‘கோ ஹோம் கோட்டா’ போராட்டத்திற்கு 50 நாள்: இன்று கொழும்பில் பேரணி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் 50 நாட்கள் ஆகின்றன.

இதனையொட்டி இன்றைய தினம் கொழும்பில் பேரணியை நடத்துவதற்கு அரச எதிர்ப்பு குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த கோட்டை பொலிஸார், நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுக்கொண்டுள்ளனர்.

இன்று ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளவர்கள், கொள்ளுபிட்டி சந்தி முதல் கோட்டை நீதிவான் நீதிமன்ற அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் எவ்வித சேதத்தையும் விளைவிக்க கூடாது என கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எவ்வாறாயினும் திட்டமிட்டவாறு இன்று பிற்பகல் பேரணியை நடத்துவோம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.