எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை பொதுஜன பெரமுனவின் நிறைவேற்றுக்குழுவே தீர்மானிக்க வேண்டும் – பசில் ராஜபக்ச

எந்த தேர்தல் முதலில் நடைபெற வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள் என முன்னாள் நிதியமைச்சர் பசில்ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நிறைவேற்றுக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்துங்கள் என என்னுடைய தனிப்பட்ட கருத்தினையே நான் ஜனாதிபதியிடம் தெரிவித்தேன் என பசில்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கட்சி இது குறித்து கலந்தாராய்ந்து தீர்மானத்தை எடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையில் பசில் ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலே முதலில் இடம்பெறவேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து என பசில் ராஜபக்ச தெரிவித்தார் என கட்சியின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை முதலில் நடத்தவேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து அவர் அது தனது தனிப்பட்ட கருத்து கட்சியின் கருத்து என்பதை ஜனாதிபதியிடமும் தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள சாகரகாரியவசம் கட்சி இது குறித்து மேலும் ஆராய்ந்து தீர்மானிக்கலாம் எனவும் பசில்ராஜபக்ச தெரிவித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.