உலகின் செல்வாக்குமிக்க நூறு பெண்களின் பட்டியலில் சந்தியா எக்னெலிகொட

2022ஆம் ஆண்டுக்கான உலகின் செல்வாக்குமிக்க நூறு பெண்களின் பட்டியலில் இலங்கையின் மனித உரிமை ஆர்வலர் சந்தியா எக்னெலிகொடவும் இடம்பெற்றுள்ளார். இலங்கை அரசை கடுமையாக விமர்சித்த பத்திரிகையாளரான சந்தியாவின் கணவா் பிரகீத் எக்னெலிகொட 2010 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தாா். தன் கணவருக்காக நீதி கோரி போராடி வரும் சந்தியா, தன் கணவரை போலவே காணாமல் ஆக்கப்பட்ட மற்றவர்கள் சார்பிலும் குரல் கொடுத்து வருகின்றாா்.

உலகின் செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலில் நடிகை பிரியங்கா சோப்ரா, விண்வெளி பொறியாளர ஸ்ரீஷா பண்ட்லா, உள்ளிட்ட 4 இந்திய பெண்கள் இடம்பெற்றுள்ளiமை குறிப்பிடத்தக்கது.