இலங்கைக்கு கடன் வழங்க IMF நிறைவேற்று சபை அனுமதி

இலங்கைக்கு இரண்டு தசம் ஒன்பது பில்லியன் டொலர் கடனுதவி வழங்குவதற்கு சர்தேச நாணய நிதியத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபையானது இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் (EFF) இலங்கையின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இது இலங்கைக்கு 7 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியுதவியை அணுக உதவுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வொசிங்டனில் இன்று கூடிய சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

இது குறித்து நாளை (21) உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இதேவேளை இந்த விடயம் சம்பந்தமாக விசேட அறிவிப்பு ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் வெளியிட உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.