மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு நீடிப்பு

தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய எதிர்வரும் 31 ஆம் திகதி வரை, தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

நாடாளுமன்ற அமர்வில் ஜனாதிபதி – ஆளும் கட்சியினருக்கு அழைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை வியாழக்கிழமை இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்க வேண்டும் என அறிவறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சிக்குள் காணப்படும் கருத்து முரண்பாடுகள் தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்களை ஜனாதிபதி சந்தித்துக் கலந்துரையாடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது

Posted in Uncategorized

சம்பளத்தை குறைக்கும் அதிகாரம் மாகாண ஆளுநருக்கு இல்லை – ஆசிரியர் சேவை சங்க பொதுச் செயலாளர்

பணிக்கு வராத ஆசிரியர்களின் நவம்பர் சம்பளம் நிறுத்தப்படும் என்ற தனது அறிக்கையை வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் சம்பளத்தை குறைக்கும் அதிகாரம் மாகாண ஆளுநருக்கு இல்லை என்றும்  இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் சம்பளத்தை பாதிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதை நாட்டின் குறிப்பாக வடமேல் மாகாண ஆசிரியர்களுக்கு வலியுறுத்துகிறோம்.

நாங்கள் கண்டிப்பாக இந்த வேலைநிறுத்தத்தை 21-22 தொடங்குவோம். முடிந்தால், உங்கள் நவம்பர் சம்பளத்தை இழந்து உங்கள் சக்தியைக் காட்டுங்கள், பின்னர் ஆசிரியர்களின் அதிபர்களின் அதிகாரத்தையும் காண்பிப்போம் என்றும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்களுக்கு எதிரான போராட்டம் ஏற்புடையதல்ல – சுரேஷ் பிரேமச்சந்திரன்

இந்திய மீனவர்களுக்கு எதிரான போராட்டம் நடத்துவது என்பதும் அதற்கு எதிராக போர்க்கொடி உயர்த்துவது என்பதும் ஏற்புடையது அல்ல என, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

பேசி தீர்க்கப்பட வேண்டிய ஒரு விடயத்துக்கு தமிழக மீனவர்களுக்கு எதிரான போராட்டம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும், அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தில், நேற்று (19) மாலை, நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், எல்லா மீனவர்களும் எங்கே மீன்வளம் இருக்கின்றதோ அந்த மீன் வளத்தை தேடிப் போவது என்பது இயற்கையான ஒன்று என்றார்.

இப்பொழுது இந்திய அரசாங்கத்துக்கு எதிராக, மீனவர்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவது என்பது, சரியான வழிமுறை அல்ல எனத் தெரிவித்த அவர், தாங்கள் பாரிய ஒரு போராட்டத்தை நடத்த உதவி ஒத்தாசையாக இருந்தது தமிழகம் எனவும் கூறினார்.

‘தமிழகத்தில், இலட்சக்கணக்கான எங்களுடைய மக்கள் எதிலிகளாக போயுள்ளனர். அவர்களை பராமரிப்பது தொடக்கம் அனைத்து தேவைகளையும் தமிழக அரசே மேற்கொண்டு வருகின்றது. ஆனால் இங்கே சில அசம்பாவிதங்கள் நடப்பது என்பது உண்மை. ஆனால் அதை பேசி தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள். இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் ஒரு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு கண்டு, சுமூகமான முறையில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும், அவர் தெரிவித்தார்.

இந்திய மீனவர்களை எமது தொழிலாளர்கள் தாக்குவது, எமது மீனவர்களை இந்திய தொழிலாளர்கள் தாக்குவது ஏற்புடைய ஒரு விடயமல்ல எனத் தெரிவித்த அவர், தற்போதுள்ள மீன்பிடித்துறை அமைச்சரும் அவர் சார் அதிகாரிகளும் ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள் என்று ஒரு சந்தேகம் தங்களுக்கு தோன்றுவதாகவும் கூறினார்.

‘தென்பகுதி மீனவர்கள் தங்கி நின்று மீன்பிடி நடவடிக்கையில் மேற்கொள்கின்றார்கள். அதற்கு எதிரான எந்தத் தரப்பிலிருந்தும் எந்த அரசியல்வாதியும் போராட்டங்களை மேற்கொண்டதில்லை. அதேபோல், தென் பகுதியில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்தில், சிங்கள மீனவர்கள் குடியேற்றம் செய்யப்படுகின்றனர். அதற்கு எதிராக எங்களுடைய அரசியல் வாதிகள் யாராவது போராட்டம் மேற்கொண்டார்களா? அவ்வாறான விடயங்கள் எதுவும் நடக்கவில்லை’ என்றும், சுரேஷ் கூறினார்.

Posted in Uncategorized

நாட்டில் பசுவதையை தடை செய்ய நடவடிக்கை

இலங்கையில் பசுவதையை தடை செய்வது தொடர்பிலான ஐந்து சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வௌியிடவும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய,

⭕ 272 ஆம் அத்தியாயத்தின் 1983 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க பசுவதை கட்டளைச் சட்டம்

⭕ 1958 ஆம் ஆண்டு 29 ஆம் இலக்க விலங்குகள் சட்டம்

⭕ 252 ஆம் அத்தியாயத்தின் மாநகர சபைகள் கட்டளைச் சட்டம்

⭕ 255 ஆம் அத்தியாயத்தின் நகர சபைகள் கட்டளைச் சட்டம்

⭕ 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டம்

ஆகிய 05 சட்டங்களை திருத்தம் செய்வதற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இது உள்ளூர் விவசாயத் துறை மற்றும் உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டது.

Posted in Uncategorized

ஆப்கானில் போலியோ தடுப்பு மருந்து முகாம்களை நடத்த திட்டம்

ஆப்கானிஸ்தானில் நாடளாவிய ரீதியில் போலியோ தடுப்பு மருந்து முகாம்களை நடத்தவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

அடுத்த மாத ஆரம்பத்தில் இந்த முகாம் முன்னெடுக்கப்படவுள்ளதாக யுனிசெஃப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

போலியோ தடுப்பு மருந்து முகாமை நடத்துவதற்கு தலிபான்களின் முழு ஆதரவு உள்ளதாக யுனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெண் ஊழியர்கள் போலியோ தடுப்பு மருந்து முகாமில் பங்கெடுக்கவும் முகாமை நடத்துவதற்கு போதிய பாதுகாப்பு வழங்கவும் தலிபான்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக யுனிசெஃப் குறிப்பிட்டுள்ளது.

பல வருடங்களின் பின் முதல்தடவையாக ஆப்கானிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வட மாகாண ஆளுநர் – இரா. சம்பந்தன் சந்திப்பு

வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று (19) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்துள்ளார்.

வட மாகாணத்தில் மக்கள் எதிர்நோக்குகின்ற பல பிரச்சினைகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வினை காணும் வகையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக வட மாகாணத்தின் புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா இதன்போது உறுதியளித்துள்ளார்.

Posted in Uncategorized

தமிழர்களை அச்சுறுத்தி காணி அபகரிப்பு- இரவோடு இரவாக போடப்பட்ட வீதி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சவுக்கடி, புன்னைக்குடா, களுவன்கேணி பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களை அச்சுறுத்தி இரவோடு இரவாக சுமார் 10 கிலோமீட்டர் வீதி அமைக்கப்பட்டுள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக புன்னைக்குடா பிரதேசத்தில் உள்ள அரச தனியார் காணிகளை எந்த வித அனுமதியும் இன்றி இஸ்லாமிய அடிப்படைவாத குழுவைச் சேர்ந்த சிலர் கம்பி வேலிகள் கொண்டு அடைத்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நிறுத்துமாறு ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் ஏறாவூர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் அது தடுத்து நிறுத்தப்படவில்லை.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

அரபு நாடுகளில் இருந்து கோடிக்கணக்கான பணத்தைப் பெற்றுள்ள இஸ்லாமிய அடிப்படைவாத குழு ஒன்று தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளுக்கு போலி உறுதிகளை முடித்து அதனை ஆக்கிரமித்து இஸ்லாமிய அடிப்படைவாத பள்ளிகளை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளை இவ்வாறு அபகரித்து அவற்றை இரவோடு இரவாக அடைத்து குறித்த காணிகளுக்கு சுமார் 10 கிலோமீட்டர் வரையான வீதிகளையும் போட்டுள்ளனர்.

பிரதேச சபை மற்றும் அரச திணைக்களங்களில் எந்த வித அனுமதியும் பெறாமல் நடைபெறும் மேற்படி சட்டவிரோத வேலைத்திட்டங்களை உடன் நிறுத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட ஆணையாளர் கடிதம் மூலம் தெரியப்படுத்தியும் அதனை பொருட்படுத்தாமல் குறித்த பகுதியில் வீதிகளை நிறுவி வருகின்றனர்.

காணி மாபியாக்களின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்காக ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் சர்வானந்தன் நேரடியாக களவிஜயம் மேற்கொண்டு குறித்த பகுதியில் வீதி அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்த இரண்டு வாகனங்களை ஏறாவூர் காவல்துறையிடம் பிடித்து கொடுத்ததுடன் மேற்படி பிரதேசத்தில் நடைபெறும் சட்டவிரோத வீதி அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்துமாறு ஏறாவூர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

ஆனால் முறைப்பாடு செய்த மறுநாள் இரவோடு இரவாக இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களை சேர்ந்த காணி மாபியாக்கள் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு வீதிகளை அமைத்துள்ளதோடு பச்சை மரங்களை கொண்டு கம்பி வேலிகளையும் அமைத்துள்ளனர்.

இது குறித்து மீண்டும் ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் சர்வானந்தன் ஏறாவூர் காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதேவேளை குறித்த பகுதியில் உள்ள தமது காணிகளை அடைப்பதற்கு இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அப்பகுதியில் உள்ள தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவை நியமித்ததிலும் சதி? – மனோ

கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவை  நியமித்ததிலும் சதி உள்ளதோ தெரியாது என முன்னாள் அமைச்சரும் கொழும்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இரு தமிழர்களும் மோதி விரோத மனத்துடன் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் டக்ளஸ் தேவானந்தவிற்கு அழைப்பு விடுத்தார்களோ தெரியாது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,  எங்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் குரல் கொடுப்பேன். வடக்கு மீனவர்கள் பிரச்சனை என்பது பெரும் பிரச்சனை அவர்கள் ஏற்கனவே துன்பத்தை சந்தித்தவர்கள் யுத்தத்தை நாம் விரும்பவில்லை யுத்தத்தை செய்தவர்களிடம் தர்க்க ரீதியிலான கருத்து இருந்தது. வடக்கு மீனவர்களின் பிரச்சனைக்கு  உள்ள தடையை அகற்ற வேண்டும்.

இந்திய மீனவர்கள் 30 வருடகாலமாக இலங்கை கடல்வளத்தை பயன்படுத்துகின்றனர். இதனால் இந்தியாவில் தற்போது இலங்கை வளத்தை பயன்படுத்திய  ஓர் தலைமுறையே உருவாகி விட்டது. இந்தியாவில்கூட  மாநிலம் மாறி வேறு மாநிலத்தில் மீன்பிடிக்க முடியாத நிலையில் இலங்கை எல்லைக்குள் வருவதும்  பிரச்சினைக்குரிய விடயம்.

இதற்கு இலங்கை மீனவர்களிற்கு பாரிய கப்பல்களை வழங்கி ஊக்குவிக்க வேண்டும். கடற்றொழில் அமைச்சராக டக்ளசை நியமித்ததிலும் சதி உள்ளதோ தெரியாது.

இரு தமிழர்களும் மோதி விரோத மனத்துடன் வாழ டக்ளசிற்கு அழைப்பு விடுத்தார்களோ தெரியாது. இதனை வெறும் மீனவர்கள் பிரச்சனையாக மட்டும் அல்ல தமிழர்களின் பிரச்சனையாக பார்க்க வேண்டும் என அரசியல் தலைவர்களை கோர விரும்புகிறேன்” என்றார்.

“25 ஆம் திகதி கடமைக்கு திரும்ப ஆசிரியர்களும் அதிபர்களும் எடுத்த முடிவு மிகச் சரியானது”

ஆசிரியர் – அதிபர்கள் மற்றும் விவசாயிகளினதும் போராட்டமும் அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளும் நியாயமானது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

எனவே அவர்களால் முன்னெடுக்கப்படும் நியாயமான போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குவோம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், ஆசிரியர்களுக்கு எதிராக செயற்படுவதை பெற்றோர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ஆசிரியர்களுக்கு எதிராக கருத்துரைக்கும் ஆளும் தரப்பின் உறுப்பினர்களின் பிள்ளைகள் அரச பாடசாலைகளிலா தற்போது கல்வி கற்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும் என்றும் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

அத்தோடு எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கையை தொடங்க ஆசிரியர் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கங்கள் எடுத்த முடிவை அனைத்து மக்களும் பாராட்ட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.