ஆயுதப் போராட்டத்தை ஏன் கைவிட்டோம் என வருந்துகின்றோம்; ஜனா எம்.பியின் மணிவிழாவில் செல்வம் எம்.பி தெரிவிப்பு

ஆயுதப்போராட்டத்தினை முன்னெடுத்த நாங்கள் இன்று ஏன் அதனை கைவிட்டோம் என எண்ணி வருந்துவதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று(02) இடம்பெற்ற “ஜனாவின் வாக்குமூலம்” என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் எங்கு பாத்தாலும் புத்த பிக்குகளின் நாட்டாமைத்தனத்தையும், முப்படைகள் தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் அடாவடித்தனத்தையும் காணக்கூடியதாக உள்ளது.

இதனையெல்லாம் பார்க்கும் போது ஏன் ஆயுதப் போராட்டத்தினைக் கைவிட்டோம் என வருத்தமாக உள்ளது. மீண்டும் ஆயுதப் போராட்டத்தினை ஆரம்பித்தால் என்ன? என்ற எண்ணமும் தோன்றுகின்றது எனவும் தெரிவித்தார்.