சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் தமிழ் தேசிய வீரர்கள் தின நினைவேந்தல் அனுஷ்டிப்பு

26.07.2026 சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் அமைந்துள்ள டூபென்டார்ஃப் (Dübendorf) பகுதியில், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) சுவிஸ் கிளையின் ஏற்பாட்டில் நினைவேந்தல் மற்றும் அஞ்சலி நிகழ்வு அமைதியான முறையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மறைந்த தலைவர்கள் தங்கதுரை, குட்டிமணி, ஜெகன், தேவன், நடேசுதாசன், குமார், குமாரகுலசிங்கம் ஆகியோருக்கும், 1983 ஜூலை 25 மற்றும் 27 ஆகிய நாட்களில் வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட 53 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மௌன அஞ்சலி செலுத்தி, தமிழர் விடுதலைப் போராட்டத்தில் தமது உயிர்களை அர்ப்பணித்தவர்களின் தியாகத்தையும் நினைவுகூர்ந்தனர். அவர்களின் இலட்சியங்களும் தியாகங்களும் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.

இந்நினைவேந்தல் நிகழ்வை ரெலோ சுவிஸ் நிர்வாகக் குழு ஒழுங்காகவும் அமைதியான முறையிலும் முன்னெடுத்து நடத்தி நிறைவு செய்தது.

“தியாகிகளை நினைவுகூர்வோம் – வரலாற்றை மறவோம்.”