.

யாழ்.மாநகரசபை ஆணையாளர், பிரதம வருமான வரிப் பரிசோதகர் மற்றும் குறித்த காவல் படையில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்டிருந்த மாநகரசபை ஊழியர்கள் ஐவர் உட்பட்ட ஏழு பேரையும் காவல் நிலையம் அழைத்து 3 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் விசாரணை நடைபெற்றுள்ளது.

Posted in Uncategorized

சிங்கள பெரும்பான்மை பலத்துடன் ஆழலாம் என்ற நிலைப்பாட்டில் அரசு செயற்படுகின்றது ரெலோ வினோ எம்.பி

இன்று தமிழ்மக்கள் தங்களிடம் கையேந்த வேண்டும் தங்களிடம் கெஞ்சவேண்டும் தங்கள் காலடிக்குள் வந்து விளவேண்டும் என்ற நிலையில் அரசு இருக்கின்றது என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பில் தனியார் கல்வி நிலையம் 06.04.21 அன்று திறந்து உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில். இன்று புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு பகுதிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருக்கின்றது நாங்கள் ஆசிரியர்களை யாழ் மாவட்டத்தில் இருந்து இறக்குமதி செய்கின்றோம் அரச உத்தியோகத்தர்களை அதிகாரிகளை இன்று யாழ்மாவட்டத்தில் இருந்து எதிர்பாக்கின்ற நிலை இருக்கின்றது இதில் மாற்றம் வேண்டும். கல்வி செயற்பாடுகள் இங்கு வளர்த்துகொள்ளவேண்டும் நல்ல கல்வி சமூகம் இந்த கிராமங்களில் இருந்து உருவாக வேண்டும்.

அரசாங்கம் எங்களை போரின் போது இறுதிக்காலத்தில் இடம்பெயரவைத்து மக்கள் அனைவரும் சோற்றுப்பாசலுக்காக தங்களிடம் கையேந்த வேண்டும் என்று நினைத்திருந்தது அதனை செய்து முடித்தது.தமிழர்கள் அனைவரும் தங்களிடம் கையேந்த வேண்டும் என்ற நிலையினை உருவாக்கிய அரசாங்கம் தொடர்ந்தும் இப்பொழுதும் கூட அவர்கள் இனரீதியான செயற்பாடுகளுடன் இந்த நாட்டினை ஆண்டுகொண்டிருக்கின்றார்கள்.

இன்றும் தமிழ்மக்கள் தங்களிடம் கையேந்த வேண்டும் தங்களிடம் கெஞ்சவேண்டும் தங்கள் காலடிக்குள் வந்து விளவேண்டும் என்ற நிலையில் இருக்கின்றார்கள்.

எங்கள் கிராமங்கள் அரசால் புறக்கணிக்கப்படுகின்றது, நிலங்கள் அபகரிக்கப்படுகின்றது, தொல்பொருள்திணைக்களம்,வனஜீவராசிகள் திணைக்களம் வன இலாகா திணைக்களம் என ஒவ்வொரு அமைப்பும் அரசாங்கத்தின் முகவர்களாக செய்பட்டு வடகிழக்கு மண்ணை அபகரிக்க திட்டமிட்டு பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

அண்மையில் நாட்டின் ஜனாதிபதி அவர்கள் வடக்கிற்கான மக்கள் சந்திப்புக்கான முதலாவது விஜயம் என்று வருகை தந்தார் அவர் வவுனியா வடக்கில் சிங்கள பிரதேசத்திற்குத்தான் பயணம் செய்தார் பெயரவில் வடக்கிற்கு என்று சொல்லிக்கொண்டு அவர் சந்தித்த மக்கள் சிங்கள மக்கள் சிங்கள பிரசேத்ததிற்கே வருகை தந்தார்

இன்றும் வடக்கை அபிவிருத்தி செய்வதற்கான எந்த செயற்பாட்டினையும் செய்ததை காணக்கூடியதாக இல்லை. சிங்கள மக்களுக்குத்தான் இந்த நாட்டின் ஜனாதிபதி என்று கூறிக்கொண்டு இந்த நாட்டினை தொடர்ந்தும் சிங்கள பெரும்பான்மை பலத்துடன் ஆழலாம் என்ற நிலைப்பாட்டில்தான் இந்த அரசு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று வீதத்திற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 203.5 ரூபாவாக பதிவாகியுள்ளது. டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 199.21 ரூபாவாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

Posted in Uncategorized

“பொன்சேகா ஒரு கழுதை” முடிந்தால் வெளியே வரவும் என சவால் விடுத்தார் அமைச்சர் சமல் ராஜபக்சா

ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் எம்.பி பதவி பலவந்தமாக பறிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி எதிரணியினர் சபைக்குள் எதிர்ப்பு

இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளால் சபை நடவடிக்கைகள் சில நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையின் போது, ஆளும்கட்சியின் உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன.

பதற்றமான நிலைமையில், அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கும் எதிர்க்கட்சியின் எம்.பியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்ற

“2010 மற்றும் 2015 க்கு இடையில் நான் அன்றைய அரசாங்கத்தால் அநியாயமாக நடத்தப்பட்டேன்” எனத் தெரிவித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தனக்கு விதிக்கப்பட்ட தேவையற்ற தண்டனையைத் தொடர்ந்து தன்னை பாராளுமன்றத்திற்கு செல்வதற்கு அனுமதிக்குமாறு மேன்முறையீடு செய்திருந்தேன் என்றார்.

இதன்போது கடுமையாக கோபமடைந்த அமைச்சர் சமல் ராஜபக்ஷ, “பொன்சேகா ஒரு கழுதை” முடிந்தால் வெளியே வரவும் என சவால் விடுத்தார்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது, பதாதைகளை எதிரணியினர் ஏந்தியிருந்தனர். அத்துடன்,​ கைகளிலும் கறுப்பு பட்டிகளை அணிந்திருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி போராட்டத்தில் ஈடுபட்ட 87 பேர் இதுவரை உயிரிழப்பு

வடக்கு- கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி, அவர்களது உறவுகள் தொடர் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட 87பேர், தங்களது உறவுகளை தேடி அவர்களை கண்டுப்பிடிக்காமலேயே உயிரிழந்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகள் இருக்கின்றார்களா? அவர்களுக்கு என்ன நடந்தது? என கோரி மிகவும் நீண்ட காலமாக அவர்களது உறவுகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்கள் மற்றும் தந்தைமார்கள் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகி, நோயினால் பீடிக்கப்பட்டு, வைத்தியசாலையில் ஏனைய உறவுகளின் பாதுகாப்பில் உள்ளனர்.

இவ்வாறு நோயினால் பீடிக்கப்பட்டிருந்த 87 பேர், சிகிச்சைப் பலனின்றி இதுவரை உயிரிழந்துள்ளனர். வவுனியாவில் மாத்திரம் 17பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு போராட்டத்தில் ஈடபட்ட உறவுகள் பலர் உயிரிழந்தப்போதும் இதுவரை அவர்களுக்கான நீதியை எவரும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் 70 வர்த்தக நிலையங்கள் தவிர்ந்த ஏனையவைகளை மீள திறக்க அனுமதி

யாழ்.மாநகர மத்தியில் சுமார் 70 வர்த்தக நிலையங்கள் தவிர்ந்த ஏனையவைகளை மீள திறப்பதற்கு இன்று(08) அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தக நிலையங்களை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மீளத் திறப்பதற்கே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர மத்தியில் இருந்த வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்தே சுமார் 70 வர்த்தக நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக சுகாதார மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை யாழ்.மாநகர மத்திய பேருந்து நிலையத்தில் இன்று(08) முதல் பேருந்து சேவைகளை நடத்த வட.பிராந்திய போக்குவரத்து சபைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பேருந்து சேவைகளின்போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் எனவும் மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.