அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசியமற்ற சத்திரசிகிச்சைகளை தாமதப்படுத்த தீர்மானம்!

அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற சத்திரசிகிச்சைகளை தாமதப்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அத்தியாவசிய மற்றும் அவசர சத்திரசிகிச்சைகள் வழமை போன்று மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மருந்துகள் மற்றும் உபகரணங்கள் தட்டுப்பாடு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அவசர சத்திரசிகிச்சைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் வைத்தியசாலைகளில் அவசரமற்ற சத்திரசிகிச்சைகளை தாமதப்படுத்துமாறும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.